இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 1,957 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 08 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 3,884 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
”முன்னாள் அமைச்சரும், கேரள சட்டசபையில் முக்கிய நபராக இருந்தவருமான ஒருவர் என்னை உல்லாசத்திற்கு வருமாறு பலமுறை அழைத்துள்ளார்” என்று சொப்னா பரபரப்பை கிளப்பியுள்ளார். திருவனந்தபுரம் தங்க கடத்தல் வழக்கில், முக்கிய புள்ளியாக கருதப்படுபவர் சொப்னா. இந்த கடத்தல் தொடர்பாக சுங்க இலாகா, என்ஐஏ, மத்திய அமலாக்கத்துறை ஆகிய விசாரணை அமைப்புகள் விசாரணை நடத்தியது. சொப்னா விவகாரம் கடந்த சில மாதமாக ஓய்ந்திருந்த நிலையில், தற்போது அவர் எழுதி உள்ள சுயசரிதை, […]
லிப்ட் கேட்ட கல்லூரி மாணவியை காருக்குள் வைத்து பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்புரின் ஜெய்சிங்பூர் பகுதியில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று இயங்கி வருகிறது. இந்த கல்லூரியில் படிக்கும் 23 வயதான மாணவி ஒருவர் பி.டெக் படித்து வருகிறார். இந்நிலையில், கடந்த வெள்ளிக்கிழமை (அக்டோபர் 7) அன்று மாலை கல்லூரி வகுப்பை முடித்து விட்டு மாணவி வீடு திரும்பியுள்ளார். அப்போது, சாலையில் சென்று […]
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு புதுச்சேரி மாநில அரசு ஊழியர்களுக்கு போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு ஊழியர்களுக்கான போனஸ் குறித்து மத்திய நிதி அமைச்சகத்தின் செலவினங்கள் துறை அரசாணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், மத்திய அரசு ஊழியர்களுக்கு, கடந்த நிதி ஆண்டுக்கான இடைக்கால போனஸ் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 31ஆம் தேதி இப்படி, பணியில் இருந்தவர்கள் கடந்த நிதி ஆண்டில் குறைந்தபட்சம் 6 மாதங்கள் தொடர்ந்து […]
பெங்களூருவில் ஓட்டுனரின் அஜாக்கிரதையால் பேருந்து சக்கரத்தில் மாணவி சிக்கியதை அடுத்து சக மாணவர்கள் கொதித்தெழுந்து போராட்டம் நடத்தினர். பெங்களூருவில் ஞானபாரதி கல்லூரி அருகே பேருந்து நிறுத்தம் உள்ளது. அந்த வழியாக பேருந்தில் வந்த கல்லூரி மாணவி ஷில்பா(23) கீழே இறங்கியுள்ளார். அப்போது பேருந்து திடீரென இயக்கப்பட்டதால் கீழே விழுந்த அவர் சக்கரத்தில் சிக்கினார். உடனடியாக பேருந்து நிறுத்தப்பட்டு சக மாணவர்கள் மாணவியை ஆட்டோ மூலம் அழைத்துச் சென்றனர். இதனிடையே பேருந்தை […]
பார்வையற்ற மாற்றுத்திறனாளிகளும் துணை விரிவுரையாளராவதற்குண்டான தேர்வை எழுதி விரிவுரையாளராகலாம் என சத்தீஸ்கர் உயிர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பளித்துள்ளது. போஜோகுமாரி படேல் என்ற 26 வயதே நிரம்பிய பார்வையற்ற மாற்றுத்திறனாளி இளம்பெண் துணை விரிவுரையாளருக்கு விண்ணப்பித்திருந்தார். அனைத்து தகுதிகளும் இருந்த நிலையில் பார்வை இல்லாததால் இவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து சத்தீஸ்கர் மாநிலத்தில் உள்ள உயர்நீதிமன்றத்தில் எதிர்த்து மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை நீதிபதி நரேந்திகுமார் வியாஸ் என்பவர் விசாரித்தார். பி.எஸ்.சி. எனப்படும் […]
கேரள மாநிலம் காசர்கோடு பகுதியில் கோவில் அமைந்துள்ள குளத்தில் , அன்னபிரசாதம் மட்டுமே உண்டு வாழ்ந்து வந்த முதலை உயிரிழந்ததால் அப்பகுதி மக்கள் சோகம் அடைந்தனர். காசர்கோடு கோவிலில் அனந்த பத்மநாப ஸ்வாமி கோவிலில் உள்ள குளத்தில் 75 வயது மதிக்கத்தக்க முதலை வாழ்ந்து வந்தது. ’பாபியா ’ என்ற பெயரில் அழைக்கப்பட்டு வந்தது. இந்த முதலை இதுவரை அசைவ உணவுகளே சாப்பிட்டது கிடையாதாம். கோவிலில் வழங்கப்படும் அன்னபிரசாதம் மட்டுமே […]
பெங்களூருவில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு போடப்பட்ட சாலைகள் திடீர் குகைகளாக காட்சியளிப்பதால் வாகன ஓட்டிகள் புலம்பித்தள்ளுகின்றனர். பெங்களூருவில் புதிய குண்டலஹள்ளியில் அண்டர்பாஸ் சாலைகள் கடந்த 4 மாதங்களுக்கு முன்புதான் புதியதாக போடப்பட்டுள்ளது. இந்நிலையில் ஆங்காங்கே பெயர்ந்த நிலையில் குகைகள் போல பெரிய பெரிய ஓட்டைகளுடன் காட்சி அளிக்கின்றது. இது வாகன ஓட்டிகளுக்கு பெரிதும் அச்சுறுத்தலாக உள்ளது. சுமார் ரூ.19.45 கோடியில் பெங்களூரு மாநகர பலிக்கே புதுப்பித்தது. ஆனால் அதன் […]
திருமணம் செய்து கொள்ளுமாறு தொல்லை கொடுத்த காதலியை, கொலை செய்து வீட்டிலேயே புதைத்துவிட்டு குடும்பத்துடன் தப்பிச்சென்ற காதலனை காவல்துறையினர் கைது செய்தனர். உத்தரப்பிரதேச மாநிலம் கிதாவுத் கிராமத்தைச் சேர்ந்தவர் குஷ்பு. இளம் பெண்ணான இவர் கடந்த 2020ஆம் ஆண்டு நவம்பர் 7ஆம் தேதியிலிருந்து மாயமாகியுள்ளார். அப்போது, அவரது தந்தை பிக்ராம் சிங் என்பவர் தனது மகளை காணவில்லை என காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை செய்தபோது […]
மாந்திரீகவாதி என அறிமுகப்படுத்திக் கொண்ட ஒருவர், 25 வயது இளம்பெண்ணை கடத்திச் சென்று கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் மாவட்டத்தை சேர்ந்த 25 வயது பெண்ணுக்கு திருமணமாகி கணவர் மற்றும் ஒரு குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இதற்கிடையே, அந்த குடும்பத்திற்கு சஞ்சய் சர்மா என்பவர் மாந்திரீகவாதி எனக்கூறி அறிமுகமாகி உள்ளார். பிறகு அந்த குடும்பத்திற்கு சில மாந்திரீக நடவடிக்கைகளையும் செய்துள்ளார். இந்நிலையில், […]