மகாராஷ்டிர பாஜக எம்.எல்.ஏ கோபிசந்த் படல்கர், இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்லக்கூடாது என்ற தனது அறிவுரையால் சர்ச்சையில் சிக்கியுள்ளார். மகாராஷ்டிராவின் பீட் நகரில் நடந்த ஒரு பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய அவர் “ கல்லூரி செல்லும் இந்து பெண்கள் ஜிம்மிற்கு செல்ல வேண்டாம், வீட்டிலேயே யோகா பயிற்சி செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தினார். ஏனெனில், ஒரு சதி நடந்து வருகிறது, யாரை நம்புவது என்று அவர்களுக்குத் தெரியாது..” என்று அவர் […]

எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று தலைவர் எடப்பாடி பழனிசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்த போது திமுக அரசை உருட்டுக் கடை அல்வா என்று விமர்சித்திருந்தார்.. மேலும் திமுக கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்று கூறி உருட்டுக் கடை அல்வா என்ற பெயரில் ஒரு பாக்கெட்டை கொடுத்தார்.. அதில் பிரித்து பார்த்தால் அல்வாவுக்கு பதில் பஞ்சு தான் இருக்கும்.. அதே போல் தான் திமுக கொடுத்த வாக்குறுதிகளும் என்று விமர்சித்திருந்தார்.. […]

தமிழக சட்டப்பேரவையில் இன்று உரையாற்றிய முதல்வர் ஆணவக் கொலைகளை தடுக்க ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் ஒரு ஆணையம் அமைக்கப்படும் என்று கூறினார்.. அப்போது பேசிய அவர் “ ஆணவ படுகொலைக்கு சாதியை தாண்டி பல காரணங்கள் உள்ளன.. ஆணவப் படுகொலைகளுக்கு எதிராக கடுமையாக நடவடிக்கை எடுக்கப்படும்.. ஆணவக் கொலைக்கு காரணமானவர்களுக்கு கடுமையான தண்டனை கொடுக்கப்பட்டு வருகிறது.. அவர்கள் எதன் பொருட்டும் தப்பி ஓடக் கூடாது எனவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு […]

கடந்த செப்டம்பர் 27-ஆம் தேதி கரூர் மாவட்டத்தில் தவெக தலைவர் நடிகர் விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் 41 பேர் உயிரிழந்த துயரச் சம்பவம், நாடு முழுவதும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, விஜய் பொது நிகழ்ச்சிகள் எதிலும் கலந்துகொள்ளாமல் மௌனம் காத்து வந்தார். இதற்கிடையே, கரூர் சம்பவம் தொடர்பாக மாவட்டச் செயலாளர் மதியழகனை காவல்துறையினர் கைது செய்தனர். இந்த வழக்கில், சென்னை உயர் […]

கரூரில் விஜய் பரப்புரை கூட்ட நெரிசல் பலி தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்ட நிலையில், குஜராத் கேடரைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி பிரவீன் குமார், இன்று முதல் தனது விசாரணையை நடத்த உள்ளார். கரூரில் தவெக பிரசாரக் கூட்டத்தில் 41 பேர் உயிரிழந்த சம்பவம் எதிரொலியாக அரசியல் கட்சிகளின் கூட்டங்களுக்கு நிலையான வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரி வில்லிவாக்கம் தினேஷ் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை […]

முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு செயல்படுத்தி வரும் ‘கலைஞர் மகளிர் உரிமைத் தொகைத் திட்டத்தின்’ கீழ் புதிதாக விண்ணப்பித்துள்ள தகுதியான பெண்களுக்கு டிசம்பர் 15ஆம் தேதி முதல் உரிமைத் தொகை வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் அறிவித்துள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவே திரும்பிப் பார்க்கும் வண்ணம், கடந்த 2023 செப்டம்பர் 15-ஆம் தேதி, பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இத்திட்டத்தை முதல்வர் தொடங்கி வைத்ததாகவும், இது மகளிரின் […]

மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவுப்படி டாஸ்மாக் நிறுவனத்தில் பணிபுரியும் சி, டி பிரிவு ஊழியர்கள், மதுபான சில்லறை விற்பனை கடைகளில் பணிபுரியும் தகுதியுடைய கடைப்பணியாளர்களுக்கு 20% வரை போனஸ், கருணை தொகை வழங்கப்படும். அதேபோல், கூட்டுறவு […]

சென்னையில் திருமாவளவன் கார் மோதிய விவகாரத்தில் வழக்கறிஞர் ராஜீவ்காந்தி மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த பார்கவுன்சில் இணை தலைவர்கள் ஆர்.அருணாசலம், சரவணன் ஆகியோரை கொண்ட சிறப்புக்குழுவை நியமித்து பார்கவுன்சில் உத்தரவு. கடந்த 7-ஆம் தேதி சென்னை உயர் நீதின்றம் அருகே ஓர் ஆர்ப்பாட்டத்தில் விசிக தலைவர் திருமாவளவன் பங்கேற்று திரும்பியபோது, அந்த வழியாக சென்று கொண்டிருந்த ஸ்கூட்டர் ஒன்று திருமாவளவன் சென்ற காருக்கு குறுக்கே வந்துள்ளது. […]