முருகப் பெருமானை வழிபடுவதற்கும், அவர் அருளைப் பெறுவதற்கும் மிகவும் உகந்த நாள் சஷ்டி திதி. மாதந்தோறும் சஷ்டி வந்தாலும், ஐப்பசி மாதத்தில் வரும் மகா கந்த சஷ்டி விழா மிகவும் சிறப்பு வாய்ந்தது. இந்த நாளில், சூரபத்மனை முருகப்பெருமான் வதம் செய்து தேவர்களைக் காத்தார். இதனால், பெரும்பாலான பக்தர்கள், ஐப்பசி அமாவாசைக்கு பிறகு வரும் பிரதமை திதி முதல் சஷ்டி அல்லது சப்தமி வரை விரதம் இருந்து வழிபடுவது வழக்கம். […]

கும்பகோணம் நகரின் முக்கிய ஆலயங்களில், உச்சிப்பிள்ளையார் கோவில் தனித்துவமான இடத்தைப் பிடித்துள்ளது. நகரத்தின் அடையாளமாக விளங்கும் இந்த ஆலயம், பக்தர்களையும் சுற்றுலாப் பயணிகளையும் ஈர்க்கும் முக்கியத் தலமாக உள்ளது. “16 படிகள் ஏறி வழிபடுவது சிறப்பு” என்ற நம்பிக்கையில் வரும் பக்தர்கள், ஒவ்வொரு படியிலும் ஒரு புதிய அனுபவத்தைப் பெறுவதாகவும், அது தங்கள் வாழ்வில் பல நன்மைகளை தருவதாகவும் நம்புகின்றனர். 16 படிகளின் சிறப்பு இந்தக் கோயிலின் மிக முக்கியமான […]

புதன் இந்த மாதம் 16 ஆம் தேதி முதல் அக்டோபர் 2 ஆம் தேதி வரை கன்னி ராசியில் சஞ்சரிப்பார். கன்னி என்பது புதனின் சொந்த வீடு மட்டுமல்ல, லக்ன வீடாகவும் இருக்கும். இது நான்கு ராசிகளுக்கும் பத்ர மகா புருஷ யோகம் என்ற ஒரு சிறந்த யோகத்தை உருவாக்குகிறது. பத்ர மகா புருஷ யோகம் 5 மகா புருஷ யோகங்களில் ஒன்றாகும். புதன் எந்த ராசியின் கேந்திர நிலைகளிலும், […]

கிரகங்கள் ஒரு குறிப்பிட்ட நிலையில் நகரும்போது, ​​சில சுப யோகங்கள் உருவாகின்றன. அத்தகைய யோகங்களில், கஜகேசரி யோகம் மிக முக்கியமானது. இந்த யோகம் குருவின் பலத்தை அதிகரிப்பதால், இது சுப பலன்களையும் வாழ்க்கையில் குறிப்பிடத்தக்க மாற்றங்களையும் தருகிறது. ஜோதிடர்களின் கூற்றுப்படி, இந்த கஜகேசரி யோகம் செப்டம்பர் 8, 2025 திங்கட்கிழமை உருவாகி உள்ளது.. இந்த யோகத்தின் செல்வாக்கால், 5 முக்கிய ராசிக்காரர்கள் சுப பலன்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்களின் நீண்டகால […]

பொதுவாக வீடுகளில் பல்லி நம் விழுவது சாதாரணமான நிகழ்வுதான். ஆனால், ஜோதிட சாஸ்திரத்தின்படி பல்லி நம் உடலின் எந்தப் பகுதியில் விழுகிறதோ, அதை வைத்து நமது எதிர்காலத்தை கணிக்கலாம் என ‘கௌளி சாஸ்திரம்’ கூறுகிறது. சில ஆலயங்களில், பல்லிகள் தெய்வமாக வணங்கப்படுகிறது. குறிப்பாக, காஞ்சிபுரம் வரதராஜ சுவாமி மற்றும் ஸ்ரீரங்கம் ரங்கநாத சுவாமி கோயில்களில் தங்க மற்றும் வெள்ளி பல்லி உருவங்கள் இடம்பெற்றுள்ளன. பல்லி விழுந்தால் என்ன செய்ய வேண்டும்..? […]

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள காளையார்கோவில் சொர்ணகாளீஸ்வரர் திருக்கோவில், மூர்த்தி, தலம் மற்றும் தீர்த்தம் என மூன்று சிறப்புகளைக் கொண்டது. தமிழ்நாட்டில் உள்ள தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் இது 200-வது ஆலயம் ஆகும். மேலும், பாண்டிய நாட்டுத் தலங்களில் இது 10-வது தலமாக விளங்குகிறது. சங்க காலத்தில், இந்த ஊர் ‘திருகானப்பேர்’ என அழைக்கப்பட்டது. சிவபெருமானின் காளை வாகனம் சுந்தரருக்கு வழி காட்டியதால் இந்த இடத்திற்கு ‘காளையார்கோவில்’ என்ற […]