அமெரிக்கா–இஸ்ரேல் இணைந்து ஈரான் மீது நடத்திய தாக்குதல்களுக்குப் பிறகு மேற்கு ஆசியாவில் வேகமாக மாறிவரும் சூழ்நிலையை ஆய்வு செய்ய பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. பிப்ரவரி 28 அன்று ஈரானில் நடத்தப்பட்ட வான்வெளி தாக்குதல்கள் மற்றும் அதனைத் தொடர்ந்து ஏற்பட்டுள்ள பதற்றம் குறித்து பிரதமரிடம் விளக்கம் அளிக்கப்பட்டது. இதில், பல வளைகுடா நாடுகளில் நடைபெற்ற தாக்குதல்களும் விவரிக்கப்பட்டன. மேற்கு ஆசியா முழுவதும் வசித்து […]

ஒடிசா மாநிலம் ஜகத்சிங்பூர் மாவட்டத்தில், காதலனை நம்பி வீட்டை விட்டு வெளியேறிய 23 வயது இளம்பெண் ஒருவர், அடுத்தடுத்து நேர்ந்த கொடூரங்களால் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. திருமண ஆசை காட்டி அழைத்துச் சென்ற காதலனே அப்பெண்ணை சீரழித்த நிலையில், உதவிக்கு வந்த மற்றொரு நபரால் அவர் கொடூரமாகக் கொல்லப்பட்டுள்ளார். சம்பவத்தன்று, தன்னைத் திருமணம் செய்து கொள்வதாக காதலன் அளித்த வாக்குறுதியை நம்பி, அந்த […]

சத்தீஸ்கர் மாநிலத்தின் வனப்பகுதியில் ரேகா சிங் என்பவரின் கொலை வழக்கு, அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 12 ஆண்டுகளுக்கு முன்பு வறுமையைக் காரணம் காட்டித் தவிர்க்கப்பட்ட ஒரு காதல், இன்று ஒரு தாயின் உயிரைப் பறித்துள்ளது. வனப்பகுதியில் ரேகா சிங்கின் சடலம் கண்டெடுக்கப்பட்டபோது, அந்த இடமே ஒரு பயங்கரமாக இருந்தது. உடல் முழுவதும் சித்திரவதைக்கான தழும்புகள் நிறைந்திருந்த நிலையில், பிரேதப் பரிசோதனை அறிக்கை ஒரு அதிர்ச்சிகரமான உண்மையைப் போட்டுடைத்தது. ரேகா உயிருடன் இருக்கும்போதே, […]

டெல்லியில் காதலிப்பதாக கூறி திருமணத்தை மறைத்த மருத்துவருக்கு, அவரது காதலியே விபரீத தண்டனை அளித்த கொடூர சம்பவம் அரங்கேறியுள்ளது. டெல்லியை சேர்ந்த அமீனா என்ற இளம்பெண், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த விசர்ஜீத் என்ற மருத்துவரை கடந்த இரண்டு ஆண்டுகளாக தீவிரமாகக் காதலித்து வந்துள்ளார். ஆனால், விசர்ஜீத் தனக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்ட ரகசியத்தை மறைத்து, அமீனாவுடன் பழகி வந்ததாகக் கூறப்படுகிறது. காலப்போக்கில் இந்தத் துரோகத்தை அமீனா கண்டறிந்தபோது, ஏமாற்றப்பட்ட ஆத்திரத்தில் தனது காதலனைப் […]

மத்திய அரசின் ‘பிஎம் கிசான்’ (PM-KISAN) நிதி உதவித் திட்டத்தின் கீழ் பயன்பெறும் விவசாயிகளுக்கு, அடுத்தகட்ட தவணைத் தொகையைப் பெறுவதற்கான முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இத்திட்டத்தின் மூலம் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வரும் ரூ. 6,000 நிதியுதவி, 3 தவணைகளாக தலா ரூ. 2,000 வீதம் விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படுகிறது. இந்த நிதியுதவியை தடையின்றிப் பெறுவதற்கு, ஒவ்வொரு விவசாயியும் கட்டாயமாக விவசாய அடையாள எண் பெற்றிருக்க வேண்டும் என […]

