பீகாரில் இலவச நாப்கின் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா? என பெண் ஐஏஎஸ் அதிகாரி ஒருவர் கேள்யெழுப்பியது சர்ச்சையாகியுள்ளது. பீகாரில் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் நிகழச்சி ஒன்றில் கலந்து கொண்ட போது, அவரிடம் மாணவிகள் சிலர், எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இருக்காது என கூறியுள்ளனர். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது. அதனால், ரூ.20 […]

பீகாரில் குழந்தைகள் மேம்பாட்டு கழகத்தின் எம்.டி.யும் ஐ.ஏ.எஸ். அதிகாரியுமான ஹர்ஜோத் கவுர் மாணவியிடம் கூறிய கருத்துக்கு பதில் கேட்டு தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் மாணவி ஒருவர் பேசும் போது இலவசமாக சானிட்டரி நாப்கின்கள் கொடுக்க வேண்டும் என அவர் பேசினார். சுகாதாரத்தை பேணிக்காக்கவும் பல கிராம மக்களுக்கு சானிட்டரி நாப்கின்கள் பயன்படுத்துவது இன்றளவும் கடினமாக இருப்பதால் அந்த பெண் […]

ஜம்முகாஷ்மீரில் இரு இடங்களில் நிறுத்திவைக்கப்பட்ட இரண்டு பேருந்துகளில் 8 மணி நேரத்தில் அடுத்தடுத்து குண்டுகள் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அடுத்த மாதம் முதல் வாரத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, காஷ்மீர் வர உள்ளார். இந்நிலையில் உதம்பூர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட டொமைன் சொயில் பெட்ரோல் பங்க் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டுருந்த பஸ்ஸில் நேற்று இரவு 10.30 மணி அளவில் வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த வெடிகுண்டு வெடித்ததில் நடத்துனரும் அவருடைய […]

யுபிஎஸ்சி தேர்வு தொடர்பான அப்டேட்டுகளை மொபைல் வழியாகவே இனி உடனுக்குடன் பார்த்துக் கொள்ளும் வகையில், புதிய செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் (யுபிஎஸ்சி) சார்பில் ஆண்டுதோறும் சிவில் சர்வீஸ் தேர்வு நடத்தப்படுகிறது. ஐஏஎஸ், ஐபிஎஸ், ஐஎஃப்எஸ், குரூப் ஏ, குரூப் பி உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் உள்ள காலிப் பணியிடங்களுக்குத் தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வுகள் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்காணல் என மொத்தம் […]

மஹாராஷ்டிரா மாநிலத்தில் காதலித்து வந்த இளம்பெண்ணை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தானும் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மஹாராஷ்டிராவின் பல்கர் மாவட்டத்தில் வசித்துவந்தவர்கள் ஸ்ரீகிருஷ்ணா யாதவ் (26). மற்றும் நேஹா (21) . பெண்ணின் சொந்த ஊர் பீகார் மாநிலம் என கூறப்படுகின்றது. இளைஞரின் சொந்த ஊர் உத்தரபிரதேசம் . இவர்கள் இருவரும் பல்கரில் வசித்து வந்துள்ளனர். நேற்று மாலை இளம்பெண் நேஹா அவ்வழியாக நடந்து சென்றுள்ளார். அப்போது […]

பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா அமைப்பின் இடங்களில் நாடு முழுவதும் தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். இதை கண்டித்து கடந்த 23-ஆம் தேதி கேரளாவில் அந்த அமைப்பினர் முழு அடைப்பு போராட்டம் நடத்தினர். இந்த போராட்டத்தில் பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் நடந்தன. போராட்டத்தின் போது பொது சொத்துக்களை சேதப்படுத்தப்பட்டது. மாநிலத்தில் முழு அடைப்புக்கு தடை விதித்து இருந்த நிலையில், இந்த போராட்டத்தை வழக்காக பதிவு செய்து உயர் […]

ஓய்வூதியம் தொடர்பான வழக்கில் நேரத்தை தமிழக அரசு வீணக்கின்றது என கூறி தமிழக அரசுக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் ரூ.5 லட்சம் அபராதம் விதித்துள்ளனர். போக்குவரத்து துறையில் பணியாற்றியவர் வேணுகோபால்.இவர் கடந்த 1995ம் ஆண்டு விருப்ப ஓய்வு பெற்றுவிட்டார். இந்நிலையில் பல்வேறு காரணங்களைக் காட்டி ஓய்வூதியத்தை அவருக்கு போக்குவரத்து துறை வழங்கவில்லை. இதனால் தொழிலாளர் ஆணையத்தில் முறையிட தொடங்கி , உச்சநீதிமன்றத்திலும் முறையிட்டு அந்த உரிமையை பெற்றார். ஆனால் கடந்த 2009ம் […]

காங்கிரஸ் கட்சித் தலைவர் தேர்தலில் போட்டியிடவில்லை என ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்துள்ளார். கடந்த 2019ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இந்த தோல்விக்கு பொறுப்பேற்று கட்சியின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக ராகுல் காந்தி அறிவித்தார். இதையடுத்து, 2019ஆம் ஆண்டில் இருந்து தற்போது வரை காங்கிரஸ் கட்சியின் தற்காலிக தலைவராக சோனியா காந்தி இருந்து வருகிறார். இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் தலைவரை தேர்ந்தெடுப்பதற்கான […]

நடிகர் தனுஷின் ”நானே வருவேன்” திரைப்படத்தை வரவேற்கும் வகையில், புதுச்சேரியில் தனுஷ் கட்-அவுட்டுக்கு பீர் அபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். நடிகர் தனுஷ் நடித்து இன்று திரைக்கு வந்துள்ள ‘நானே வருவேன்’ திரைப்படம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், புதுச்சேரி காமராஜ் சாலையில் உள்ள திரையரங்கில் ’நானே வருவேன்’ திரைப்படத்தின் காலை காட்சி ரசிகர்கள் காட்சியாக திரையிடப்பட்டது. இந்நிலையில், புதுச்சேரி தனுஷ் ரசிகர்கள் […]

உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக ஸ்டீல் ஸ்பூன் சாப்பிட்டு வந்தது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. குழந்தைகள் தெரியாத வயதில் மண்ணை அள்ளிச் சாப்பிடுவதை கேள்விப்பட்டு இருக்கிறோம். ஆனால், உத்தரப்பிரதேசத்தில் ஒருவர் கடந்த ஒரு ஆண்டாக ஸ்டீல் ஸ்பூன் சாப்பிட்டு வந்தது தெரியவந்துள்ளது. இம்மாநிலத்தில் உள்ள முஜாபர் நகரில் இருக்கும் போதைப்பொருள் பழக்கத்தில் இருந்து மீட்டெடுக்கும் மையத்தில் விஜய் என்பவர் கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு சேர்க்கப்பட்டார். அப்போது அவரின் […]