அக்டோபர் 2 காந்தி ஜெயந்தி அன்று காந்தி தொடர்பான பல தகவல்கள் வெளியாகி வருகின்றன.. ஆனால் காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த ஒரு எளிய சமையல்காரரின் மறக்கப்பட்ட கதை பற்றி பலருக்கும் தெரியாது.. 1917 ஆம் ஆண்டு சம்பாரண் சத்தியாகிரஹத்தின் போது மகாத்மா காந்திக்கு விஷம் கொடுக்க மறுத்த பீகாரைச் சேர்ந்த எளிய சமையல்காரர் படக் மியானை நினைவு கூர வேண்டிய நேரம் இது. அவரது துணிச்சல் காந்தியின் உயிரைக் […]

மகாத்மா காந்தியும் பண்டித ஜவஹர்லால் நேருவும் இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் குறிப்பிடத்தக்க பங்களிப்பைச் செய்தனர். இந்த இரண்டு மாமனிதர்களும் முதன்முதலில் 1916 ஆம் ஆண்டு காங்கிரஸ் அமர்வின் போது சந்தித்தனர். மகாத்மா காந்திக்கும் பண்டித ஜவஹர்லால் நேருவுக்கும் இடையிலான முதல் சந்திப்பு இந்திய சுதந்திர இயக்க வரலாற்றில் ஒரு முக்கியமான தருணமாகும். சுருக்கமாக இருந்தாலும், அது பின்னர் சுதந்திரப் போராட்டத்தை வடிவமைத்து சுதந்திர இந்தியாவிற்கு அடித்தளம் அமைத்த ஒரு உறவின் […]

ஆண்டு தோறும் செப்டம்பர் 30 ஆம் தேதி சர்வதேச மொழிபெயர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இன்று, ஒவ்வொரு மொழியிலும் ஒரே மாதிரியாகப் பயன்படுத்தப்படும் சொற்களைப் பற்றி அறிந்து கொள்வோம். சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்: சர்வதேச மொழிபெயர்ப்பு தினம் இன்று, செப்டம்பர் 30 ஆம் தேதி உலகம் முழுவதும் கடைபிடிக்கப்படுகிறது. மொழிபெயர்ப்பாளர்கள், உரைபெயர்ப்பாளர்கள் மற்றும் சொற்களஞ்சிய வல்லுநர்களின் பங்களிப்புகளை அங்கீகரிப்பதற்காக இந்த நாள் அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இந்த மொழி வல்லுநர்கள் உலகெங்கிலும் உள்ள கலாச்சாரங்களுக்கு […]

ஆண்டுதோறும் இன்று (செப்டம்பர் 29) உலக இதய தினம் கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் இதய நோயின் முக்கியத்துவம், அதன் தடுப்பு மற்றும் இதய பராமரிப்பு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதாகும். ஆரோக்கியமான இதயத்தைப் பராமரிப்பதில் உணவுமுறை முக்கிய பங்கு வகிக்கிறது. உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உங்கள் உணவில் சேர்க்கக்கூடிய சில உணவுகளைப் பற்றி அறிந்து கொள்வோம். பச்சை இலை காய்கறிகள்: கீரை போன்ற பச்சை இலைக் காய்கறிகளில் […]

காண்டாமிருகங்களை பாதுகாப்பது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில், ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 22 ஆம் தேதி உலக காண்டாமிருக தினம் அனுசரிக்கப்படுகிறது. 2010 ஆம் ஆண்டில், உலக வனவிலங்கு நிதியம்-தென்னாப்பிரிக்கா உலக காண்டாமிருக தினத்தைத் தொடங்கியது, அடுத்த ஆண்டே அது உலகளாவிய நிகழ்வாக மாறியது . உலக காண்டாமிருக தினத்தின் முக்கியத்துவம்: பல வனவிலங்கு இனங்களைப் போலவே, காண்டாமிருகங்களும் வேட்டையாடுதல் மற்றும் சட்டவிரோத வனவிலங்கு வர்த்தக அச்சுறுத்தலை எதிர்கொள்கின்றன. சர்வதேச […]

உலக அல்சைமர் தினம் ஆண்டுதோறும் செப்டம்பர் 21 ஆம் தேதி கடைபிடிக்கப்படுகிறது. இந்த நாளைக் கொண்டாடுவதன் நோக்கம் மக்களிடையே அல்சைமர் பற்றிய விழிப்புணர்வைப் பரப்புவதாகும். அல்சைமர் என்ற பெயரைக் கேட்டாலே பெரும்பாலும் முதுமையில் மறதியால் ஏற்படும் ஒரு நோயை நினைவுக்குக் கொண்டுவருகிறது. சிலநேரம் நம்மில் பலர் விளையாட்டுத்தனமாக சொல்வதுதான்… “எனக்கு எல்லாமே மறந்து போய்ட்டா ரொம்ப நல்லா இருக்கும்”. நாம் இதை நகைச்சுவையாக சொல்வோம் என்றாலும்கூட, உண்மையாகவே இதுபோன்ற மறதி […]

உலகில் பெரும்பாலான நாடுகள் ஜனநாயக முறை அரசாங்கத்தையே நடத்தி வருகின்றன.. ஆனால் பொதுமக்கள் அரசாங்கத்தின் மீதான எப்போது இழக்கின்றனரோ, ராணுவம் அதிகாரத்தைக் கைப்பற்றும் திறன் கொண்டதாக நம்புகின்றனர் அப்போது தான் எந்தவொரு ஜனநாயகம் அல்லது அரசியல் அமைப்பிற்கும் மிகப்பெரிய சவால் எழுகிறது. இதுபோன்ற அசாராண சூழலில் ஆட்சிக் கவிழ்ப்புகள் நடைபெறுகின்றனர்.. அரசியல் ஸ்திரமின்மை, மோசமான பொருளாதார நிலைமைகள், ஊழல் மற்றும் பொதுமக்களின் அதிருப்தி ஆகியவை இதில் பெரும்பாலும் பங்கு வகிக்கின்றன. […]

கடந்த 2001ஆம் ஆண்டு செட்பம்பர் 11ஆம் தேதி தற்கொலைகுண்டு தாக்குதல்தாரிகள், அமெரிக்க பயணிகள் விமானத்தை கைப்பற்றி அதை நியூயார்க்கில் உள்ள வானுயர்ந்த கட்டடங்களில் மோதி ஆயிரக்கணக்கானவர்கள் உயிரிழக்க காரணமாக இருந்தனர். இந்த தாக்குதல் உலக வரலாற்றில் மிக மோசமான ஒரு தாக்குதல். அமெரிக்கா மட்டுமல்ல பிற நாடுகளும் இந்த தாக்குதலை அவ்வளவு எளிதாக மறந்துவிட முடியாது. அமெரிக்காவின் கிழக்கு பகுதியில் பறந்து கொண்டிருந்த நான்கு சிறிய விமானங்களை ஒரே சமயத்தில் […]