தபால்காரர், அஞ்சல் காவலர்கள் மற்றும் பிற பதவிகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்று இந்திய அஞ்சல்துறை அறிவித்துள்ளது.. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் இந்தியா போஸ்ட் இணையதளமான indiapost.gov.in இலிருந்து ஆட்சேர்ப்பு அறிவிப்பைப் பதிவிறக்கம் செய்யலாம். இந்த ஆட்சேர்பு மூலம் மொத்தம் 98,083 பணியிடங்கள் நிரப்பப்படும். நாடு முழுவதும் உள்ள 23 வட்டங்களில் காலி பணியிடங்களை திறக்க அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா போஸ்ட் ஆட்சேர்ப்பு 2022: காலியிட விவரங்கள் தபால்காரர்: 59099 […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பெற்றோர்கள் முன்னிலையில் இரு அரசுப் பள்ளிகளை சேர்ந்த மாணவிகள் மோதிக் கொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. புதுச்சேரி நகரப் பகுதியான லால் பகதூர் சாஸ்திரி வீதியில் சுப்பிரமணிய பாரதியார் பெண்கள் அரசு மேல்நிலைப்பள்ளி இயங்கி வந்தது. இங்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு பள்ளியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், இப்பள்ளியில் படித்து வந்த மாணவிகளை குருசுகுப்பம் பகுதியில் இயங்கி வரும் என்.கே.சி. பெண்கள் அரசுப் பள்ளியில் தற்காலிகமாக […]
பீகார் அரசு பள்ளிகளில் ‘நோ-பேக் டே’ (No bag day) விதியை அறிமுகப்படுத்த உள்ளது பீகார் மாநில கல்வித் துறையின் கூடுதல் தலைமைச் செயலாளர் தீபக் குமார் சிங் இதுகுறித்து பேசிய போது “ மாநிலத்தில் உள்ள அரசு பள்ளிகளில் வாராந்திர “நோ-பேக் டே” விதி அறிமுகம் செய்யப்பட உள்ளது.. இதன் மூலம் வாரத்திற்கு ஒரு முறையாவது, மாணவர்கள் மதிய உணவு பையுன் மட்டுமே பள்ளிகளுக்கு வருவார்கள். புத்தகங்களை எடுத்துச் […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் நோய் தொற்று பாதிக்கப்பட்டுள்ளனர் குணமடைந்தவர்கள், இறந்தவர்கள், புதிய பாதிப்புக்கு உள்ளானவர்களின் விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, 24 மணி நேரத்தில் மட்டும் 4,858 புதிய கொரோனா வைரஸ் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதேபோல மொத்தம் 18 பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 4,735 பேர் சிகிச்சை பெற்று குணமடைந்துள்ளனர். இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதித்த நபர்களின் […]
இரவில் தூங்கும் நேரத்தில் சக பயணிகளுக்கு தொல்லை தரும் விதத்தில் எந்த செயல்களையும் பயணிகள் செய்யக் கூடாது என இந்திய ரயில்வே எச்சரித்துள்ளது. உலகின் மிகப் பெரிய பயணிகள் சேவை செய்யும் அமைப்பாக இந்திய ரயில்வே உள்ளது. நாள்தோறும் லட்சக்கணக்கான பயணிகளுக்கு சேவை வழங்கும் இந்திய ரயில்வே, தனது சேவைகளை மேம்படுத்தி அதில் உள்ள பிரச்சனைகளை களைய தொடர் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது. குறிப்பாக முதியோர், பெண்கள், மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட […]
தனது 7 வயதில் இருந்து 2-வது தந்தையின் உறவினர்கள் தன்னை தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்ததை 28 ஆண்டுகள் கழித்து கணவனின் உதவியுடன் பெண் ஒருவர் வெளிக்கொண்டு வந்துள்ளார். முன்னாள் ராணுவ அதிகாரியின் மனைவியான 35 வயதுடைய அப்பெண் 19 வயது வரை தனக்கு நேர்ந்த கொடூரங்கள் குறித்து போலீசிடம் புகார் அளித்துள்ளார். இந்த சம்பவம் உத்தரப்பிரதேசத்தின் அலிகார் மாவட்டத்தில் அரங்கேறியிருக்கிறது. முதலில் காவல்துறையை அணுகிய போது புகாரை ஏற்றுக் […]
மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Trainee Engineer மற்றும் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 100 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E.., B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது. […]
ஒருங்கிணைந்த பட்டதாரி நிலை தேர்வு SSC CGL தேர்வு 2022க்கான அறிவிப்பை பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. ஆர்வமும் தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் இப்போது SSC CGL தேர்வு 2022 க்கு அதிகாரப்பூர்வ இணையதளமான ssc.nic.in இல் விண்ணப்பிக்கலாம். ஒருங்கிணைந்த பட்டதாரி நிலைத் தேர்வுக்கு விண்ணப்பிக்க அக்டோபர் 8 கடைசி நாளாகும்.. இருப்பினும், ஆன்லைன் முறையில் அக்டோபர் 09, 2022 வரையும், இ-சலான் மூலமாகவும் 10 அக்டோபர் 2022 வரை விண்ணப்பக் […]
ஆட்டோ ஓட்டுநர் ஒருவர் ஓணம் பம்பர் லாட்டரியில் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. கேரள மாநில லாட்டரித் துறை ஓணம் பம்பர் முடிவுகளை நேற்று அறிவித்தது. லாட்டரியில், முதல் பரிசு சுமார் 25 கோடி ரூபாய் மற்றும் பல சிறிய பரிசுகள் 1,000 ரூபாய் வரை இருந்தது. இதில் ஆட்டோ டிரைவர் ஒருவர் ரூ.25 கோடி பரிசை வென்றுள்ளார்.. வரி மற்றும் பிற கட்டணங்களைக் கழித்த பிறகு, ரூ.25 கோடி […]
ஆதார் அட்டையின் உதவியுடன் மொத்தம் 58 போக்குவரத்து தொடர்பான சேவைகளை ஆன்லைனில் பெறலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.. இந்தத் தகவலை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் (MoRTH) தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது. அதன்படி, ஓட்டுநர் உரிமம், நடத்துனர் உரிமம், வாகனப் பதிவு, அனுமதி, உரிமையை மாற்றுதல் போன்றவற்றுடன் தொடர்புடைய 18 குடிமக்களை மையமாகக் கொண்ட சேவைகளை 58 சேவைகளாக மாற்றியமைக்கும் அறிவிப்பை மத்திய சாலைப் போக்குவரத்து […]