ஆந்திராவின் மின் வாரிய ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் பேச அனுமதி கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.. ஆந்திரா அரசு நிறுவனமான மத்திய மின் விநியோக கார்ப்பரேஷன் லிமிடெட் (CPDCL) நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்கள் பணி நேரத்தில் செல்போன் எடுத்துச் செல்ல அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அரசு நிறுவனத்தில் இதுபோன்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது இதுவே முதல் முறை என்று கூறப்படுகிறது. இது தொடர்பாக சி.பி.டி.சி.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜே.பத்மா ரெட்டி […]

சிறு குறு விவசாயிகளுக்கு ஓய்வூதியம் வழங்கும் பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா திட்டம் குறித்து தற்போது பார்க்கலாம்.. பிரதம மந்திரி கிசான் மந்தன் யோஜனா என்பது முதியோர் பாதுகாப்பு மற்றும் சிறு மற்றும் குறு விவசாயிகளின் சமூகப் பாதுகாப்பிற்காக அரசாங்கம் வடிவமைக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டமாகும். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள விவசாயிகள் இத்திட்டத்தின் கீழ் தங்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்கள் ரூ. 55 […]

நவராத்திரியை முன்னிட்டு மக்களிடம் பணம் வசூல் செய்ய சாமியார் ஒருவர் ஜீவசமாதி ஆகப் போவதாக குழிக்குள் இறங்கிய சம்பவம் உத்தரப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் தாஜ்பூர் என்ற கிராமத்தில் நவராத்திரி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களை ஏமாற்றி பணம் பறிக்கும் நோக்குடன் ஜீவசமாதி ஆகப் போகிறேன் என போலி சாமியார் ஒருவர் 6 அடி ஆழம் கொண்ட பள்ளத்தில் அமர்ந்து கொண்டார். இதுகுறித்து காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பின்னர் சம்பவ இடத்திற்கு […]

டெல்லியில் 14 வயது சிறுவன் நான்கு பேரால் கூட்டு பலாத்காரம் செய்யப்பட்டு ரோட்டில் வீசப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் சமீபகாலமாக பாலியல் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. அதிலும் குறிப்பாக வட மாநிலங்களில் அதிக எண்ணிக்கையிலான குற்றங்கள் பதிவாகிறது. அதுவும் சிறுவர், சிறுமிகளை குறிவைத்து நடக்கும் பாலியல் குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதைத் தடுக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றே பலரும் வலியுறுத்தி வருகின்றனர். […]

ராஜஸ்தானில் முதலமைச்சர் அசோக் கெலாட்டின் அடுத்த அரசியல் நகர்வுகளால் காங்கிரஸ் தலைமை கடும் அதிருப்தியில் உள்ள சூழலில் முன்னாள் துணை முதலமைச்சர் சச்சின் பைலட், டெல்லி சென்றுள்ளார். ராஜஸ்தான் முதலமைச்சராக உள்ள அசோக் கெலாட்டை காங்கிரஸ் கட்சித் தலைவராக்கிவிட்டு, சச்சின் பைலட்டை முதல்வராக்குவதற்கு காங்கிரஸ் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தி திட்டமிட்டிருந்தார். இதற்காக அசோக் கெலாட்டை டெல்லி வரவழைத்து பேசிய நிலையில், ராஜஸ்தான் தலைநகர் ஜெய்ப்பூரில் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடத்தி […]

நாட்டில் 24,821 பேர் மட்டுமே சமஸ்கிருதம் பேசுகிறார்கள் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.. ஆக்ராவைச் சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணரும் சமூக ஆர்வலருமான டாக்டர்.தேவாஷிஷ் பட்டாச்சார்யா தாக்கல் செய்த ஆர்.டி.ஐ விண்ணப்பத்திற்கு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பதிவாளர் ஜெனரல் மற்றும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகத்தின் மொழித் துறை இந்த தகவலைத் தெரிவித்துள்ளது. அதன்படி, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி, இந்திய மக்கள் தொகையில் 0.002 சதவீதம் பேர் […]

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள், குணமடைந்தவர்கள், இனத்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 3,615 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 22 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,255 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]

உலக பணக்காரர்கள் பட்டியலில் தொழிலதிபர் கௌதம் அதானி மீண்டும் 3-ம் இடத்துக்கு சென்றுள்ளார்.. ப்ளூம்பெர்க் உலக பெரும் பணக்காரர்கள் பட்டியலில் வணிக அதிபரான கௌதம் அதானி மூன்றாவது இடத்திற்கு சரிந்துள்ளார், அமேசானின் ஜெஃப் பெசோஸ் பட்டியலில் அவரை முந்தி மீண்டும் 2-ம் இடத்திற்கு முன்னேறி உள்ளார். ப்ளூம்பெர்க்-ன் சமீபத்திய பட்டியலின்படி, கெளதம் அதானியின் நிகர சொத்து மதிப்பு 135 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது, ஜெஃப் பெசோஸின் நிகர மதிப்பு […]

மத்திய தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளத்தை பிரதமர் தக்ஷநரேந்திர மோடி கடந்த 2015- ஆம் ஆண்டு ஜுலை மாதம் தொடங்கிவைத்தார். தகுதி வாய்ந்த வேலை தேடக்கூடியவர்களை, அவர்களுக்கு பொருத்தமான வேலைவாய்ப்பை அளிக்கக் கூடியவர்களுடன் இணைத்து உதவும் வகையில், தேசிய வேலைவாய்ப்பு சேவை இணையதளம் செயல்பட்டு வருகிறது. அத்துடன் வேலைவாய்ப்பு கலந்தாய்வு, தொழில் வழிகாட்டுதல் மற்றும் வேலைவாய்ப்பு திறன் பயிற்சி ஆகியவற்றின் மூலம் வேலை தேடுவோரின் […]

நாடு முழுவதும் பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பைச் சேர்ந்தவர்களின் அலுவலகங்கள், வீடுகளில் தேசிய புலனாய்வு அமைப்பு (என்ஐஏ) சமீபத்தில் சோதனை நடத்திய நிலையில், நேற்று மீண்டும் 8 மாநிலங்களில் திடீர் சோதனை நடத்தப்பட்டது. இதில், 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. ஐஎஸ் தீவிரவாத அமைப்பிற்காக நிதி திரட்டியது, உள்நாட்டில் மத கலவரத்தை தூண்டுதல், இளைஞர்களை தீவிரவாத அமைப்பில் சேர ஊக்குவித்தல் போன்ற குற்றச்சாட்டுகள் அடிப்படையில், […]