ஸ்னாக்ஸ் பாக்கெட்டில் இருந்த ஒரு பொம்மை வெடித்ததில், ஒரு சிறுவன் கண் பார்வையை இழந்த அதிர்ச்சி சம்பவம் அரங்கேறி உள்ளது.. ஒடிசாவின் பலங்கிர் மாவட்டத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது.. அந்தச் சிறுவன் ஞாயிற்றுக்கிழமை அன்று ஒரு உள்ளூர் கடையில் இருந்து 5 ரூபாய் மதிப்புள்ள ‘லைட் ஹவுஸ்’ கார்ன் பஃப்ஸ் பாக்கெட் ஒன்றை வாங்கியுள்ளான். தின்பண்டத்தைச் சாப்பிட்ட பிறகு, அந்தப் பொம்மையுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது, அது வெடித்து சிறுவனின் கண்ணில் பட்டது. […]
தேசிய செய்திகள்
NATIONAL NEWS|1newsnation brings to you today news from India along with top headlines, current news and live updates on politics, national issues and news from states.
மத்திய தொழிலாளர் அமைச்சர் மன்சுக் மண்டவியா, டெலிவரி நிறுவனங்களில் இருந்த“10 நிமிடத்தில் டெலிவரி” என்ற கட்டாய நடைமுறையை நீக்க வேண்டும் என்று அறிவுறுத்தியதைத் தொடர்ந்து, முக்கிய நிறுவனங்கள் அதை ஏற்க சம்மதித்துள்ளன. கடுமையான டெலிவரி காலக்கெடு மற்றும் அது டெலிவரி ஊழியர்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வில் ஏற்படுத்தும் தாக்கம் தொடர்பான கவலைகளைக் கையாள்வதற்காக, பிளிங்கிட், ஜெப்டோ, ஸ்விக்கி மற்றும் ஜொமேட்டோ உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களுடன் ஒரு கூட்டம் நடத்தப்பட்டது. இந்த […]
பாகிஸ்தான் தரப்பிலிருந்து வரும் ட்ரோன்கள் குறித்து இன்று பாகிஸ்தானுடன் டிஜிஎம்ஓ மட்டப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதாக இந்திய ராணுவத் தளபதி ஜெனரல் உபேந்திர திவேதி தெரிவித்தார். ஜம்மு காஷ்மீரின் நௌஷேரா-ரஜௌரி பகுதியில் ட்ரோன்கள் காணப்பட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்த நிகழ்வு வந்துள்ளது. இந்திய ராணுவம் ஒரு ஏவுகணை மற்றும் ராக்கெட் படையை தயார் செய்து வருவதாகவும் அவர் கூறினார். ஒரு செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஜெனரல் உபேந்திர திவேதி, மே […]
வங்கக்கடலில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக, புதுச்சேரி மற்றும் அதன் அண்டை மாவட்டமான காரைக்காலில் இடி, மின்னலுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே எச்சரிக்கை விடுத்திருந்தது. இந்த முன்னறிவிப்பை தொடர்ந்து, நேற்று இரவு முதல் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் மேகமூட்டத்துடன் காணப்பட்ட நிலையில், இன்று காலை முதல் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. விடாது பெய்து வரும் இந்த மழையினால் சாலைகளில் வெள்ளம் […]
அடுத்த வாரம் அறிமுகப்படுத்தப்பட உள்ள வந்தே பாரத் ஸ்லீப்பர் எக்ஸ்பிரஸ் ரயில், ரயில் பயணத்தில் பொதுவாகக் காணப்படும் RAC வசதியை கொண்டிருக்காது. வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் டிக்கெட்டுகளின் விலை, ராஜ்தானி எக்ஸ்பிரஸ் போன்ற தற்போதுள்ள பிரீமியம் ரயில்களை விட சற்றே அதிகமாக இருக்கும். மேலும், பயணிகள் குறைந்தபட்சம் 400 கி.மீ தூரத்திற்கு வசூலிக்கப்படும் கட்டணத்திற்கு இணையான தொகையை செலுத்த வேண்டியிருக்கும். முதல் வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயில் அடுத்த […]