இந்தியாவின் ஆன்மீக நிலப்பரப்பில், குறிப்பாக வட இந்தியாவில், பகுத்தறிவுக்கு அப்பாற்பட்ட பல விநோத வழிபாடுகளும் மர்மங்களும் நிறைந்த ஆலயங்கள் உள்ளன. அந்த வரிசையில், பிருந்தாவனத்தின் வம்சிவட் பகுதியில் அமைந்துள்ள ‘கோபேஷ்வர் மகாதேவ்’ திருக்கோவில் தனித்துவம் வாய்ந்தது. இங்குள்ள சிவலிங்கத்திற்குப் புடவை அணிவித்து, பெண் வடிவில் அலங்காரம் செய்து வழிபடும் விநோத நடைமுறை பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து வருகிறது. இந்த வழிபாட்டின் பின்னணியில் உள்ள மர்மமான மற்றும் தெய்வீகமான புராணப் பின்னணி […]

கொல்கத்தாவில் 47 வயது பெண் ஒருவர், தனது 22 வயது மகனுடன் கைகோர்த்து செல்வந்தர் ஒருவரை திட்டமிட்டு ஏமாற்றிய அதிர்ச்சி தரும் “ஹனி ட்ராப்” (Honey Trap) சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நகைக்கடை ஒன்றில் விற்பனையாளராகப் பணிபுரிந்து வந்த மாலதி சர்க்கார் என்ற அந்தப் பெண், தனது இளமைத் தோற்றத்தை மூலதனமாக வைத்து இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளார். மாலதியின் மகன் அர்ஜுன், தனது ஜிம் நண்பரான ராகேஷ் மேத்தா மூலம் […]

உத்தரப்பிரதேச மாநிலம் ஹாமிர்பூர் மாவட்டத்தில், பெற்றோர் கட்டாயப்படுத்தி நடத்தி வைத்த திருமணம், முதலிரவு அறையிலேயே விவாகரத்தில் முடிந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹாமிர்பூர் மாவட்டத்தை சேர்ந்த இளம்பெண் மிதிலேஷ் குமாரி, தான் ஒரு இளைஞரை காதலிப்பதாக தனது பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். ஆனால், மகளின் காதலை ஏற்க மறுத்த பெற்றோர், அவருக்கு தரம் சிங் குஷ்வாகா என்ற இளைஞருடன் திருமணத்தை உறுதி செய்தனர். தனக்கு இந்தத் திருமணத்தில் துளியும் விருப்பமில்லை […]

ஆந்திர மாநிலம் காக்கிநாடா மாவட்டம், சமர்லகோட்டா மண்டலத்தில் உள்ள வெட்லபலேம் என்ற இடத்தில் உள்ள பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 20 பேர் உடல் கருகி உயிரிழந்தனர்.. மேலும் பலர் படுகாயமடைந்தனர்.. இந்த விபத்தில் பல தொழிலாளர்கள் சிக்கியதால், பலி எண்ணிக்கை மேலும் உயர வாய்ப்புள்ளது என்று கூறப்படுகிறது. விபத்து நடந்தபோது 20க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சம்பவ இடத்தில் இருந்ததாக நம்பப்படுகிறது. வெடிவிபத்து குறித்து […]

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் மனைவியின் நடத்தையில் சந்தேகமடைந்த கணவன், அவரைக் கழுத்தை நெரித்துக் கொலை செய்ததோடு, தற்கொலை என நாடகமாடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாலாஜி நகரைச் சேர்ந்த தேவுடு – துர்கா தம்பதியினருக்கு ஒரு மகன் உள்ள நிலையில், அண்மைக்காலமாகத் தம்பதிக்கு இடையே நிலவி வந்த கருத்து வேறுபாடு இந்த விபரீத முடிவுக்கு வழிவகுத்துள்ளது. துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த துர்கா, பணிக்குச் செல்லும்போது நாகரீகமாக […]