சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரும் உத்தரபிரதேச மாநிலத்தின் முன்னாள் முதலமைச்சருமான முலாயம்சிங் யாதவ் காலமானார். 82 வயதான அவர் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதனால் ஹரியானாவில் உள்ள குருகிராம் மேதாந்தா தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டனர். அவர் தீவிர சிகிச்சை கண்காணிப்பில் இருந்து வந்தார். கடந்த 2 நாட்களாகவே அவரது உடல் நிலை மிகவும் மோசமாக இருந்து வந்தது. […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஜெய்ப்பூரில் 108 வயது மூதாட்டி ஒருவரின் வெள்ளி மோதிரங்களைத் திருட கொள்ளையர்கள் அவரது கால்களை வெட்டிச் சென்ற கொடூர சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் அருகே 108 வயது மூதாட்டி ஒருவர் உடல்நலம் குன்றிய நிலையில், வசித்து வந்தார். இந்நிலையில், அந்த மூதாட்டியின் கால், கொள்ளையர்களால் வெட்டப்பட்டுள்ளது. இந்த கொடூர சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட மூதாட்டியின் மகள் கூறுகையில், ”மூதாட்டி காலில் அணிந்திருந்த வெள்ளி நகைகளை திருடுவதற்காக, […]
உத்தரபிரதேச மாநிலத்தில் நேற்று பெய்த அதிகன மழைக்கு 9 பேர் ஒரே நாளில் உயிரிழந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவின் பல பகுதிகளில் கனமழைபெய்து வருகின்றது.உத்தரபிரதேச மாநிலத்தில் கடந்த 24 மணி நேரத்தில் கொட்டித் தீர்த்த கனமழையால் 9 பேர் வெவ்வேறு சம்பவங்களில் ஒரே நாளில் உயிரிழந்ததாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது. டெல்லியில் பெய்த கனமழையால் நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் சூழ்ந்தது இதனால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. மூன்றாவது நாளாக […]
அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவியை உள்ளூர் ரவுடிகள் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படும் நிலையில், ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான சிறுமிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ராஜஸ்தான் மாநிலம் ஜம்தோலி பகுதியில் அரசு விடுதியில் தங்கியுள்ள மாணவி ஒருவரை உள்ளூர் ரவுடிகள் சிலர் பாலியல் வன்கொடுமை செய்ததாகக் கூறப்படுகிறது. இதனை கண்டித்து ஜெய்ப்பூர்-ஆக்ரா நெடுஞ்சாலையை மறித்து நூற்றுக்கணக்கான மாணவிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர். ஜெய்ப்பூரில் பெய்த கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் […]
உத்தரப்பிரதேச மாநிலத்தில் இடி, மின்னல் உள்ளிட்ட காரணங்களால் 3 நாட்களில் 23 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாட்டில் பல்வேறு மாநிலங்களில் அண்மைக்காலமாகத் தொடர் மழை பெய்து வருகிறது. மழை தொடர்பான விபத்துகளில் அக்டோபர் 6 முதல் 8 வரை மட்டும் உத்தரப்பிரதேசத்தில் 23 பேர் உயிரிழந்துள்ளனர். இவர்களில் 9 பேர் மின்னல் தாக்கி உயிரிழந்துள்ளனர். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க முதல்வர் யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். […]
TVS நிறுவனத்தில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விருப்பம் உள்ளவர்கள் தங்களது விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்பலாம். இந்த Planning பணிகளுக்கு என பல்வேறு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளது. பணிக்கு விண்ணப்பிப்போர் தகுதி மற்றும் நேர்காணல் அடிப்படையில் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையத்தில் டிகிரி முடித்தவர்கள் விண்ணப்பிக்க வேண்டும். பணிக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் குறைந்தபட்சம் 6 வருடம் […]
குஜராத்தின் மெக்சானா மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் முதல் சூரிய சக்தி கிராமத்தை பிரதமர் நரேந்திரமோடி தொடங்கி வைத்தார். மெக்சானா மாவட்டத்தில் மெதேரா என்ற கிராமம் உள்ளது. 1026-27ல் சாளுக்கிய மரபைச் சேர்ந்த மன்னரால் புகழ்பெற்ற சூரிய கோயில் கட்டப்பட்டது. இக்கிராமத்தில் 1000க்கும் மேற்பட்ட வீடுகளில் சூரிய ஆற்றலை மின்னாற்றலாக மாற்றும் சோலார் பேனர்கள் இலவசமாக தற்போது பொருத்தப்பட்டுள்ளது. இந்தியாவில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை அதிகரிக்க மோடியின் தொலைநோக்குப் பார்வையின் […]
வாயில் கம்பியை சொருகி கொடூரமான முறையில் இளைஞர் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கேரள மாநிலத்தில் இடுக்கி மாவட்டம் மறையூரில் பழங்குடியின இளைஞர் ரமேஷ் (27) வாயில் கம்பி சொருகிய நிலையில் அவர் சடலமாக கிடப்பதை அப்பகுதி மக்கள் பார்த்துள்ளனர். உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்ததை அடுத்து சம்பவ இடத்தில் ஆய்வு செய்து பின்னர் சடலத்தை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ரமேஷ் உறவினர் சுரேஷ் என்பவருடன் சொத்துத் […]
ஜெய்பூரில் மூதாட்டியின் கால்களை வெட்டி கொடூரமான முறையில் வெள்ளி வளையங்களை கொள்ளையடித்து சென்ற சம்பவம் அதிர்ச்சியை அளித்துள்ளது. ராஜஸ்தான் தலைநகரின் ஜெய்பூரில் கொள்ளையர்கள் இந்த எல்லைக்கு செல்வார்களா என்பதை இந்த கொள்ளை சம்பவம் ஒரு சான்றாக உள்ளது. 108 வயதான ஜமுனா தேவி என்ற மூதாட்டி ஒருவரிடம் இந்த கொள்ளைச் சம்பவத்தை அரங்கேற்றிஉள்ளனர். வெள்ளி வளையத்தின் இணைப்பு பகுதியை நீக்க கூர்மையான ஆயுதத்தால்இரண்டு கால்களையும் முழங்காலுக்கு கீழ் வரை கொள்ளையர்கள் […]
குதூப்மினாரில் விநாயகர் சிலைகள் பல ஆண்டுகளாக பாதுகாப்பதற்காக போடப்பட்ட இரும்பு வலைகள் அகற்றப்பட்டுள்ளது. டெல்லியில் உள்ள புகழ்பெற்ற நினைவுச்சின்னங்களில் ஒன்று குதூப்மினார். இதில் விநாயகர் சிலைகள் காணப்பட்டது. பல ஆண்டுகளுக்கு முன்பு குத்புதீன் ஐபக் மசூதி உருவாக்குவதற்காக 27 இந்து மற்றும் ஜெயின் கோவில்களை அழித்ததாக கூறப்படுகின்றது. இதனால் குதுப்மினார் வளாகத்தில் உள்ள விநாயகர் சிலைகள் மீட்டெடுக்க தேசிய நினைவுச் சின்னங்கள் ஆணையம் ஏ.எஸ்.ஐ. (இந்திய தொல்பொருள் ஆய்வுத்துறை ) […]