பொதுவாக பிறக்கும் ஒருவரின் கிரக நிலைகளை ஒப்பிட்டு தான் அவருடைய குணம் மற்றும் எதிர்காலம் குறித்து பல தகவல்களை ஜோதிடர்கள் கூறி வருகின்றனர். அந்த வகையில் ஒரு மனிதன் பிறந்த கிழமையை வைத்தும், அந்த கிழமைக்காண கிரகத்தை வைத்தும் தான் அந்த மனிதனின் குணாதிசயங்கள் முடிவு செய்யப்படுகிறது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமை பிறந்தவர்கள் ஆள் எப்படி?, அவர்களிடம் இருக்கக்கூடிய மூன்று சிறந்த குணங்கள் என்னென்ன? என்பதை குறித்து இந்த பதிவில் […]
ஆன்மீகம் & ஜோதிடம்
spirituality news | All the latest breaking news on spirituality. Daily news on spirituality from India and abroad. Articles on religion, ethics and conversations about spirituality from around the globe
தென்னிந்தியாவில் பிரபலமான தோசை, உலகெங்கிலும் உள்ள மக்களின் சுவை மொட்டுக்களையும் கவர்ந்துள்ளது. புளிக்கவைக்கப்பட்ட அரிசி மற்றும் உளுந்து மாவிலிருந்து தயாரிக்கப்படும் இந்த சுவையான தோசை பல ஆரோக்கிய நன்மைகளை வழங்குகிறது. தோசை மாவில் ஆரோக்கியம் மட்டுமல்ல, ஆன்மீக நன்மைகளும் அடங்கியுள்ளன. அவை என்னவென்று தெரிந்துகொள்வோம். மதுரை கள்ளழகர் கோவிலில் பெருமாளுக்கு தோசையை படைத்து பிரசாதமாக வழங்குகிறார்கள். காஞ்சிபுரம் வரதராஜபெருமாளுக்கு தோசை மாவில் மிளகு சீரகம் சேர்த்து படைக்கிறார்கள். பாடலாத்ரி நரசிம்மர் […]
ஒவ்வொரு மாதமும் பெளர்ணமி தினம் வரும். முழு பிரகாசத்துடன் ஒளி வீசும் சந்திர பகவானை தரிப்பதன் மூலமும், அவருக்கு ஒளி தரக்கூடிய சூரியனை வழிபட்டும் அருள் பெறலாம். இந்த பெளர்ணமி ஒவ்வொரு முறையும் ஒவ்வொரு கிழமைகளில் வரும். அந்த கிழமைகளுக்கு என்று தனி சிறப்பும் பரிகாரங்களும் உள்ளன. அந்தவகையில், சித்திர குப்தனின் பிறந்த நாளாக சித்திரை பௌர்ணமி கொண்டாடப்படுகிறது. இன்றைய தினம் விளக்கேற்றி வழிபாடு செய்ய நீடித்த ஆயுள் கிடைக்கும். […]
ஒவ்வொருவரும் கோபம் வரும் போது பல விதமான வார்த்தைகளை சொல்லி திட்டுவதுண்டு. சிலருக்கு கோபம் வந்தால் என்ன பேசுகிறோம் என்றே தெரியாமல் இருப்பார்கள். அப்படி கோபம் அதிகமாகும் போது நம்மையும் அறியாமல் அமங்களமான வார்த்தைகளை பயன்படுத்தி விடுவதுண்டு. இந்த வார்த்தைகள் யாரை நோக்கி சொல்கிறோமோ அந்த சொல் அவர்களை பாதிக்கிறதோ இல்லையோ, கண்டிப்பாக சொன்னவர்களை பாதிக்கும். அப்படி நான் திட்டுவதற்காக பயன்படுத்தும் மூதேவி என்ற வார்த்தைகள் எந்த மாதிரி விளைவுகளை […]
திருமாலின் 108 திவ்ய தேசங்களில் முக்கிய இடம் வகிக்கும் உலகளந்த பெருமாள் கோவில், தனிச்சிறப்புகளால் பக்தர்களை ஈர்த்துவருகிறது. காஞ்சிபுரத்தில் உள்ள இந்த தலம் 47வது திவ்ய தேசமாக கருதப்படுகிறது. இந்த கோவிலுக்குள்ளாகவே நான்கு திவ்ய தேசங்கள் திருக்காரகம், திருப்பாடகம், திருஊரகம் மற்றும் திருநீரகம் ஆகியவை அமைந்துள்ளன என்பது இதன் முக்கிய தனிச்சிறப்பாகும். இது, 108 திவ்ய தேசங்களில் வேறெங்கும் காண முடியாத அமைப்பாகும். இக்கோவிலில் வீற்றிருக்கும் மூலவர் உலகளந்த பெருமாள், […]
