நாடு முழுவதும் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாநிலங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. தென்கோடியில் உள்ள கேரளா தொடங்கி டெல்லி, இமாச்சலப் பிரதேசம் வரை கனமழை காரணமாக வெள்ளக்காடாக தத்தளித்து வருகிறது. இந்த கனமழையால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழலில் தான் கோவாவில் புதிய உத்தரவை அம்மாநில அரசு பிறப்பித்துள்ளது. நாட்டிலேயே அதிக சுற்றுலாப் பயணிகள் குவியும் மாநிலங்களில் கோவாவும் ஒன்று. […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
தக்காளி விலை உயர்வால், 30 லட்சம் ரூபாய்க்கு மேல் வருமானம் ஈட்டிய விவசாயி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் மதனப்பள்ளி அருகே போடிமல்லாடினா என்ற கிராமத்தை சேர்ந்தவர் தக்காளி விவசாயி ராஜசேகர். இவர், 5 ஏக்கர் நிலத்தில் தக்காளி பயிரிட்டுள்ள நிலையில், கடந்த 20 நாட்களில் மட்டும் 30 லட்சம் ரூபாய் அளவுக்கு தக்காளி விற்பனை செய்துள்ளார். இந்நிலையில், நேற்று இரவு விவசாயி […]
மருத்துவ மாணவர்களுக்கான நெக்ஸ்ட் தேர்வு மறு அறிவிப்பு வரும் வரை ஒத்திவைக்கப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. தேசிய மருத்துவ ஆணையம் அடுத்த ஆண்டு முதல், எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு மாணவர்களுக்கு நெக்ஸ்ட் தேர்வை அமல்படுத்த உள்ளது. இதற்கு நாடு முழுவதும் பல்வேறு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். குறிப்பாக, இத்தேர்வை கைவிடக் கோரி பிரதமருக்கு முதலமைச்சர் முக.ஸ்டாலின் கடிதம் எழுதியிருந்தார். நெக்ஸ்ட் தேர்வு கிராமப்புற, சமூக ரீதியாக பின்தங்கிய மாணவர்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் […]
சமையலில் தக்காளியை, தன்னிடம் கேட்காமல் கணவன் சேர்த்ததால் கோபம் அடைந்த மனைவி வீட்டை விட்டு வெளியேறிய சம்பவம் மத்தியப்பிரதேசத்தில் அரங்கேறியுள்ளது. சமீப நாட்களாக நாடு முழுவதும் தக்காளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது. ஒரு கிலோ ரூ.140-ஐ தாண்டி உள்ளது. ஏழை மக்கள், தங்களது வருமானத்தில் பாதியை தக்காளிக்கே செலவு செய்ய வேண்டிய உள்ளதால், அவர்கள் தக்காளியை சமையலில் சேர்த்துவதை குறைத்து வருகின்றனர். ஓட்டல்கள், உணவகங்கள், உணவு தயாரிப்பாளர்களை பதம் பார்த்துள்ளது. […]
டெல்லி மாநிலம் பிரசாந்த் விகார் பகுதியில் வசித்து வரும் கல்லூரி மாணவி தனது காதலனுடன் காரில் உல்லாசமாக இருந்துள்ளார். அப்போது, ரவி சோலங்கி என்ற நபர், அவர்களுக்கு தெரியாமல் அதை வீடியோவாக எடுத்துள்ளார். பின்னர், கார் அங்கிருந்து புறப்பட்டது. அந்த காரை ரவி சோலங்கி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்றுள்ளார். அந்த கார் காதலியின் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் நின்றதும், அவர் காரிலிருந்து இறங்கி வீட்டுக்கு சென்றுள்ளார். அந்த பெண் படிக்கட்டில் ஏறிக்கொண்டு […]
ஹரியானா மாநிலத்தில் மழை வெள்ள பாதிப்புகளை ஆய்வு செய்ய சென்ற பாஜக கூட்டணி கட்சி எம்எல்ஏவின் கன்னத்தில் பெண் தாக்கியதோடு, ”இப்போது ஏன் இங்கே வந்தீர்கள்” என கேள்வி எழுப்பி ஆக்ரோஷத்தை வெளிப்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. வடமாநிலங்களில் கடந்த சில நாட்களாக கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. குறிப்பாக, டெல்லி, இமாச்சல பிரதேசம், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்கள் அதிக வெள்ள பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. டெல்லி யமுனை ஆற்றில் […]
கேரளாவில் மனைவியை வெட்டிக் கொலை செய்துவிட்டு நாடகமாடிய கணவரை 17 ஆண்டுகளுக்குப் பின் காவல்துறையினர் கைது செய்தனர். கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் திருவல்லா அருகே கோழஞ்சேரி பகுதியைச் சேர்ந்தவர் ஜனார்தனன் நாயர் (75). இவர், போஸ்ட் மாஸ்டராக இருந்து ஓய்வு பெற்றவர். அவருக்கு திருமணமாகி ரமாதேவி (51) என்ற மனைவி, ஒரு மகன் மற்றும் மகள் உள்ளனர். பிள்ளைகள் இருவருக்கும் திருமணமாகி வேறு ஊர்களில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். […]
மத்திய ரயில்வேயின் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய புறநகர் ரயில் பெட்டிகளுக்கு பயணிகளிடையே பெரும் வரவேற்று கிடைத்துள்ளது. ஏப்ரல் 2023 முதல் ஜூன் 2023 வரை மத்திய ரயில்வேயின் குளிர்சாதனத்துடன் கூடிய ரயில் பெட்டிகளில் 49.47 லட்சம் பயணிகளை ஏற்றியதன் மூலம் ரூ. 23.36 கோடி வருவாய் கிடைத்தது என இந்திய ரயில்வே தெரிவித்துள்ளது. ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரையிலான காலாண்டில் சராசரி பயணிகளின் எண்ணிக்கை மற்றும் வருவாய்:2022-23ம் ஆண்டில் […]
பாலியல் வன்புணர்வு சம்பவத்தில் இருந்து தப்பித்தவர்கள் மற்றும் பாதிக்கப்பட்டு கர்ப்பிணியான சிறுமிகளுக்கு நீதி கிடைக்கவும் மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் இருப்பவர்களுக்கு உதவவும், மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம் நிர்பயா நிதியின் கீழ், ரூ.74.10 கோடி ஒதுக்கியுள்ளது. பாலியல் குற்றச்செயல்களால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் தீவிர சிகிச்சைப் பெறுவோருக்கு உதவ நிர்பய நிதியின் கீழ், பரிந்துரைகளை அனுப்புமாறு மத்திய மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சகம், மாநில அரசுகளை கேட்டுக்கொண்டுள்ளது. […]
தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்த ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிராவில் இருந்து கொள்முதல் செய்ய மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. கோடையில் கடும் வெப்பம் நிலவியதால் விவசாயிகள் தக்காளி பயிரிடுவது கனிசமாக குறைந்ததாலும், அண்டை மாநிலங்களிலிருந்து தக்காளி வரத்து குறைந்ததாலும், கடந்த சில நாட்களாக தக்காளி விலை உயர்ந்துள்ளது. இந்த விலை உயர்வால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க, தமிழகத்தில் உள்ள 300 நியாய விலைக்கடைகளில் குறைவான […]