கடந்த ஜூன் 12ம் தேதி AI171 விமானம் விபத்துக்குள்ளான பிறகு செயல்படுத்தப்பட்ட ‘பாதுகாப்பு இடைநிறுத்தத்திற்குப் பிறகு, ஆகஸ்ட் 1ம் தேதி முதல் ஏர் இந்தியா தனது சர்வதேச விமான சேவைகளை ஓரளவு தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு இடைநிறுத்தத்தின் போது, முழுமையான பாதுகாப்பை உறுதி செய்வதற்காக ஏர் இந்தியா தனது போயிங் 787 விமானங்களை கூடுதல் சோதனைகளை மேற்கொண்டது. மேலும், பாகிஸ்தான் மற்றும் மத்திய கிழக்கு வழியாக விமான வழித்தடங்கள் […]

சமோசா, ஜிலேபி மற்றும் லட்டு போன்ற உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று உத்தரவிடவில்லை என்று மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது இனி சமோசா, ஜிலேபி, லட்டு, பக்கோடா ஆகிய சிற்றுண்டிகளுக்கும் சிகரெட்டை போல எச்சரிக்கை லேபிள் இருக்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் அறிவுறுத்தியதாக நேற்று ஊடகங்களில் தகவல் வெளியானது.. அதாவது இந்த சிற்றுண்டிகளில் உடல்நலத்திற்கு கேடு என எச்சரிக்கை வாசகம் இடம்பெறும் […]

இந்திய ராணுவம் குறித்து அவதூறாக பேசிய வழக்கில் ராகுல் காந்திக்கு லக்னோ நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி.யும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான 2022 ஆம் ஆண்டு பாரத் ஜோடோ யாத்திரையின் போது இந்திய ராணுவத்தைப் பற்றி அவதூறான கருத்துக்கள் தெரிவித்ததாக சர்ச்சை எழுந்தது.. அப்போது கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதல் குறித்து பேசிய அவர், “சீனப் படைகள் நமது வீரர்களைத் தாக்குகின்றன, அதைப் பற்றி யாரும் கேள்வி கேட்கவில்லை” […]

ஜனவரி 1, 2026 முதல், அனைத்து இரு சக்கர வாகன ஓட்டிகளுக்கும் ABS மற்றும் இரண்டு BIS சான்றிதழ் பெற்ற தலைக்கவசங்கள் கட்டாயமாகும். மீறுபவர்களுக்கு ரூ.2000 அபராதம் அல்லது 3 மாதங்களுக்கு உரிமம் ரத்து செய்யப்படும். வாகன ஓட்டிகளின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.. அந்த வகையில் ஜனவரி 1, 2026 முதல் அனைத்து இரு சக்கர வாகனங்களுக்கும் (பைக்குகள், ஸ்கூட்டர்கள்) புதிய […]

இஎஸ்ஐ-யில் உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய எளிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. தொழிலாளர் அரசு காப்பீட்டுக் கழகத்தால் அங்கீகரிக்கப்பட்ட உரிமையாளர்கள் மற்றும் ஊழியர்களை பதிவு செய்ய ஊக்குவிக்கும் திட்டம் 2025 என்பது இஎஸ்ஐ சட்டத்தின் கீழ் சமூகப் பாதுகாப்பு காப்பீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு சிறப்பு முயற்சியாகும். 2025 ஜூலை 1 அன்று தொடங்கப்பட்டுள்ள இந்தத் திட்டம் டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும். இதன்படி உரிமையாளர்கள் தங்களது […]

பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் மதிப்பை அறிந்து குடிமக்கள் சுய கட்டுப்பாட்டைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் பேச்சு மற்றும் கருத்து சுதந்திரம் குறித்த வழிகாட்டுதல்களை பரிசீலிக்குமாறும் உச்சநீதிமன்றம் வலியுறுத்தியுள்ளது. இந்து கடவுள் குறித்து வஜகத் ஹான் என்பவர் தனது எக்ஸ் தளத்தில் சர்ச்சைக்குரிய பதிவை வெளியிட்டிருந்தார். இதையடுத்து, இவர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்பட்டது. மேலும் பல மாநிலங்களில் இவர் மீது எப் ஐ ஆர் போடப்பட்டிருந்தது. இதனை எதிர்த்து […]

இந்திய ரயில்வேயில் காலி பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் வெளியாகியுள்ளது. டெக்னீசியன் பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதில் Technician பணிக்கென காலியாக உள்ள 6238 பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் 10-ம் வகுப்பு, ITI அல்லது டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயதுவரம்பு 18 வயதில் இருந்து 30 வயதிற்குட்பட்டு இருக்க வேண்டும். எஸ்சி மற்றும் எஸ்டி பிரிவினருக்கு […]