இரட்டை இலை சின்னம் கோரி எடப்பாடி பழனிசாமி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையம் 3 நாளில் பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 27ஆம் தேதி நடைபெறவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். தேமுதிக சார்பில் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆனந்த் போட்டியிடுகிறார். நாம் தமிழர் கட்சி சார்பில் பெண் வேட்பாளர் மேனகா போட்டியிடுவார் என அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
ராகுல் காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணம் இன்றுடன் நிறைவடைகிறது. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரையிலான ராகுல் காந்தியில் `இந்திய ஒற்றுமை யாத்திரை, கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கன்னியாகுமரியில் தொடங்கி 3,970 கி.மீ. 12 மாநிலங்கள் மற்றும் இரண்டு யூனியன் பிரதேசங்களை சுமார் 145 நாட்களில் கடந்து இன்று (ஜன.30) ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் முடிவடைகிறது. பல கட்சிகளின் தலைவர்கள் இதன் நிறைவு விழாவில் கலந்துகொள்ள உள்ளனர். அந்த […]
ஜி 20 கல்வி பணிக்குழு 2023-ன் முதல் கூட்டம் சென்னையில் பிப்ரவரி 1, 2 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ளது. “ஒரே பூமி, ஒரே குடும்பம், ஒரே எதிர்காலம்” என்ற கருப்பொருளில், அனைவரையும் உள்ளடக்கிய, சமத்துவமான, பொருத்தமான மற்றும் தரமான கல்வி மற்றும் வாழ்நாள் முழுவதும் அனைவரும் கற்றல் வாய்ப்புகளை உறுதி செய்வதற்கான இரண்டு நாள் விவாதங்களில் கல்வி பணிக்குழு கவனம் செலுத்தும். கடந்த தலைமைகளின் கீழ் நடைபெற்ற கலந்துரையாடல்களைக் கட்டமைக்கவும், […]
சுகாதார அமைச்சர் நபா கிஷோர் தாஸ் இறந்த சம்பவம் ஒடிசாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில்., மாநிலத்தில் 31 ஆம் தேதி வரை பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஒடிசா மாநிலத்தில் நவீன் பட்நாயக் தலைமையில்ஆட்சி நடைபெற்று வருகிறது. அங்கு சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சராக இருப்பவர் நபா கிஷோர் தாஸ். பிஜு ஜனதா தளம் கட்சியின் மூத்த தலைவரான அவர் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மதியம் 12.30 […]
அதிகாரிகளை அமைச்சர் மனோ தங்கராஜ் கடுமையாக சாடிய வீடியோ, சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. கன்னியாகுமரி மாவட்டம் அழகியபாண்டிபுரம் அருகே கீரன்குளம் என்ற கிராமம் அமைந்துள்ளது. இந்த கிராமத்தில் குளத்தின் கரையை சரிசெய்து நடைபாதை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த பணிக்காக ஒரு கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிலையில், சீரமைப்பு பணிகளை தொடங்கி வைப்பதற்காக அமைச்சர் மனோதங்கராஜ் இந்த கிராமத்திற்கு வருகை தந்திருந்தார். அப்போது குளத்தை பார்வையிட்ட […]
உதயநிதி ஸ்டாலின் கடந்த 2018 ஆம் வருடம் திமுகவின் இளைஞர் அணி செயலாளராக பொறுப்பேற்றார். அதற்கு முன்பாக அவர் தமிழ் சினிமா துறையில் பிஸியாக இருந்தார்.கடந்த 2018 ஆம் வருடம் கட்சியின் முக்கிய பொறுப்புக்கு வந்த உதயநிதி ஸ்டாலின், அடுத்த சட்டசபை தேர்தலிலேயே அதாவது சென்ற 2021 ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டசபை பொதுத் தேர்தலிலேயே போட்டியிட்டு சட்டசபை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டார். அதன் பிறகு சமீபத்தில் அவருக்கு தமிழக […]
சேலம் மாவட்டம் எடப்பாடியை அடுத்த குரும்பப்பட்டி பகுதியில் 1000 பேருக்கு திமுக பொற்கிழி வழங்கும் விழா மற்றும் பொதுக்கூட்டம் நடைபெற்றது.. இந்த விழாவில் கலந்துகொண்டு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் “ சேலத்திற்கு எப்போது வந்தாலும், மிகப்பெரிய வரவேற்பு கொடுக்கிறீர்கள்.. நீங்கள் கொடுக்கும் வரவேற்பும், எழுச்சியும் நம்பிக்கை அளிக்கிறது.. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஏமாற்றிவிட்டீர்கள்.. மீண்டும் அந்த தவறை செய்யமாட்டீர்கள் என்று நம்புகிறேன்.. சேலம் […]
கடந்த 2021 ஆம் ஆண்டு சட்டசபை பொதுத் தேர்தலில் அதிமுக தோல்வியை சந்தித்தது. இதனை தொடர்ந்து, வெற்றி அடைந்த திமுக ஆட்சியை அமைத்தது.புது அரசாங்கம் பொறுப்பேற்ற நாள் முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. அந்த வகையில் தமிழக மின்சார துறை அமைச்சராக பொறுப்பேற்றவர் செந்தில் பாலாஜி இவர் மின்துறையில் பல அதிரடி மாற்றங்களை கொண்டு வந்தார். அதில் ஒன்றுதான் மின் இணைப்பு என்னுடன் ஆதார் எண்ணை இணைக்க […]
‘வெள்ள பாதிப்புக்குத் தீர்வே கிடைக்கவில்லை’ என மடாதிபதி ஒருவர் கர்நாடக முதல்வரை அருகில் வைத்துக் கொண்டே குற்றச்சாட்டுகளை முன்வைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கர்நாடக மாநிலம் பெங்களூரு மகாதேவபுரா பகுதியில் நடந்த அரசு நிகழ்ச்சியில் முதல்வர் பசவராஜ் பொம்மை கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மடாதிபதி ஒருவரும் பங்கேற்றிருந்தார். அப்போது பேசிய மடாதிபதி, ‘ஒவ்வொரு முறையும் மழை வரும்போது பெங்களூர் நகரில் வெள்ளம் நிற்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால், […]
அதிமுக சின்னத்தை முடக்க கோரி அரசியல் விமர்சகர் ரவீந்திரன் துரைசாமி கடிதம் எழுதியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல் அடுத்த மாதம் 27-ம் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனைத் தொடர்ந்து ஈரோடு கிழக்கு சட்டமன்ற தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. திமுக, காங்கிரஸ் கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராக ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிடுவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் பிரசாரத்தில் திமுக, காங்கிரஸ் மற்றும் […]