கும்பல் கொலைகளில் ஈடுபட்டவர்களை தண்டிக்க மத்திய, மாநில அரசுகள் எடுத்த நடவடிக்கைகள் என்று மத்திய, மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டுக்கு பிறகு, சிறுபான்மை சமூகத்திற்கு எதிராக குறிப்பாக இஸ்லாமியர்களுக்கு எதிராக கும்பல் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவது அதிகரித்துள்ளதாக மனித உரிமை ஆர்வலர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர். மாட்டிறைச்சியை கடத்துவதாக கூறி இஸ்லாமியர்கள் அடித்து கொல்லப்படும் சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது. கடந்த 2015ஆம் ஆண்டு, உத்தர […]

தெலங்கானா மாநிலத்தில் உள்ள நிஜாமாபாத் பகுதியை சேர்ந்த 45 வயது நபர், தனது 13 வயது மகளுடன் வசித்து வருகிறார். இவர், தனது 13 வயது மகளை 60,000 ரூபாய் பணத்திற்காக திருமணம் செய்து கொடுத்திருக்கிறார். தனது வயதில் இருக்கும் சாய் ராவ் என்ற 45 வயது நபருக்கு, தனது 13 வயது மகளை திருமணம் செய்து வைத்திருக்கிறார் தந்தை. இந்நிலையில், சாய் ராவுக்கு ஏற்கனவே ஏற்கனவே திருமணம் முடிந்து […]

மத்திய அரசின் பல்வேறு அமைச்சகங்கள், துறைகள், அலுவலகங்கள் ஆகியவற்றுக்கு ‘பலவகைப் பணி (தொழில்நுட்பம் அல்லாத) ஊழியர் பணியிடங்களுக்கும் மற்றும் பல்வேறு மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் உள்ள பல்வேறு அரசியல் சட்ட அமைப்புகள் / சட்டரீதியான அமைப்புகள் / நடுவர் மன்றங்கள் போன்றவற்றில் மத்திய நிதியமைச்சகத்தின் வருவாய் துறையின் கீழ் உள்ள மத்திய கலால் வாரியம் மற்றும் சுங்கம் (சிபிஐசி), மத்திய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு ஆகியவற்றுக்கு ஹவல்தார் பதவிகளுக்கும் […]

தொடர்ந்து பெய்து வரும் கனமழை காரணமாக ஹரியானாவில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கனமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஹரியானாவின் பஞ்ச்குலா மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் இன்று மற்றும் நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை பஞ்ச்குலா மாவட்ட கல்வி அதிகாரி வெளியிட்டார். மாநிலத்தில் நிலவும் கனமழை காரணமாக, பஞ்ச்குலா துணை ஆணையர் டாக்டர் பிரியங்கா சோனி முன்னதாக மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை […]

தொடர் கனமழை பெய்துவருவதால் யமுனை நதி நீர்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்துள்ளதாக டெல்லி அரசு தெரிவித்துள்ளது. கடந்த சில நாட்களாக வடமாநிலங்களில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. அதன்படி, தலைநகர் டெல்லியில் இடைவிடாத கனமழை பெய்துவருகிறது. இந்நிலையில், டெல்லியில் யமுனை நதி நீர்மட்டம் எச்சரிக்கை அளவைக் கடந்ததாக மாநில அரசு தெரிவித்துள்ளது. டெல்லியின் யமுனையில் எச்சரிக்கை அளவு 204.50 மீட்டராகவும், அபாயக் குறி 205.33 மீட்டராகவும் உள்ளது. இதற்கிடையில், கனமழை குறித்து […]

370-வது சட்டப்பிரிவு நீக்கம் செய்யப்பட்ட வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வர உள்ளது. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வகை செய்யும் 370-வது சட்டப்பிரிவில் சில திருத்தங்கள் செய்யப்பட்டு கடந்த 2019 ஆகஸ்ட் 5-ம் தேதி அரசாணை வெளியிடப்பட்டது. இதன்மூலம் காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டது. காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து நீக்கப்பட்டபோது, அந்த மாநிலம் 2 ஆகப் பிரிக்கப்பட்டது. இதன்படி ஜம்மு-காஷ்மீர் சட்டப்பேரவையுடன் கூடிய யூனியன் பிரதேசமாகவும், லடாக் […]

கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழை காரணமாக இந்தியாவின் சில மாநிலங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில நாட்களாக வட மாநிலங்களில் கனமழை கொட்டி தீர்த்து வருகிறது. இதன் காரணமாக டெல்லி, இமாச்சல், பஞ்சாப், உத்தரகாண்ட் உள்ளிட்ட பல மாநிலங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த 4 மாநிலங்களுக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் அதிக மழை எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்தநிலையில், தொடர் கனமழை காரணமாக பஞ்சாப் மாநிலத்தில் […]

இந்தியாவின் மிகப்பெரிய போக்குவரத்து துறையாக இருக்கும் ரியல்வே துறை இன்று வெளியிட்டுள்ள முக்கியமான அறிவிப்பில் வந்தே பாரத் உட்பட அனைத்து ரயில்களில் ஏசி சேர் கார், எக்ஸ்கியூட்டிவ் கிளாஸ் டிக்கெட்-களின் விலையை 25 சதவீதம் வரையில் திடிரென குறைத்துள்ளது. இதற்கு முக்கியமான காரணம் என்ன தெரியுமா.? இந்தியாவின் வளர்ச்சிக்கு ஏற்ப நாட்டின் போக்குவரத்து துறை வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் வேளையில் வீட்டுக்கு ஒரு கார் என்ற நிலை விரைவில் […]

கோவையில் இருந்து விமானம் மூலம் காசி, அலகாபாத், கயா சுற்றுலா செல்வதற்கான முன்பதிவை இந்தியன் ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) தொடங்கியுள்ளது. சிறப்பு ரயில் மூலம் சுற்றுலா, கல்விச் சுற்றுலா, விமான பயணத் திட்டங்களுக்கு ஐ.ஆர்.சி.டி.சி ஏற்பாடு செய்து வருகிறது. வரும் ஆகஸ்ட் 22-ம் தேதி கோவையில் இருந்து விமானம் மூலம் புதுப்பொலிவூட்டப்பட்ட காசி விஸ்வநாதர் கோயில், அன்னபூரணி கோயில், காசி விசாலாட்சி கோயில், காலபைரவர் கோயில், […]

உத்தரப்பிரதேச மாநிலம் சித்தார்த் நகர் மாவட்டத்தின் முஹானா பகுதியில் வசிப்பவர் அனுப் குமார். இவரது மனைவி கர்ப்பம் தரித்த நிலையில், வழக்கமான மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டன. அப்போது ஒரு கட்டத்தில் மனைவிக்கு அல்ட்ராசவுண்ட் பரிசோதனை செய்யப்பட்டது. இதில் பெண்ணின் கர்ப்பத்தில் இரட்டை குழந்தைகள் உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதை கேட்டு ஆச்சரியம் அடைந்த உறவினர்கள், மற்றொரு இடத்திலும் பரிசோதனை செய்துள்ளனர். அங்கும் இரட்டை குழந்தை உள்ளதாக சோதனை முடிவு வந்தது. […]