பெரம்பலூரில் போலீசார் முன்னிலையில் ரவுடி வெள்ளைக்காளை என்பவரை நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்ய முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வெள்ளைக்காளியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு போலீசார் சென்னை அழைத்து வந்து கொண்டிருந்தனர்.. சென்னையில் இருந்து புதுக்கோட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திவிட்டு திரும்பிய போது இந்த சம்பவம் நடந்துள்ளது.. அப்போது பெரம்பலூர் மாவட்டம் சின்னாறு இறையூர் என்ற இடத்தில் உணவருந்திக் கொண்டிருந்த போது 10 பேர் கொண்ட கும்பல் நாட்டு […]
அரசியல்
political news | Get all the latest news and updates on Tamil Nadu, National and International Politics news only on 1newsnation.com. Read all news including political news, current affairs and news headlines and more…
தமிழகத்தில் உள்ள ஏழை எளிய மக்களின் “சொந்த வீடு” என்ற கனவை நனவாக்க தமிழ்நாடு அரசு ஒரு மாபெரும் முன்னெடுப்பை மேற்கொண்டுள்ளது. ‘குடிசையில்லா தமிழ்நாடு’ என்ற இலக்கை எட்ட, ‘கலைஞரின் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் நடப்பாண்டில் மட்டும் ஒரு லட்சம் புதிய கான்கிரீட் வீடுகளைக் கட்ட முதலமைச்சர் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். இந்த மெகா திட்டத்திற்காக அரசு சுமார் 3,500 கோடி ரூபாய் நிதியை வாரி வழங்கியுள்ளது. இந்தத் திட்டத்தின் […]
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் விவாதத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் பதிலுரையாற்றினார்.. அப்போது 5 ஆண்டுகளில் திமுக அரசு கொண்டுவந்த திட்டங்களை பட்டியலிட்டு உரையாற்றினார்.. மேலும் “ ஆட்சி பொறுப்பேற்று 8,000க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன்.. 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் தமிழகம் சீரழிந்திருந்தது.. என்னுடைய இலக்கில் வென்று மிக மிக மகிழ்ச்சியாக உள்ளேன்.. 2 லட்சம் பேருக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் […]
தமிழ்நாட்டில் அடித்தட்டு மக்களுக்கான சேவைகளை முன்னின்று நடத்தும் அங்கன்வாடி மற்றும் சத்துணவு ஊழியர்களின் நீண்டகாலக் கனவு தற்போது நனவாகியுள்ளது. அரசுப் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களில் பணியாற்றும் சமையலர்கள், சமையல் உதவியாளர்கள் மற்றும் தூய்மைப் பணியாளர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், அவர்களுக்கான ஓய்வூதியச் சலுகைகளை உயர்த்தி முதலமைச்சர் அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். முதலமைச்சரின் இந்த புதிய உத்தரவின்படி, இதுவரை மாதம் 2,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த சிறப்பு ஓய்வூதியம் (Special […]
2026 தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், தமிழகத்தில் அரசியல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கி உள்ளது.. இந்த தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் ஏற்கனவே பல யூகங்களை வகுத்து வருகின்றன.. 2026 சட்டமன்ற தேர்தலைப் பொறுத்தவரை திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், தவெக என 4 முனை போட்டி நிலவுகிறது.. இதில் பாமகவின் அன்புமணி அணி என்.டி.ஏ கூட்டணியில் சேர்ந்துள்ளது. டிடிவி தினகரனும் என்.டி.ஏ […]
தமிழக அரசியல் களம் 2026 சட்டமன்ற தேர்தலை நோக்கி விறுவிறுப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் வேளையில், நடிகர் விஜய்யின் ‘தமிழக வெற்றிக் கழகம்’ எடுக்கப்போகும் கூட்டணி முடிவுதான் தற்போதைய பேசுபொருளாக மாறியிருக்கிறது. இதுவரை தனித்து போட்டி என்ற முழக்கத்துடன் களப்பணிகளை முடுக்கிவிட்டுள்ள தவெக-வை நோக்கி, இரண்டு பிரதான தேசியக் கட்சிகள் தூது விட்டு வருவதாக அரசியல் வட்டாரங்கள் கூறுகின்றன. குறிப்பாக, டெல்லியில் இருந்து வரும் அழுத்தமான அழைப்புகள் பனையூரில் உள்ள கட்சித் […]
தமிழக சட்டமன்ற தேர்தல் இன்னும் சில மாதங்களில் நடைபெறவுள்ள நிலையில், அரசியல் களம் இப்போதே அனல் பறக்கத் தொடங்கியுள்ளது. கடந்த காலத் தேர்தல் நடைமுறைகளை வைத்துப் பார்த்தால், பிப்ரவரி இறுதிக்குள் இந்திய தேர்தல் ஆணையம் தேதிகளை அறிவித்து, ஏப்ரல் மாதத்தில் வாக்குப்பதிவும், மே முதல் வாரத்தில் முடிவுகளும் வெளியாக வாய்ப்புள்ளது. இந்தச் சூழலில், தமிழக அரசியலின் ‘ஹாட் டாபிக்’ ஆக மாறியிருப்பது, தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் களம் […]
மதுராந்தகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டம் நிறைவடைந்த நிலையில் கூட்டணி தலைவர்கள் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.. எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன், அன்புமணி, நயினார் நாகேந்திரன் ஆகியோர் செய்தியாளர்களிடம் பேசினர்.. அப்போது பேசிய எடப்பாடி பழனிசாமி “ தமிழ்நாட்டில் எங்கு பார்த்தாலும் போதை பொருள் புழக்கம் அதிகரித்து விட்டது.. தமிழ்நாட்டில் சிறுமிகளுக்கும் பெண்களுக்கும் பாதுகாப்பு இல்லை.. கொலை, கொள்ளை நடக்காத நாள் இல்லை.. இது தான் திமுக ஆட்சியின் […]
இன்று மதுராந்தகத்தில் நடந்த என்.டி.ஏ கூட்டணி மாபெரும் பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி உரையாற்றினார்.. அப்போது பேசிய அவர் திமுக அரசை கடுமையாக சாடினார். மேலும் “ இந்த கூட்டத்தில் உரையாற்றிய மோடி திமுக அரசை கடுமையாக சாடினார்.. அப்போது பேசிய அவர் “ திமுக ஆட்சியில் ஜனநாயகமும் இல்லை, நம்பகத்தன்மையும் இல்லை.. வாக்குறுதிகளை அள்ளித்தெளித்த திமுக அது எதையும் நிறைவேற்றவில்லை.. தமிழ்நாட்டை திமுகவிடம் இருந்து விடுவிக்க வேண்டும்.. தமிழ்நாட்டின் அனைத்து […]
சட்டப்பேரவை தேர்தலை முன்னிட்டு தேசிய ஜனநாயக கூட்டணியின் மாபெரும் பொதுக்கூட்டம் செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் பிரம்மாண்டமாக நடைபெற்றது.. இந்த பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார்.. அப்போது திமுக அரசை கடுமையாக சாடினார்.. தமிழ் மொழி, தமிழ் கலாச்சாரம், தமிழ்நாட்டின் வரலாற்று பங்களிப்பு ஆகியவை எனக்கு எப்போதுமே தாக்கத்தை ஏற்படுத்தி வந்துள்ளன.. பல சந்தர்ப்பங்களில் நாங்கள் பல நாட்டு தலைவர்களுக்கும் திருக்குறளை பரிசாக அளித்திருக்கிறோம்.. தமிழ்நாட்டின் ஞான […]

