Gig workers will be provided with loans of up to Rs. 10,000 per year without any collateral.
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
அமெரிக்காவின் சுகாதாரத் துறை அண்மையில் வெளியிட்டுள்ள அதிரடியான புதிய உணவுமுறை வழிகாட்டுதல்கள், சர்வதேச அளவில் விவாதங்களை கிளப்பியுள்ளதுடன் இந்திய மருத்துவ உலகிலும் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளன. ‘மேலிருந்து கீழான பிரமிடு’ (Inverted Pyramid) அடிப்படையில் அமைந்துள்ள இந்த முறையில், புரதச்சத்து மற்றும் ஆரோக்கியமான கொழுப்பு நிறைந்த உணவுகளுக்கு முதலிடம் வழங்கப்பட்டுள்ளது. குறிப்பாக, முழு தானியங்களின் அளவைக் குறைத்து, உடல் எடையில் ஒவ்வொரு கிலோவிற்கும் தலா 1.6 கிராம் என்ற விகிதத்தில் […]
இந்தியாவின் 2026-27 நிதியாண்டிற்கான மத்திய பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், ஒட்டுமொத்த தேசத்தின் கவனமும் ‘பொருளாதார ஆய்வு அறிக்கை’ (Economic Survey) மீது திரும்பியுள்ளது. பட்ஜெட்டுக்கு முந்தைய முன்னோட்டமாகவும், இந்தியப் பொருளாதாரத்தின் உண்மையான நிலையை விளக்கும் மதிப்பெண் சான்றிதழாகவும் கருதப்படும் இந்த ஆவணம், நாட்டின் நிதி ஆரோக்கியத்தை புரிந்துகொள்ள மிக அவசியமானது. இது வெறும் தரவுகளின் தொகுப்பு மட்டுமல்ல, மத்திய அரசு எடுக்கப்போகும் நிதி […]
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம், நீலம்பூர் பகுதியில் நிகழ்ந்துள்ள ஒரு கொடூரமான கொலை சம்பவம், அம்மாநிலத்தையே உலுக்கியுள்ளது. பள்ளியில் பயிலும் சிறுவர்களிடையே ஏற்பட்ட காதலும், அதன் விளைவாக ஏற்பட்ட ஆத்திரமும் ஒரு 14 வயது மாணவியின் உயிரைப் பறித்துள்ளது. அதே பள்ளியில் 12-ஆம் வகுப்பு பயிலும் 16 வயது மாணவன், 9-ஆம் வகுப்பு மாணவியை வன்கொடுமை செய்து படுகொலை செய்துள்ள தகவல் போலீஸ் விசாரணையில் அம்பலமாகியுள்ளது. சம்பவத்தன்று பள்ளிக்குச் சென்ற […]
இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 […]
தற்போது, ஃபாஸ்டேக் இல்லாதவர்கள் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்தி வருகின்றனர். இருப்பினும், இனிமேல் சுங்கக் கட்டணத்தை ரொக்கமாகச் செலுத்த முடியாது. இதுவரை சுங்கச்சாவடிகளில் ஃபாஸ்டேக் பயன்படுத்துபவர்களுக்கு தனி வழிகள் இருந்த நிலையில், இனி ரொக்கமாகச் செலுத்துபவர்களுக்கும் தனி வழிகள் உள்ளன. ஆனால், ஏப்ரல் 1 முதல் சுங்கச்சாவடிகளில் ரொக்கப் பணம் செலுத்துவது முற்றிலும் தடை செய்யப்படும் என்று கூறப்படுகிறது.. இது தொடர்பாக மத்திய அரசு ஒரு புதிய விதியைக் கொண்டுவர […]
நாடு 77வது குடியரசு தினக் கொண்டாட்டங்களுக்குத் தயாராகி வரும் நிலையில், பயங்கரவாதக் குழுக்கள் குழப்பத்தை ஏற்படுத்த சதித் திட்டம் தீட்டி வருவதாக உளவுத்துறை அமைப்புகள் எச்சரித்துள்ளன. காலிஸ்தான் ஆதரவாளர்களும், வங்கதேசத்தைச் சேர்ந்த பயங்கரவாதக் குழுக்களும் டெல்லி மற்றும் நாட்டின் பிற முக்கிய நகரங்களைத் தாக்கக்கூடும் என்ற தகவல்கள் வெளியானதையடுத்து, பாதுகாப்புப் படைகள் அதி உயர் எச்சரிக்கை நிலையில் வைக்கப்பட்டுள்ளன. குறிப்பாக ஹரியானா, டெல்லி-என்சிஆர், உத்தரப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் ஆகிய […]
பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டின் முதல் வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்திய ரயில்வேயில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.. ஹவுரா மற்றும் கவுஹாத்தி (காமாக்யா) இடையே இயக்கப்படும் படுக்கை வசதி ரயிலை கொடியசைத்து தொடங்கி வைப்பதற்காக பிரதமர் மோடி மால்டா நகர ரயில் நிலையத்திற்கு வருகை புரிந்தார். கவுஹாத்தி (காமாக்யா)–ஹவுரா வந்தே பாரத் படுக்கை வசதி ரயிலையும் பிரதமர் காணொளி மூலம் […]
அரசாங்கம் உங்கள் மொபைல் ஃபோனைக் கட்டுப்படுத்துமா? தகவல் தொழில்நுட்ப வன்பொருள் உற்பத்தியாளர்களின் சங்கமான MAIT, இந்தக் கேள்விக்கு பதிலளித்துள்ளது. எந்தவொரு மொபைல் ஃபோன் உற்பத்தியாளரும் தங்கள் மூலக் குறியீட்டைப் பகிர்ந்துகொள்வதை மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் கட்டாயமாக்கவில்லை என்று MAIT தெரிவித்துள்ளது. மூலக் குறியீடு என்பது, மென்பொருள், மொபைல் செயலிகள் அல்லது மின்னணு சாதனங்கள் என்ன செய்ய வேண்டும், எப்படிச் செயல்பட வேண்டும் என்று கூறும், கணினியின் சொந்த […]
பாலியல் வன்கொடுமைக்கு உள்ளான சிறுமியின் அந்தரங்க உறுப்புகளில் காயம் ஏற்பட்டதற்கான மருத்துவ ஆதாரம் இல்லை என்பதைக் காரணமாக்கி இழப்பீடு மறுக்க முடியாது என்று அலஹாபாத் உயர்நீதிமன்றத்தின் லக்னோ அமர்வு தீர்ப்பளித்துள்ளது. இதுபோன்ற வழக்குகளில் காயம் இருக்கிறதா இல்லையா என்பது பொருத்தமற்றது என்றும் நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது. நீதிபதிகள் சேகர் பி. சராஃப் மற்றும் மஞ்சீவ் சுக்லா ஆகியோர் அடங்கிய இரு நீதிபதிகள் அமர்வு, ஜனவரி 14 அன்று இந்த தீர்ப்பை வழங்கியது. […]

