fbpx

தமிழகத்தில், 44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டித்தொடர், சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 28-ஆம் தேதி தொடங்குகிறது. இதையொட்டி நாளை முதல் ஆகஸ்டு 10-ஆம் தேதி வரை சென்னையில் இருந்து மாமல்லபுரத்துக்கு இலவச பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்த போட்டித்தொடரின் தொடக்க விழா, சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மிக பிரமாண்டமாக நாளை நடைபெறவுள்ளது.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் …

சர்வதேச செஸ் ஒலிம்பியாட் விளம்பரங்களில் பிரதமர் மோடியின் புகைப்படம் இடம் பெறாதது தொடர்பாக தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவித்துள்ள பாஜகவினர், விளம்பரங்களில் மோடி படத்தை ஒட்டினர்.

44-வது செஸ் ஒலிம்பியாட் போட்டி, சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் நடைபெற இருக்கிறது. இதற்கான தொடக்க விழா, சென்னை நேரு மைதானத்தில் நாளை கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. பிரதமர் நரேந்திர மோடி, …

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற எடப்பாடி பழனிசாமிக்கு லேசான மயக்கம் ஏற்பட்டது..

மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.. …

மாணவியின் தவறான முடிவு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் குழு அமைத்து கொலையா? தற்கொலையா? என விசாரணை செய்ய வேண்டும் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.

மதுரையில் தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், ”மத்திய-மாநில அரசுகள் தற்போது மக்களுக்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வு, மின் கட்டண …

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்ட எடப்பாடி பழனிசாமி, முதலமைச்சர் ஸ்டாலினை கடுமையாக விமர்சித்தார்..

மின் கட்டணம், சொத்து வரி உயர்வை கண்டித்து இன்று அதிமுக சார்பில் சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.. இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் ஏராளமான மூத்த நிர்வாகிகள் தொண்டர்கள் …

அப்துல்காலாமின் 7ஆம் ஆண்டு நினைவு தினத்தையொட்டி, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள ட்விட்டரில் நீங்கள் உருவாக்கிய ஊழல் ஒழிக்கும் படையில் தானும் ஒருவன் என பதிவிட்டுள்ளார்.

முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் கடந்த 2015ஆம் ஆண்டு ஜூலை 27ஆம் தேதி இம்மண்ணை விட்டு பிரிந்தார். இதையடுத்து, ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 27ஆம் தேதி …

இந்தியா ஒரு போலீஸ் ராஜ்யம் என்றூ, மோடி ஒரு ராஜாவும் ராகுல்காந்தி விமர்சித்ததற்கு, பாஜக பதிலடி கொடுத்துள்ளது.

நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தியை அமலாக்க இயக்குனரகம் (ED) விசாரித்ததற்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் நடத்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி, நேற்று டெல்லி காவல்துறையால் கைது செய்யப்பட்டார்.. 57 எம்.பி.க்கள் உட்பட 250க்கும் மேற்பட்ட …

தமிழ்நாடு அரசிற்குக் கடன் சுமையை வைத்துவிட்டுச் சென்றவர்கள் விலைவாசி உயர்வை எதிர்த்து ஆர்ப்பாட்டம் நடத்துவது வேடிக்கையாக உள்ளதாக அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் தெரிவித்துள்ளார்.

தமிழ்நாட்டில் பல்வேறு இடங்களில் மின்கட்டண உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து, அதிமுக சார்பில் திமுக அரசை எதிர்த்து போராட்டம் நடைபெற்றது. இந்நிலையில், காரைக்குடியில் செய்தியாளர்களைச் சந்தித்த ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் …

விவசாயிகளுக்கு வழங்கப்படும் வட்டியில்லா பயிர்க்கடன் கடந்த ஆண்டை விட ரூ.1300 கோடி அதிகமாக வழங்கப்பட்டுள்ளதாக கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஐ.பெரியசாமி, ”கடந்த ஆண்டு ரூ.407 கோடி பயிர்க் கடன் வழங்கப்பட்ட நிலையில், இந்தாண்டு ரூ.1764 கோடி வழங்கப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். விவசாயத்திற்கு வழங்கப்பட்டு வரும் வட்டியில்லா …

கள்ளக்குறிச்சி கலவரத்துக்கு பட்டியலினத்தவர்கள் காரணம் என்ற முடிவுக்கு உளவுத்துறை வந்தது எப்படி? என்று தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

இதுதொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில், “திமுக ஆட்சியில் சமூக நீதி என்பது எழுத்தளவில் மட்டுமே உள்ளது என்பது மீண்டும் ஒரு முறை மக்களுக்கு உணர்த்தப்பட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் நடந்த கலவரத்தைக் கள்ள மவுனத்துடன் பார்த்துக் …