யமுனையின் நீர்மட்டம் 207 மீட்டரை எட்டுவது மோசமான செய்தி என்று டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார். கடந்த 3 நாட்களாக வடமேற்கு இந்தியாவில் சில இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்து வருகிறது. இந்த மழையினால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பெரும்பாலான இடங்கள் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளன. இந்நிலையில், யமுனை நீர்மட்டம் 207 மீட்டரை எட்டுவது மோசமான செய்தி என்று டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் கவலை தெரிவித்துள்ளார். முன்னதாக, […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
பருவமழை காரணமாக நாடு முழுவதும் தக்காளி விலை வரலாறு காணாத அளவுக்கு உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் ஒரு கிலோ தக்காளி விலை ரூ.100-க்கு மேல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், சில மாநிலங்களில் ரூ.200-க்கு கூட தக்காளி விற்பனை செய்யப்படுகிறது. இதனால் ஏழை, எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். மேலும், தக்காளி விலை உயர்வைக் கட்டுப்படுத்தாத மத்திய அரசை காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக விமர்சித்து வருகின்றனர். மேலும், இந்த விலை […]
தக்காளியைப் பாதுகாக்க ஜிம் பாய்ஸை நிறுத்தியவர் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலம் வாரணாசி லங்கா பகுதியைச் சேர்ந்த அஜய் பவுஜி என்பவர், சமாஜ்வாடி கட்சியைச் சேர்ந்தவர். இவர் காய்கறி கடைக்காரர். தனது கடையில் தக்காளியைப் பாதுகாக்க ஜிம்பாய்ஸை நிறுத்தி வைத்து அனைவரின் கவனத்தையும் ஈர்த்தார். தன்னுடைய கடையில், `முதலில் பணம், பிறகு தக்காளி.. தயவு செய்து தக்காளியைத் தொடாதீர்கள்.. 9 வருட பணவீக்கம்’ போன்ற வாசகங்களை போஸ்டராகத் […]
குஜராத் மாநிலம் மெஹாசனாவில் ஒரு பெண் தனது கணவரை 10 ஆண்டுகளுக்குள் குடும்ப வன்முறைக்காக 7 முறை கைது செய்த விசித்திரமான வழக்கு வெளிச்சத்திற்கு வந்துள்ளது. ஒவ்வொரு கைதுக்குப் பிறகும், அவர் உத்தரவாதமளிப்பவராக நுழைந்து, அந்த நபரை விடுவிக்க ஏற்பாடு செய்வார் என்று தெரிகிறது. பிரேம்சந்த் மாலி மற்றும் அவரது மனைவி சோனு தம்பதியினர் மெஹ்சானா மாவட்டத்தில் உள்ள காடி நகரில் வசித்து வருகிறார். இவர்கள் இருவருக்கும் 2021இல் திருமணமான […]
பாலியல் செயலில் ஈடுபடும் இருவருக்கும் சம்மதம் இருக்கும் பட்சத்தில், சிறுமியுடனான உடலுறவு பலாத்காரம் ஆகாது என ஒடிசா உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சாந்தனு கவுரி (45) என்பவர், கடந்த 2013இல் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியை தினமும் வனப்பகுதிக்கு அழைத்து செல்வார். திருமணமாகி 4 குழந்தைகளுக்கு தந்தையான அவர், சிறுமியை அழைத்து செல்லும் போதெல்லாம் அவருடன் உடலுறவு செய்து வந்துள்ளார். ஒருகட்டத்தில் அந்த […]
அனைத்து முன்னணி நிறுவனங்களும் போட்டி போட்டு கொண்டு புத்தம் புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மிகவும் தீவிரமாக ஈடுபட்டு கொண்டுள்ளன. இந்த வகையில் ஹூண்டாய் நிறுவனத்தால் களமிறக்கப்பட்ட ஒரு எலெக்ட்ரிக் கார்தான் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). கடந்த ஜனவரி மாதம்தான் ஹூண்டாய் ஐயோனிக் 5 கார், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. அதற்குள்ளாக 500க்கும் மேற்பட்ட வாடிக்கையாளர்களுக்கு ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் […]
கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெல்லியில் லிவிங் டு கெதரில் இருந்த ஷ்ரத்தா வாக்கரை அவரது காதலன் அப்தாப் பூனாவாலா வெட்டிப்படுகொலை செய்தார். ஷ்ரத்தாவின் உடலை 35 துண்டுகளாக வெட்டி அதனை வீட்டில் ப்ரிட்ஜில் வைத்து தினம் தினம் சில பாகங்களாக டெல்லியின் பல இடங்களில் நாய்களுக்கு வீசினார். இச்சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது. இச்சம்பவத்திற்கு பின் இதேபோன்ற கொடூர கொலை சம்பவங்கள் அரங்கேறி வருவது […]
உலகம் முழுவதும் செயற்கை நுண்ணறிவு பின்னால் ஓடிக்கொண்டு இருக்கும் வேளையில் பல இளைஞர்கள் தங்களுடைய கனவு நிறுவனத்தை AI துறையில் உருவாக்கி வரும் வேளையில், ஸ்டார்ட்அப் முதல் பெரிய நிறுவனங்கள் வரையில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் செலவுகளை குறைக்கும் முக்கிய கருவியாக பார்க்கப்படுகிறது. இதனாலேயே செயற்கை நுண்ணறிவு துறை ராக்கெட் வேகத்தில் வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த நிலையில் பெங்களூர்-ஐ தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் பல இடங்களில் ஈகாமர்ஸ் வர்த்தகம் […]
கேரளாவில் 5 மாவட்டங்களில் மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ள நிலையில், 3 மாவட்டங்களில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக கேரள மாநில அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வரும் நிலையில், மீண்டும் மழை குறித்த எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. ஆலப்புழா, கோட்டையம், பத்தணம்திட்டா ஆகிய 3 மாவட்டங்களில் கல்வி நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. அதேபோல் இன்று முதல் நான்கு நாட்கள் கேரளா முழுவதும் மழை […]
டெல்லியில் ஜிஎஸ்டி கவுன்சிலின் 50-வது கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையில் இந்த கூட்டம் நடந்து முடிந்தது. குறிப்பாக, ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரைப் பந்தயம் போன்றவற்றில் பந்தயம் கட்டும் போது நடக்கும் மொத்தத் தொகைக்கும் 28 சதவீதம் வரி விதிக்கப்படும் என்று இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.. ஆன்லைன் கேமிங், கேசினோ, குதிரை பந்தயம் சூதாட்டம் மற்றும் […]