உத்தரபிரதேசம் மாநிலம் கான்பூரில் மக்களை ஏற்றிச் சென்ற டிராக்டர் குளத்தில் கவிழ்ந்த விபத்தில் 32 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். கான்பூரில் உள்ள ஃபதே பூரில் சந்திரிகா தேவி கோயிலுக்கு 50 பேர் கிராம மக்கள் டிராக்டரில் பயணித்தனர். கதம்பூர் பகுதியில் சென்று கொண்டிருந்தபோது திடீரென டிராக்டர் தடுமாறி குளத்தில் கவிழ்ந்தது. இதில் தலைகுப்புற விழுந்ததில் அனைவரும் நீரில் மூழ்கினர். தகவல் அறிந்து வந்த கிராம மக்கள் மீட்கும் பணியில் ஈடுபட்டனர். […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
உத்தரபிரதேச முன்னாள் முதலமைச்சர் முலாயம் சிங் யாதவ் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். சமாஜ்வாடி கட்சியின் மூத்த தலைவரும் , அம்மாநில முன்னாள் முதல்வருமான முலாயம் சிங் யாதவ் கடந்த 2017ம் ஆண்டு கட்சியின் தலைவர் பொறுப்பில் இருந்து வெளியேறினார். இதையடுத்து பொறுப்பில் இருந்து அவர் விடுவித்துக் கொண்டார். பின்னர் அவரது மகன் அகிலேஷ் யாதவ் அக்கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார். இந்நிலையில் முலாயம் சிங் யாதவுக்கு திடீரென உடல்நிலை […]
இனி செல்போன் எடுத்து பேசும்போது ஹலோ என சொலலாமல் அதற்கு பதில் வந்தே மாதரம் என்றுதான் கூற வேண்டும் என்று அரசு ஊழியர்களுக்கு மகாராஷ்டிரா முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக அரசு ஊழியர்கள் அனைவருக்கும் சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. பொதுமக்கள் மற்றும் அரசு ஊழியர்களிடம் இருந்து அழைப்புகளை ஏற்று பதில் கூறும்போது அவர்களிடம் ’ஹலோ ’’ என கூறாமல் ’வந்தே மாதரம் ’’ என கூற வேண்டும். இது அரசு உள்ளாட்சி […]
சமையல் எண்ணெய் இறக்குமதி மீதான சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது இதுதொடர்பாக மத்திய நேர்முக வரிகள் மற்றும் சுங்க வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”குறிப்பிட்ட சமையல் எண்ணெய் மீதான இறக்குமதி சுங்க வரியில் தற்போதுள்ள சலுகை 2023 மார்ச் 31ஆம் தேதி வரை நீடிக்கப்பட்டுள்ளது. உள்நாட்டு விநியோகத்தை அதிகரிப்பது மற்றும் விலையைக் கட்டுக்குள் வைத்திருப்பது உள்ளிட்டவையே இந்த நடவடிக்கையின் நோக்கமாகும். உலகளாவிய […]
சல்மான் கானுக்கு திரைப்படத்தில் டூப் போடும் கலைஞர் ஜிம்மில் உடற்பயிற்சியின்போது சுருண்டு விழுந்து மரணமடைந்தார். இந்தி திரையுலகில் சல்மான்கானுக்கு டூப் போடும் பிரபல கலைஞர் சாகர் மாரடைப்பால் மரணமடைந்துள்ளார். 50 வயது நிரம்பிய சாகர் நல்ல உடற்தகுதிவாய்ந்தவர். தினமும் அவர் உடற்பயிற்சிசெய்து தன்னை கட்டுக்கோப்பாக வைத்து வந்திருக்கின்றார். சமீபத்தில் ’பஜ்ரங்கி பைஜான்’ ’டியூப்லைட் ’ தபாங் போன்ற திரைப்படங்கள் உள்பட 50க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் அவர் டூப் போட்டுள்ளார். அவர் […]
காந்தி ஜெயந்தியான இன்று பிரசாந்த கிஷோர் தனது நடைபயணத்தை துவங்கியுள்ளார். வருகிற 2024-இல் மக்களவைத் தேர்தல் நடைபெற இருக்கிறது. இதில் பாஜகவை வீழ்த்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமாரின் எதிர்க்கட்சி சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன் அரசியல் வியூக நிபுணராக உள்ள பிரசாந்த் கிஷோரை சந்தித்து நிதீஷ் குமார் ஆலோசனை மேற்கொண்டார். இதன் காரணமாக மக்களவைத் தேர்தலில் எதிர்க்கட்சிகளுக்கு பிரசாந்த் கிஷோர் வெற்றி வியூகம் […]
அரசு ஓய்வூதியதாரர்கள் தங்களில் வாழ்நாள் சான்றிதழை எப்போது புதுப்பிக்க வேண்டும் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளது. அரசு ஓய்வூதியதாரர்கள் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்கும் தேதி தளர்த்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வூதியம் பெறுவோர் நலத்துறை புதிய தகவலை வெளியிட்டுள்ளது. செப்டம்பர் 30, 2022 ஓய்வூதியம் பெறும் 80 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஓய்வூதியதாரர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1க்கு பதில் அக்டோபர் 1ல் வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். மிகவும் […]
தூய்மையான நகரத்திற்கான பட்டியலில் மீண்டும் தொடர்ந்து 6 வது ஆண்டாக மத்திய பிரதேச மாநிலத்தின் இந்தூர் நகரம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. பா.ஜ.க. ஆட்சி தொடங்கியதில் இருந்து ஸ்வச் பாரத் என்ற பெயரில் தூய்மையான இந்தியா உருவாக்கப்பட்டு வருகின்றது.இதனால் முக்கியத்துவம் கொடுத்து பல திட்டங்கள் அறிமுகப்படுத்தி நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றார். அதன்படி தூய்மையில் சிறப்பாக செயல்படும் நகரங்களை கண்டறிந்து ஊக்குவிக்கப்பட்டு வருகின்றது. ஸ்வஸ் சர்வேக்ஷான் என்ற பெயரில் தூய்மையான நகரங்களை தேர்ந்தெடுத்து விருதுகள் […]
புதுச்சேரியில் மின்வாரிய ஊழியர்கள் பணிக்கு திரும்பாவிட்டால், அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டம் அமல்படுத்தப்படும் என்று துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் நினைவுத் தினத்தையொட்டி, புதுச்சேரியில் உள்ள காமராஜர் சிலைக்கு புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், முதலமைச்சர் ரங்கசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதைச் செலுத்தினர். அப்போது, மனித சங்கிலி போராட்டம் நடத்திக் கொண்டிருந்த திமுக, காங்கிரஸ் கட்சியினர் தமிழிசை சௌந்தரராஜனுக்கு எதிர்ப்பு […]
புதுச்சேரியில் நடத்தையில் சந்தேகத்தால் 2-வது மனைவியை கணவன் அடித்துக் கொன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி மாநிலம் வினோபா நகர் பொய்யாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மதிவாணன் (வயது 38). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு இரண்டு மனைவிகள் உள்ளனர். இதில், 2-வது மனைவி லட்சுமி என்ற வள்ளியம்மை (32). இவர் கொக்கு பார்க் பகுதியில் பூ வியாபாரம் செய்து வந்தார். இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். முதல் மனைவி மேட்டுப்பாளையம் […]