காணொலிக் காட்சி வாயிலாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். இந்தக் கூட்டம் வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் குறித்து நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தினம் வெளியிடப்பட்டது. தமிழகத்தில் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட அந்த வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டிருந்தது. இதனால், […]

தவெக தலைவர் விஜய் கடந்த 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் பல்வேறு விஷயங்கள் குறித்து பேசினார்.. திமுகவை கடுமையாக விமர்சித்த அவர் “எம்.ஜி.ஆரும், ஜெயலலிதா மேடமும் ஒரே வார்த்தையில் திமுகவை காலி செய்தனர்.. ஏன் இவ்வளவு கடுமையாக விமர்சிக்கிறார்கள் என்று யோசிப்பேன்.. அவர்கள் சொன்னதையே நானும் சொல்கிறேன்.. திமுக ஒரு தீய சக்தி.. திமுக தீய சக்தி என ஜெயலலிதா கூறியது சரிதான்.. திமுக ஒரு […]

தமிழ்நாட்டில் கடந்த மாதம் 4-ம் தேதி முதல் எஸ்.ஐ.ஆர் பணிகள் நடைபெற்றது.. வீடு வீடாக கணக்கீட்டுப் படிவம் விநியோகம் செய்வது, அதை பூர்த்தி செய்து பெறுவது, அவற்றை பதிவு செய்வது ஆகிய பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்ட நிலையில் இந்த பணிகள் கடந்த 14-ம் தேதி நிறைவடைந்தது.. தமிழ்நாட்டில் இன்று மாவட்ட தேர்தல் அதிகாரிகள் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிட்டுள்ளனர்.. தமிழ்நாட்டில் சுமார் 98 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் வரைவு […]

தமிழக சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், அரசியல் களத்தில் மிகப்பெரிய கூட்டணி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன. அதன் ஒரு பகுதியாக, அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாட்டாளி மக்கள் கட்சி இணைவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதற்கான ரகசியப் பேச்சுவார்த்தைகள் முடிவடைந்த நிலையில், இரு தரப்பிலும் தொகுதிப் பங்கீடுகள் குறித்தும் இப்போதே உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிகிறது. அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியில் இணைவதற்குப் பாமக தலைவர் […]

தமிழகச் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் வேளையில், பாமக இதுவரை கண்டிராத ஒரு மாபெரும் உட்கட்சிப் பூசலில் சிக்கித் தவிக்கிறது. தந்தை டாக்டர் ராமதாஸ் மற்றும் மகன் டாக்டர் அன்புமணி ராமதாஸ் இடையிலான இந்த அதிகாரப் போர், தற்போது நீதிமன்றப் படிகளைத் தாண்டி கட்சியின் சின்னத்தையே முடக்கும் நிலைக்குச் சென்றுள்ளது. கட்சியின் தலைமை அதிகாரம் யார் கையில் என்பதில் நீடிக்கும் குழப்பம், பாமக தொண்டர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த […]