மத்திய தொழிலாளர் அமைச்சகம் ஒரு முக்கிய முடிவை எடுக்க உள்ளது.. ஆம், வருங்கால வைப்பு நிதி (EPFO) மற்றும் ஊழியர்களின் மாநில காப்பீட்டுக் கழகத்தின் (ESIC) கீழ் உள்ள சம்பள வரம்பை அதிகரிக்க அது தயாராகி வருகிறது. சமீபத்திய உச்ச நீதிமன்ற உத்தரவுகள் மற்றும் தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளே இந்த முன்மொழிவுக்கு முக்கிய காரணங்களாகும். நீண்ட காலமாக நிலுவையில் உள்ள இந்த மாற்றம், லட்சக்கணக்கான ஊதியம் பெறும் தொழிலாளர்களின் வாழ்வில் சமூகப் […]
இந்திய ரயில்வேயில் ரயில்கள் தாமதமாவது சாதாரணமாகிவிட்டது. பரபரப்பான ரயில் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்க நேரிடும்போது பயணிகள் விரக்தியடைகின்றனர். சில நேரங்களில் தாமதம் சில நிமிடங்கள் மட்டுமே இருக்கும். மற்ற நேரங்களில் அது பல மணிநேரமாக இருக்கலாம். இதுபோன்ற சூழ்நிலைகளில் பயணிகளுக்கு ஓரளவு நிம்மதி அளிக்கும் ஐஆர்சிடிசி விதிமுறை தற்போது பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த கொள்கை ராஜ்தானி, துரந்தோ மற்றும் சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களுக்குப் பொருந்தும். ஒரு ரயில் தாமதமாகும் போது […]
மூத்த காங்கிரஸ் தலைவர் மணிசங்கர் ஐயர், “இந்துத்துவா என்பது பயத்திலிருந்து உருவான இந்துமதம்” என்று கூறியதையடுத்து, பெரும் அரசியல் சர்ச்சை வெடித்துள்ளது. கொல்கத்தாவில் உள்ள கல்கத்தா கிளப்-இல் நடைபெற்ற “ஹிந்துமதத்தை ஹிந்துத்துவாவிலிருந்து காப்பாற்ற வேண்டும்” என்ற தலைப்பிலான விவாத நிகழ்ச்சியில் பேசும்போது அவர் இவ்வாறு தெரிவித்தார். இந்து மதம் ஒரு சிறந்த மதம் என்றாலும், இந்துத்துவம் ஒரு அரசியல் சித்தாந்தம் என்று கூறினார். காந்தி மற்றும் சுவாமி விவேகானந்தரின் இந்து […]
இந்திய வரலாறு, வளமான பாரம்பரியம் மற்றும் செழுமையான கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டுள்ளது. அதன் இயற்கை வளங்கள், பரந்த சந்தை, வர்த்தக வாய்ப்புகள் மற்றும் மூலோபாய புவியியல் இருப்பிடம் காரணமாக, இந்தியா பல நூற்றாண்டுகளாக வெளிநாட்டு சக்திகளை ஈர்த்து வந்துள்ளது. குறிப்பாக ஐரோப்பிய நாடுகள் இந்தியாவை ஒரு செல்வச் செழிப்பு மிக்க இடமாகக் கருதி, இங்கு தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயன்றன. இந்த சூழலில் தான் ஆங்கிலேயர்கள் இந்தியாவைத் தங்கள் காலனியாக […]
ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள ஏவுதளத்தில் இருந்து இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் விண்ணில் ஏவப்பட்டது.. இஸ்ரோவின் PSLV-C62 ராக்கெட் புவியை கண்காணிப்பதற்கான EOS N1 செயற்கைக்கோளுடன் விண்ணில் ஏவப்பட்டது.. இது EOS-N1 எனப்படும் பூமி கண்காணிப்பு செயற்கைக்கோள் அதனுடன் சேர்த்து மேலும் 14 துணை செயற்கைக்கோள்கள் வெற்றிகரமாக விண்வெளிக்கு அனுப்பப்பட்டன. இந்த நிலையில் இந்த திட்டம் தோல்வி அடைந்ததாக இஸ்ரோ அறிவித்துள்ளது.. நான்காவது கட்டத்தில் (PS4) ஒரு கோளாறு ஏற்பட்டதை இஸ்ரோ உறுதிப்படுத்தியுள்ளது. […]