எல்லோரும் சொந்த வீடு வேண்டும் என்று விரும்புகிறார்கள். பணத்தை மிச்சப்படுத்தவும், வீடு வாங்க கடன் வாங்கவும் பல வருடங்கள் கடினமாக உழைக்கிறார்கள். ஆனால், புதிய வீட்டிற்கு குடிபெயர்ந்த பிறகு பலர் பிரச்சினைகளை எதிர்கொள்கிறார்கள். பழைய வீடு அல்லது வாடகை வீடு இருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று நினைக்கிறார்கள். இருப்பினும், ஜோதிட நிபுணர்கள், நாம் விரும்பியபடி வீடு கட்டி, பணம் செலவழித்து வீட்டிற்குள் நுழைந்தால் மட்டும் போதாது என்று கூறுகிறார்கள். வீட்டுப் […]
அரசமரம் ஆன்மீகத்தில் மிகமுக்கிய பங்கு வகிப்பது நம்மில் பலருக்கும் தெரியும். அதிலும் நீங்கள் ஒவ்வொரு நாளும் அரச மரத்தை சுற்றி வருவதால் அந்த நாளுக்கு ஏற்ப பலவிதமான நன்மைகள் கிடைக்கும். அரசமரத்தை திங்கள்கிழமையன்று இன்று வலம்வந்தால் வீட்டில் மங்கலக்காரியங்கள் எந்த தடையும் இல்லாமல் நடக்கும். செவ்வாய்கிழமையில் வளம் வருவது செவ்வாய் தோஷங்களை நீக்கும். புதன்கிழமையில் வலம்வந்தால் வியாபாரம் பன்மடங்கு பெருகும். கல்வியில் சிறந்து விளங்க வியாழக்கிழமையில் வளம் வர வேண்டும். […]
வாஸ்து சாஸ்திரத்தில் சனி மூலை என்பது மிகவும் முக்கியமானது. சனி மூலை என்பது வடக்கும் கிழக்கும் சந்திக்கும் இடம் அதாவது வட கிழக்கு மூலையை குறிக்கும் இது ஈசான மூலை என்றும் அழைக்கப்படுகிறது. ஒரு வீட்டு மனையின் சனி மூலை என்பது மனையினுடைய வடகிழக்கு மூலையாகும். இது நீர் நிலைகளுக்கு ஏற்ற மூலை என்பதால் இங்கு நீர் சேகரிப்பிற்கு ஒதுக்கப்பட்ட மூலையாகும். எனவே வீட்டுமனையில் இந்த மூலை தான் தாழ்ந்து […]
உலகம் முழுவதும் பல அதிசயமான மற்றும் மர்மமான சிவ பெருமான் கோயில்கள் உள்ளன. அத்தகைய ஒரு அதிசய சிவன் கோயில் இமாச்சலப் பிரதேசத்தின் குலுவில் அமைந்துள்ளது. வழக்கமாக நம்ம ஊர் கோவில்களில் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கும் என்று தான் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை குறிப்பிட்ட ஒரு கோவிலை மின்னல் தாக்கி, அங்குள்ள சிவலிங்கம் உடைந்து நொறுங்கும் அதிசயமான நிகழ்வு நடக்கிறது என்றால் உங்களால் நம்ப […]
வீட்டில் நடக்கும் அத்தனை சுப காரியங்களிலும் தேங்காய் முக்கியமானது. இன்றும் பலர் இறைவனை நினைத்து செய்யும் நல்ல காரியம் நன்றாக கைகூடுமா என்பதை தேங்காய் உடைவதை வைத்தே கணித்துவிடுவதும் உண்டு. அதனாலேயே தேங்காயை எல்லோரும் ஒன்று பலமுறை பார்த்து பார்த்து கடையில் வாங்குவோம். அப்படி இருந்த போதிலும் தேங்காய் சரியாக உடையவில்லை என்றாலோ அல்லது அழுகி இருந்தாலோ இறைவனுக்கு ஏதோ குறை வைத்துவிட்டோம் என்று பலரும் கவலைப்படுவார்கள். இது குறித்து […]

