தமிழகம் முழுவதும் இன்று பாஜக சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இந்தி திணிப்பை எதிர்த்து தமிழகம் முழுவதும் திமுக இளைஞரணி மாணவரணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் திமுக இளைஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின் கலந்துகொண்டார். அப்பொழுது இந்த ஆர்ப்பாட்டம் போராட்டமாக மாறுமா என்பது மத்திய அரசின் கையில்தான் உள்ளது. தமிழகத்தின் மொழி, கல்வி உரிமையை பறிக்கும் அரசாக பாஜக இருக்கிறது. எந்த […]

காலியாக உள்ள செவிலியர் பணியிடங்கள் இரண்டே மாதங்களில் நிரப்பப்படும் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார். திருச்சியில் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் நடைபெற்ற மாநில அளவிலான ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்டு பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், ”தமிழகத்தில் 96% முதல் தவணை தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 92% இரண்டாவது தவனை தடுப்பூசி செலுத்தி உள்ளோம். 96% மக்கள் நோய் எதிர்ப்பு சக்தியோடு உள்ளனர். அதனால் கொரோனோ இறப்பு 6 மாதமாக […]

தாங்கள் தான் உண்மையான சிவசேனா என்பதை நிரூபிக்க, உத்தவ் தாக்கரே அணியினர் 2 லாரிகளில் பிரமாணப் பத்திரங்களை எடுத்துச் சென்று தேர்தல் ஆணையத்தில் தாக்கல் செய்துள்ளனர். இந்திய தேர்தல் ஆணையம் சமீபத்தில் சிவசேனாவின் பெயர் மற்றும் சின்னத்தை முடக்கியது. மேலும், உத்தவ் தாக்கரே – ஷிண்டே அணிக்கு தனித்தனி பெயர், சின்னத்தை வழங்கியது. அத்துடன், யார் உண்மையான சிவசேனா என்பது தொடர்பான வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது. இந்நிலையில், தாங்கள் […]

இனி புதிதாக அச்சடிக்கும் ரூபாய் நோட்டுகளில் ஒரு பக்கம் காந்தி, மறுபக்கம் கடவுளர் லக்‌ஷ்மி, விநாயகரின் படங்களை அச்சடிக்குமாறு பிரதமர் மோடிக்கு டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் வலியுறுத்தியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர், “எத்தனை நடவடிக்கைகள், முயற்சிகள் மேற்கொண்டாலும் இறையருள் இல்லாவிட்டால் அது பலன் தராது. எனவே, பிரதமர் மோடிக்கு நான் ஒரு வேண்டுகோள் வைக்கிறேன். நம் ரூபாய் நோட்டுகளில் விநாயகர், லக்‌ஷ்மி படங்களை அச்சிட்டால் நிச்சயமாக தேசம் […]

டாஸ்மாக் விற்பனை குறித்து பொய் தகவல் போட்டதாக அமைச்சர் செந்தில் பாலாஜி அந்த தொலைக்காட்சியை வறுத்தெடுத்த சம்பவம் நடந்துள்ளது. டாஸ்மாக்கில் தீபாவளி விற்பனை குறித்து தந்தி டி.வி. தகவல் வெளியிட்டது. அதில், ரூ708 கோடி வசூல் என தகவல் வெளியிட்டிருந்தது. இதையடுத்துஅந்த தகவல் பொய் என தெரிவித்த அமைச்சர் செந்தில் பாலாஜி தொலைக்காட்சிக்கு கண்டனம் தெரிவித்துள்ளார்.தீபாவளி , பொங்கல் , ஆங்கில புத்தாண்டு போன்ற நாட்களில் வழக்கத்தை விட மது […]

’என்னுடைய திருமணம், காதல் திருமணம் என்றும் பெற்றோர் சம்மத்தோடுதான் திருமணம் செய்துகொண்டதாகவும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார். தனியார் செய்தி தொலைக்காட்சியின் நேர்காணலில் கலந்து கொண்ட அவர், பாஜக கூட்டணியில் யார் யார் இருக்கலாம் என்ற கேள்விக்கு, ”திமுக-காங்கிரஸ் தவிர அனைவரும் எங்கள் பக்கம் தான் வரணும் என்று தெரிவித்தார். அடுத்த தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல், அதனால் அனைவரும் ஒன்றிணைந்து எதிர்கொள்ள வேண்டும். சாதியில்லா சமூகத்தை திருமாவளவன் உருவாக்க […]

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு 15.76 லட்சம் எண்ணெய் விளக்குகளை ஏற்றி கின்னஸ் உலக சாதனை படைக்கப்பட்டுள்ளது. தீபாவளி திருநாளை முன்னிட்டு உத்தரப்பிரதேச அரசு கின்னஸ் உலக சாதனை படைக்கும் முயற்சிக்கான ஏற்பாடுகளை செய்தது. அதன்படி, அயோத்தியில் 15 லட்சத்திற்கும் அதிகமான விளக்குகளை ஏற்றுவது என முடிவு செய்யப்பட்டது. இதற்காக அயோத்தி, லக்னோ, கோண்டா மற்றும் பிற மாவட்டங்களில் இருந்து மண்ணால் ஆன விளக்குகளை கொள்முதல் செய்யும் பணிகளும் நடைபெற்றன. கடந்த […]

கோவையில் நடந்தது தீவிரவாத தாக்குதலே எனது தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம் சாட்டியுள்ளார் ‌ இது தொடர்பாக அவர் தனது அறிக்கையில்; நேற்று காலை கோவை நகரில்‌ உக்கடத்தில்‌ கார்‌ ஒன்றில்‌ சிலிண்டர்‌ வெடித்ததாக செய்தி அனைவரும்‌ கண்டிருப்பீர்கள்‌. இது தொடர்பாக தமிழககாவல்துறை டிஜிபி சைலேந்திரபாபு அவர்களுடன்‌ காவல்துறை உயர்‌ அதிகாரிகள்‌ கார்‌ சிலிண்டர்‌ விபத்து நடந்த இடத்திற்கு விரைந்து வந்து தங்களது முதல்‌ கட்ட விசாரணையை துவங்கினார்கள்‌. […]

வெளிநாட்டில் இருந்து நிதி பெறுவதில் விதிமுறைகளை மீறியதாக ராஜீவ் காந்தி அறக்கட்டளையின் உரிமத்தை மத்திய உள்துறை அமைச்சகம் ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது. ராஜீவ் காந்தி அறக்கட்டளைக்கு வெளிநாட்டில் இருந்து நிதிபெறுவதில் விதிமுறைகளை மீறியதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால், ராஜீவ் காந்தி அறக்கட்டளை, ராஜீவ் காந்தி தொண்டு நிறுவனம் மற்றும் இந்திரா காந்தி நினைவு அறக்கட்டளை ஆகிய 3 அறக்கட்டளைகளில் சட்ட விதிமுறை மீறல் ஏதும் நடந்துள்ளதா? என்பது குறித்து விசாரணை […]

பிரபல இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளராக உள்ளவர் இரா.முத்தரசன். 72 வயதான இவர் அரசியலில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், இவருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில துணைச் செயலாளர் பெரியசாமி தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘இந்திய கம்யூனிஸ்ட் […]