பிறர் புண்படும்படியான கருத்துக்களை சமூக வலைத்தலங்களில் பதிவு செய்தால் தகவல் தொழில்நுட்ப சட்டத்தின் கீழ் வழக்குத் தொடர முடியாதுஎன்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. தகவல் தொழில்நுட்ப சட்டம் 2015ம் ஆண்டு ரத்து செய்யப்பட்டது. 2000ன் பிரிவு 66 ஏன் படி எந்த குடிமகன் மீதும வழக்குத் தொடர முடியாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. ரத்து செய்யப்பட்ட பிரிவின் கீழ் ஆட்சேபகரமான சில தகவல்களை சமூக வலைத்தலங்களில் பதிவு செய்தாலோ , பிறர் […]

கல்வி நிலையங்களில் ஹிஜாப் அணியக்கூடாது என்ற கர்நாடக உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்ற இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கியிருக்கிறது. கர்நாடக நீதிமன்ற தீர்ப்பு… ஹிஜாப் அணிந்து வருவது என்பது இஸ்லாமிய மதத்தில் அடிப்படையான விஷயம் அல்ல என்றும் சீருடை விவகாரத்தில் சில குறிப்பிட்ட கட்டுப்பாடுகளை விதிப்பது என்பது அடிப்படை உரிமைகளை பறிக்கும் செயல் கிடையாது எனவும் சீருடை விவகாரங்களில் உரிய அறிவுறுத்தல்களை வழங்க மாநில அரசுகளுக்கு அதிகாரம் […]

கேரள மாநிலம் பத்தனம் திட்டா மாவட்டத்தில் கடந்த 5 ஆண்டுகளில் காணாமல் போன 12 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்டனரா என போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர். கேரள மாநிலத்தில் தருமபுரியை சேர்ந்தவர் உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தருமபுரியைச் சேர்ந்த பத்மா உள்பட 2 பெண்கள் நரபலி கொடுக்கப்பட்ட எலந்தூர் சுற்றுவட்டாரத்தில் மட்டும் 3 பெண்கள் காணாமல் போயுள்ளனர். 5 ஆண்டுகளில் கொச்சி […]

திருமணமான இளம்பெண்ணை கடத்தி, அறையில் அடைத்து வைத்து நாள் முழுவதும் பாலியல் பலாத்காரம் செய்து வந்த காமக்கொடூரனை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர். நாடு முழுவதும் பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதைத் தடுக்க அரசும் காவல்துறையும் எத்தனையோ நடவடிக்கை எடுத்தும் குற்றங்கள் குறைந்தபாடில்லை. ஒவ்வொரு நாளும் பல இடங்களில் பெண்கள் துன்புறுத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது. பெண்கள் தனியாக அகப்படும் நேரங்களில் அவர்கள் பாலியல் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 2,786 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 12 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

வீட்டிற்கு கோபி மஞ்சூரியன் வாங்கி வந்தது பிடிக்காமல், திட்டிய பாட்டியை மகள், பேரன் உள்பட 3 பேர் கொலை செய்த சம்பவத்தில் 6 ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டனர். கர்நாடக மாநிலம் பெங்களூரு நகரில் உள்ள கேங்கிரி சாட்டிலைட் டவுனில் வசித்து வந்தவர் சசிலேகா (50). இவருக்கு சஞ்சய் வாசுதேவ் ராவ் என்ற 27 வயது மகன் உள்ளார். சசிலேகாவின் கணவர் உயிருடன் இல்லாத நிலையில், சசிலேகாவின் தாயான 70 […]

சர்ச்சையில் சிக்கிய மெய்டன் நிறுவனத்தின் இருமல் மருந்துகள் உற்பத்தி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக ஹரியானா மாநில சுகாதாரத்துறை அமைச்சர் அனில் விஜி தெரிவித்துள்ளார். இந்தியாவில் மெய்டன் பார்மசூட்டிக்கல்ஸ் நிறுவனம் தயாரித்து ஏற்றுமதி செய்த இருமல் மருந்துகளை உட்கொண்டதால் காம்பியா நாட்டில் குழந்தைகள் உயிரிழந்ததாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. இதையடுத்து, சோனிபட் நகரில் மெய்டன் பார்மாவுக்கு சொந்தமான ஆலையில் ஆய்வு நடத்திய பின் இருமல் மருந்துகள் உற்பத்தியை நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. மேற்குறிப்பிட்ட […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ரயில்வே துறை ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்திய போக்குவரத்து இணைப்பில் முன்னணி துறையாக ரயில்வே துறை செயல்பட்டு வருகிறது. இதில், 11 லட்சத்திற்கும் அதிகமானோர் பணியாற்றி வருகின்றனர். அத்துடன் ரயில்வே துறையை நாள்தோறும் கோடிக்கணக்கான பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, ரயில்வே பணியாளர்களுக்கு போனஸ் வழங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. மத்தியில் பாஜக ஆட்சியமைத்த பின்னர் கடந்த 8 ஆண்டுகளாக தொடர்ந்து […]

டெல்லியில் அரசு ஊழியர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தி அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது. தீபாவளிக்கு முன்னதாக, டெல்லி அரசு தொழிலாளர்களின் குறைந்தபட்ச ஊதியத்தை உயர்த்தியுள்ளது. துணை முதல்வர் மணீஷ் சிசோடியா இது பணவீக்கத்தில் இருந்து அவர்களுக்கு ஓய்வு அளிக்கும் என்று கூறினார். திருத்தியமைக்கப்பட்ட மாத ஊதியம் அக்டோபர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வரும்.மாநில மற்றும் மத்திய அரசு ஊழியர்களுக்கு வழக்கமாக வழங்கப்படும் அகவிலைப்படியின் பலன்களை அமைப்புசாரா துறையில் குறைந்தபட்ச ஊதியத்தில் […]

பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்களுக்கு மத்திய அரசு ரூ.22000 கோடி நிவாரணமாக வழங்கியுள்ளது. பொதுமக்களுக்கு தங்கள் பட்ஜெட்டில் மிகப்பெரிய செலவான சிலிண்டர் விலையை மத்திய அரசு குறைத்திருந்தது. 2020 முதல் 2022 வரை குறைத்து விற்பனை செய்ததால் பொதுத்துறை எண்ணெய் சந்தைப்படுத்தும் நிறுவனங்கள இழப்பை சந்தித்தன. எனவே மாநிலத்தில் செயல்படும் 3 குறிப்பிட்ட நிறுவனங்களுக்கு மட்டும் நிவாரணம் வழங்கியுள்ளது. இதற்கான ஒப்புதலை மத்திய அமைச்சரவைக்குழு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியன் எண்ணெய் […]