காசியாபாத்தில் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் செய்வதை கண்ட மனைவி, கணவனை புரட்டி எடுத்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலாகி வருகிறது. கணவருடன் ஏற்பட்ட சண்டையின் காரணமாக மனைவி தனது பெற்றோருடன் வசித்து வந்துள்ளார். இந்நிலையில், கர்வா சவுத் பண்டிகையின்போது காசியாபாத்திற்கு தனது தாயுடன் ஷாப்பிங் செய்ய வந்த மனைவி, தனது கணவர் வேறொரு பெண்ணுடன் ஷாப்பிங் செய்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து கணவரை புரட்டி எடுக்கும் வீடியோ […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,678 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 10 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,005 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இந்தியாவில் ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என தொலைத்தொடர்பு துறையும், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் மொபைல் போன் நிறுவனங்களிடம் தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கடந்த புதன்கிழமை அன்று செல்போன் உற்பத்தியாளர்களுடனான சந்திப்பின்போது, ரூ.10,000-க்கு மேல் விலையுள்ள 4ஜி போன்களை விற்பனை செய்ய வேண்டாம் என்றும் முற்றிலும் 5ஜி விற்பனைக்கு மாற வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அமைச்சக அதிகாரிகள், அடுத்த […]
கேரளாவில் தமிழகத்தை சேர்ந்த பெண் உட்பட இரண்டு பெண்களை நரபலி கொடுத்த வழக்கில் விவகாரத்தில் மந்திரவாதி ஷபி, பகவல் சிங் – லைலா தம்பதி கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். கேரளாவை உலுக்கியுள்ள இந்த வழக்கின் விசாரணையில் நெஞ்சை உலுக்கும் புதுப்புது தகவல்கள் வெளிவந்து கொண்டே இருக்கின்றன. கேரள மாநிலம் பத்தனம்திட்டா திருவல்லாவைச் சேர்ந்தவர் பகவல் சிங். இவரது மனைவி தான் லைலா. லைலாவின் முதல் கணவர் இறந்த பிறகு […]
ஆந்திர மாநிலம் திருப்பதி –காணிப்பாக்கம் இடையே இயக்கப்படும் மின்சார பேருந்துக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. ஆந்திர மாநில போக்குவரத்து கழகத்தில் 5 ஆண்டுகளாக பேருந்துகளில் டீசல் எஞ்சினை மாற்றி முழு மின்சார பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. இதில் முதல் கட்டமாக திருப்பதி – காணிப்பாக்கம் இடையே பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது. இதற்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த பணியில் கர்நாடக மாநிலம் , பெங்களூருசை் சேர்ந்த ’வீரவாகனா ’ […]
ஸ்பைஸ் ஜெட் விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறு ஏற்பட்டதால் திடீரென புகை சூழ்ந்தது இதனால் ஐதராபாத்தில் தயைிறக்கப்பட்டது. கோவாவில் இருந்து 86 பயணிகளுடன் புறப்பட்ட ஸ்பைஸ்ஜெட் விமானம் திடீரென புகை மூட்டம் சூழ்ந்தது. விமானத்தில் ஏற்பட்ட திடீர் கோளாறால் புகை மண்டலமானது. இதையடுத்து விமானத்தின் காக்பிட் இதை கண்டறிந்து சமிக்ஞை அனுப்பியது எனவே ஐதராபாத் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது. எனினும் பயணிகள் பீதியடைந்தனர். அனைவரும் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டதாக அதிகாரிகள் […]
ராணுவத்தில் பல்வேறு காரணங்களால் குறிப்பிட்ட சில துறைகளில் எலக்ட்ரிக் வாகனங்கள் பயன்படுத்தப்பட உள்ளது. ராணுவத்தில் நீண்ட தொலைவில் உள்ள பணிகள் , ராணுவத்தில் உள்ள பணிகள் போன்றவற்றின் தனித்துவ செயல்பாடுகளுக்கு எலக்ட்ரிக் வாகனங்கள் அறிமுகப்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது. எரிபொருள் வெளியேற்றத்தை குறைக்கும் வகையில் 3 வித வாகனங்கள் ராணுவத்தில் ஈடுபடுத்தப்படும். மோட்டார் சைக்கில் , இலகுரக வாகனங்கள் , பேருந்துகள் வாங்க உள்ளதாக ராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். குறிப்பிட்ட பிரிவுகளில் […]
ஜம்முகாஷ்மீரில் பயங்கர வாதிகளுடன் தாக்குதலில் ஈடுபட்ட நாய் என்கவுன்டரில் உயிரிழந்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜம்மு – காஷ்மீர் அனந்த்நாக் மாவட்டத்தில் திங்கள் கிழமை பயங்கரவாதிகளுடன் ராணுவ நாயான ஜும் தாக்குதலில் ஈடுபட்டது. தாக்குதலின் போது இரண்டு பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். இரண்டு பாதுகாப்பு படையினர் இந்த சம்பவத்தில் காயம் அடைந்தனர். காயம் அடைந்த ஜூம் ஸ்ரீநகரில் உள்ள ராணுவ மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தது. இந்நிலையில் இன்று சிகிச்சை […]
ஆந்திராவில் வரலாறு காணாத வெள்ளம் பெருக்கெடுத்துள்ளதால் மக்கள் கடும் அவதிக்குள்ளானார்கள். ஆந்திர மாநிலம் அனந்தபூர் மாவட்டத்தில் நேற்று முன்தினம் முதல் கனமழை பெய்து வகின்றது. இதனால் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. ஏரி , குளம் , குட்டை என அனைத்தும் நிரம்பி வழிகின்றது. வீடுகளில் வெள்ள நீர் சூழ்ந்ததால் மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். சாலையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில் போர்பந்தா பகுதியில் சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றவர் சைக்கிளுடன் […]
சிறையிலிருந்து தப்பிச்சென்ற கைதியை பிடிக்க முயன்றபோது, நடந்த கலவரத்தில் பெண் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்டார். உத்தரப்பிரதேச மாநிலம் மொராதாபாத் போலீஸாருக்கு, ஒரு கைதி சிறையிலிருந்து தப்பித்து உத்தரகாண்ட் மாநிலம், உத்தம் சிங் நகர் மாவட்டத்தின் பரத்பூர் கிராமத்துக்குள் நுழைந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, மொராதாபாத் போலீசார் அந்தக் கைதியைப் பிடித்துத் தருபவருக்கு ரூ.50,000 சன்மானம் தருவதாக அறிவித்தனர். மேலும், கைதியைத் தேடி பரத்பூர் கிராமத்துக்குள் போலீசார் நுழைந்தனர். ஆனால், போலீசார் […]