பராமரிப்பு பணி காரணமாக இன்று 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. உள்கட்டமைப்பு பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு காரணமாக இன்று புறப்படவிருந்த 200க்கும் மேற்பட்ட ரயில்கள் ரத்து செய்யப்பட்டதாக இந்திய ரயில்வே அறிவித்துள்ளது. ரயில்வே துறையின் அறிவிப்பின்படி, 150 ரயில்கள் முழுமையாகவும், 55 ரயில்கள் பகுதியளவிலும் ரத்து செய்யப்பட்டுள்ளன. உங்கள் ரயில் ரத்து செய்யப்பட்டதா என்பதைச் சரிபார்க்க முதலில் indianrail.gov.in/mntes என்ற இணையதளத்தை பார்வையிடவும். பின்னர் […]

ஒரு நாளில் ஒருமணி நேரத்தில் 4 பாலியல் சீண்டல் நடக்கும் நாட்டில் மாணவி ஒருவர் பாலியல் துன்புறுத்தலில் இருந்து தப்ப கீழே இறங்க முயன்றபோது இந்த சம்பவம் அரங்கேறி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் தானே பகுதியில்தான் இந்த கொடூர நிகழ்வு நடந்துள்ளது. பள்ளி முடிந்தபின்னர் வீட்டுக்கு செல்ல மாணவி ஒருவர் ஆட்டோவில் ஏறி உள்ளார்.அந்த ஆட்டோ ஓட்டுனர் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதால் இந்த விவகாரத்தில் இருவருக்கும் இடையே தகராறு மூண்டுள்ளது. […]

நாளை நடைபெற உள்ள கட்சித் தேர்தலில் கர்நாடகாவில் இருந்து காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி வாக்களிக்கின்றார். காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும் , எம்பியுமான ராகுல்காந்தி கட்சியின் பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் நடைபயணம் மேற்கொண்டு வருகின்றார். இந்நிலையில் நாளை காங்கிரஸ் கட்சித் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான வாக்குப் பதிவு நடைபெறுகின்றது. நடைபயணத்தை மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி கர்நாடக மாநிலம் பெல்லாரியில் வாக்களிப்பார் என்று செய்தி தொடர்பாளர் ஜெய்ராம் ரமேஷ் […]

மாநில மொழிகளை அழிக்க மத்திய அரசு முயன்று வருகின்றது என்று கர்நாடகாவின் முன்னாள் முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். பெங்களூருவில் செய்தியாளர்களிடம் பேசுகையில ’’ மொழி விவகாரத்தில் நமக்கு ஏதேனும் பிரச்சனை ஏற்பட்டால் , கன்னட அமைப்புகள் , பிற சங்கங்களுடன் சேர்ந்து ஜனதாதளம் கட்சி கடுமையாக போராடும் என அவர் கூறினார். காங்கிரஸ் , பா.ஜ. ஆகிய 2 தேசிய கட்சிகளும் மாநிலத்திற்கு எதிராக உள்ளனர்.மத்திய அரசு இந்தி திணிப்பை […]

சென்னை – பெங்களூரு இடையே வந்தே பாரத் ரயில் அடுத்த மாதம் சேவை தொடங்க உள்ளது என அறிவிப்புகள் வெளியாகி உள்ளது. நாட்டிலேயே அதி வேகத்தில் செல்லும் வந்தே பாரத் ரயில் சென்னை ஐ.சி.எப். உள்ளிட்ட முக்கிய நகரங்களில் தயாரிக்கப்படுகின்றது. 160 கி.மீ. வேகத்தில் இயங்கக் கூடிய இந்த ரயில் 52 விநாடிகளில் 100 கி.மீ வேகத்தை உடனடியாக அடைந்துவிடுகின்றது.இந்த ரயில் பல்வேறு வசதிகள் உள்ளன. ஏற்கனவே புது டெல்லி-வாரணாசி […]

ஹரியானாவில் ‘பிட் புல்’ இனத்தை சேர்ந்த நாய் ஒன்று  பெண் மற்றும் குழந்தைகளை கடித்துக் குதறிய சம்பவம் நடந்துள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் லக்னோவில் ஏற்கனவே 82 வயது மதிக்கத்தக்க பெண்ணை பிட்புல் நாய் கடித்து குதறியது. இந்நிலையில் 3 மாதங்களில் மற்றொரு சம்பவம் அரங்கேறியுள்ளது. அதே போல கான்பூரில் பசுமாட்டை கடித்து விடாப்படியாக பிடித்துக் கொண்ட வீடியோ  பகீர் அளித்தது. இதே போல ஹரியானாவின் சேவாரி மாவட்டத்தில் பாலியர் குர்த் […]

ஒடிசாவில் இளைஞர் மிரட்டலுக்கு பயந்து 11ஆம் வகுப்பு மாணவி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒடிசா மாநிலம் குத்ரா மாவட்டத்தின் பத்மாபூரில் உள்ள தனது வீட்டில் 11ஆம் வகுப்பு மாணவி ஒருவர் நேற்றிரவு விஷம் குடித்துள்ளார். இதனைப் பார்த்த பெற்றோர் அந்த மாணவியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். ஆனால், அவர் செல்லும் வழியிலே பரிதாபமாக உயிரிழந்தார். மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன் […]

ஹரியானா மாநிலத்தை சேர்ந்த பெண்ணை காதலித்து பாலியல் பலாத்காரம் செய்த தடயவியல் ஆய்வக அதிகாரி மீது வெர்னா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் வசிக்கும் வேத் பிரகாஷ் சோனி என்பவர், கோவா மாநிலம் வெர்னாவில் உள்ள தடயவியல் ஆய்வகத்தில் அறிவியல் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவர் ஹரியானாவை சேர்ந்த 31 வயது பெண்ணுடன் பேஸ்புக்கில் அறிமுகம் ஆகியுள்ளார். இருவரும் பேஸ்புக் […]

டெங்குவுக்கு கடந்த சில ஆண்டுகளாக டெங்கு பாதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இறப்புகள் , பாதிப்புகள் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் , மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது. மேலும் , உத்தரபிரதேசம் , பஞ்சாப்  மற்றும் ராஜஸ்தான் […]

புதுச்சேரியில் தாய் கண்டித்ததால் 12 வயது பள்ளி மாணவி நெயில் பாலிஷ் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் அபிஷேகபாக்கம் பகுதியைச் சேர்ந்தவர் கனிமொழி (32). இவரது கணவர் பிரணவ். கணவரை பிரிந்து வாழ்ந்து வரும் இவர், தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். 3 பெண் குழந்தைகள் உள்ள நிலையில், மூவரும் அபிஷேகப்பாக்கம் அரசு பள்ளியில் பயின்று வருகின்றனர். இந்நிலையில், கனிமொழியின் […]