உலகெங்கிலும் உள்ள முருகப் பெருமானின் ஆலயங்களில், அவருக்கு மிகவும் பிரியமானதாகவும், அவரது திருவடிகள் பட்டதாகவும் கருதப்படும் இரண்டு முக்கியத் தலங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று வள்ளியைத் திருமணம் செய்த வள்ளிமலை, மற்றொன்று திருவிடைக்கழி ஆகும். இவற்றுள் திருவிடைக்கழி முருகப் பெருமானுக்கு மிகவும் உகந்த தலம் எனப் புராணங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. சூரனை வதம் செய்ததால் வந்த தோஷம் : திருச்செந்தூரில் சூரபத்மனை சம்ஹாரம் செய்த பின்னர், சூரபத்மனின் மகனான இரணியாசுரன் […]

பொதுவாக, சிவன் கோயில்கள் அனைத்திலும் வருடத்தில் ஒரே ஒரு முறை, அதாவது ஐப்பசி மாத பெளர்ணமி நாளில் மட்டுமே சிவலிங்க திருமேனிக்கு அன்னத்தால் அபிஷேகம் செய்யும் அன்னாபிஷேக வைபவம் நடைபெறும். ஆனால், தமிழகத்தில் உள்ள ஒரே ஒரு சிவாலயத்தில் மட்டும், ஒவ்வொரு மாதமும் அமாவாசை தினத்தன்று சிவபெருமானுக்கு அன்னாபிஷேகம் நடத்தப்படுகிறது. அந்த சிறப்புக்குரிய ஆலயம் தான் திருவாரூரில் அமைந்துள்ள விளமல் பதஞ்சலி மனோகரர் திருக்கோயில் ஆகும். அமாவாசை அன்னாபிஷேகத்தின் சிறப்பு […]

வாஸ்து சாஸ்திரம் என்பது நமது வீடுகளின் அமைப்பு மற்றும் பொருட்களின் ஏற்பாடு மட்டுமல்ல, நமது அன்றாட பழக்கவழக்கங்களும் நம் வாழ்க்கையைப் பாதிக்கின்றன என்று கூறும் ஒரு பண்டைய அறிவியல். வீட்டில் நேர்மறை ஆற்றலை அதிகரிக்க, சில விதிகளைப் பின்பற்ற வேண்டும். அவற்றில் மிக முக்கியமானவை துடைப்பம் தொடர்பான வாஸ்து விதிகள். பொதுவாக, துடைப்பத்தை சுத்தம் செய்வதற்கு மட்டுமே பயன்படுத்துகிறோம், ஆனால் வாஸ்துவின் படி, அது லட்சுமி தேவியின் அடையாளமாகக் கருதப்படுகிறது. […]

கார்த்திகை மாதம் ஆன்மீக சிறப்புமிக்க மாதமாகும். கார்த்திகை மாதம் முழுவதும் நடைபெறும் சிவ வழிபாடு சிறப்புக்குரியதாகும். கார்த்திகை மாதம் விரதம் அனுஷ்டிப்பதால் இன்னல்கள் நீங்கி சுபிட்சம் பெருகும். அவற்றில் கார்த்திகை மாதத்தில் வரும் ஞாயிற்றுக்கிழமைகளில் செய்யப்படும் வழிபாடு மற்றும் கடைபிடிக்கப்படும் விரதம் மிக முக்கியமானதாகும். கார்த்திகை ஞாயிறு விரதம் என்பது கார்த்திகை முதல் ஞாயிறு அன்று தொடங்கப்பட்டு, தொடர்ந்து 12 வாரங்கள் ஞாயிற்றுக்கிழமைகளில் கடைபிடிக்கப்படும் விரதமாகும். நவகிரகங்கள் இந்த விரதத்தை […]