நாடு முழுவதும் தக்காளி தட்டுப்பாடு நிலவுவதால் இன்னும் சில வாரங்களுக்கு விலை குறைய வாய்ப்பு இல்லை என தெரியவந்துள்ளது. முறையற்ற பருவமழை, போக்குவரத்து செலவு போன்ற காரணங்களால் நாடு முழுவதும் தக்காளியின் விலை கடந்த ஒரு வாரமாக பல மடங்கு உயர்ந்துள்ளது. 40 ரூபாய்க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி 200 ரூபாய் வரை விற்பனையானது. இது ஒரு புறம் இருக்க தக்காளியை பெருமளவு உற்பத்தி செய்யும் மாநிலங்களில் கனமழை […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
ஒடிசா மாநிலம் மயூர்பஞ்ச் மாவட்டம் பரிபாடா பகுதியைச் சேர்ந்த மதுஸ்மிதா என்ற இளம்பெண் கடந்த சில நாட்களாக உடல்நலம் சரியில்லாமல் இருந்துள்ளார். இதன் காரணமாக இவர் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அதன்பின்னர் அவரின் உடல் அவரின் சொந்த கிராமத்துக்கு இறுதி மரியாதைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது. பின்னர் இறுதிச்சடங்குகள் முடிந்ததும், எரியூட்ட தகன மைதானத்துக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது. பின்னர் கிராம மக்கள் சூழ அந்த […]
தென்மேற்கு பருவமழை காரணமாக வட இந்தியாவில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. குறிப்பாக இமாச்சல பிரதேசம், உத்தரகாண்ட் மாநிலங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவுகளும் ஏற்பட்டுள்ளது. சாலைகள் துண்டிக்கப்பட்டுள்ளன. ஊருக்குள் வெள்ளம் புகுந்ததால் மக்கள் வெளியே வர முடியாத நிலை நீடிக்கிறது. நேற்றும் உத்தரகாண்ட், இமாச்சல பிரதேசத்தில் கனமழை பெய்தது. டெல்லியில் கடந்த இரண்டு நாட்களாக மழை குறைந்துள்ளது. ஆனாலும், யமுனை ஆற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு நீர்மட்டம் […]
இந்திய ரயில்வேயின் கீழ் செயல்படும் மத்திய இரயில்வேயில் Joint General Manager / Deputy General Manager பணிக்கு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த பணிக்கு ஒரு காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் 50 வயதிற்குள் இருக்க வேண்டும். மத்திய அல்லது மாநில அரசு அதிகாரியாக பணிபுரிந்தவர்கள், RPF அதிகாரியாக பணிபுரிந்தவர்கள் இப்பணிக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படுபவர்களுக்கு பணிக்கு ஏற்றபடி மாத ஊதியம் வழங்கப்படும். […]
ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் காலமானார். ஸ்ரீ சைதன்யா கல்வி நிறுவனங்களின் நிறுவனர் மற்றும் தலைவர் பி.எஸ். ராவ் என்று அழைக்கப்படும் போப்பனா சத்யநாராயண ராவ், ஹைதராபாத்தில் குளியலறையில் தவறி விழுந்து சிகிச்சை பெற்று வந்த நிலையில் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். 76 வயதான அவருக்கு ஜான்சி லட்சுமி பாய் என்ற மனைவியும், சுஷ்மா மற்றும் சீமா என்ற இரு மகள்களும் உள்ளனர். அவரது உடல் […]
எலான் மஸ்க்கின் டெஸ்லா நிறுவனம், இந்தியாவில் மின்சார கார் தொழிற்சாலையை அமைக்க மத்திய அரசிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. உலகின் நம்பர் 1 பணக்காரரான எலான் மஸ்க் தனது டெஸ்லா கார்களை இந்தியாவில் விற்பனை செய்ய வேண்டும் என்று நீண்ட காலமாக திட்டமிட்டு வருகிறார். இந்நிலையில், கடந்த மே மாதம் டெஸ்லா நிறுவனம் இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தையில் கார் தயாரிப்பு தொழிற்சாலையைத் தொடங்குவதற்கு அரசு சில சலுகைகளை அளிக்க […]
வெள்ளப்பெருக்கு காரணமாக நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மூடப்பட்டதை அடுத்து, டெல்லியில் ஓரிரு நாட்களுக்கு தண்ணீர் தட்டுப்பாடு இருக்கலாம் என முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்துள்ளார். டெல்லி, மகாராஷ்டிரா, குஜராத், ராஜஸ்தான், பஞ்சாப், உத்தரப்பிரதேசம், காஷ்மீர் உள்ளிட்ட வட மாநிலங்களில் வரலாறு காணாத அளவு மழை பெய்து வருகிறது. இமாச்சல பிரதேசத்தில் இடைவிடாத மழையால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக டெல்லியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், அங்கும் மக்களின் இயல்பு […]
நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கோடியில் உள்ள கேரளா தொடங்கி டெல்லி, இமாச்சலப் பிரதேசம் வரை கனமழை காரணமாக வெள்ளக்காடாக தத்தளித்து வருகிறது. இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கோவாவில் புதிய உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. நாட்டிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் குவியும் மாநிலங்களில் கோவாவும் ஒன்று. […]
தக்காளி விலை உயர்வால், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டிய விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி அருகே போடிமல்லாடினா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தக்காளி விவசாயி ராஜசேகர். இவர், 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ள நிலையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 30 லட்சம் ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு விவசாயி […]
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அடுத்த ஆண்டு முதல், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்த உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, இத்தேர்வை கைவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் […]