உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் இந்தியா மிகப்பெரிய தவறை செய்துள்ளது என்று ரிக்கி பாண்டிங் விமர்சித்துள்ளார். ஐபிஎல் போட்டிகள் நிறைவு பெற்று தற்போது அனைவரின் கவனமும் உலக டெஸ்ட் இறுதிப்போட்டியை நோக்கி திரும்பியுள்ளது. உலகமே தற்போது மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC) 2023 இறுதிப்போட்டி இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ளது. உலக டெஸ்ட் இறுதிப்போட்டிக்கான சாம்பியன் யார் என்ற தேடலில், ஜூன் […]

ஐபிஎல் பைனலில் கடைசி ஓவரில் ரவீந்திர ஜடேஜாவுக்கு நான் வீசிய பந்து தவறான பந்து. நான் இன்னும் அதனை நினைத்துக்கொண்டே இருக்கிறேன். என்னால் இன்னும் தூங்க முடியவில்லை என்று குஜராத் வீரர் மோகித் ஷர்மா வேதனை தெரிவித்துள்ளார். ஐபிஎல் 2023-யின் இறுதிப்போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் மோதியது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த் குஜராத் அணி […]

இலங்கை வீரரும், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் இளம் வீரருமான மதிஷ பத்திரனா, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டியில் சேர்க்கப்பட்டுள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முக்கிய இளம் பந்துவீச்சாளராக, கேப்டன் தோனியின் ‘குட்புக்’கில் இடம் பெற்றுள்ள இலங்கை அணியின் கிரிக்கெட் வீரர் பத்திரனாவுக்கு இலங்கை அணி பெரிய வாய்ப்பை அளித்துள்ளது. 20 வயதான இளம் பந்துவீச்சாளர் மதீஷ பத்திரனாவை இலங்கை அணி, ஆப்கானிஸ்தானுக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட […]

தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை சாலியத் மாரடைப்பால் இன்று மரணமடைந்துள்ளார். கர்நாடக மாநிலம் பெல்தங்கடி தாலுக்காவில் உள்ள படங்கடி பொய்குடே பகுதியைச் சேர்ந்த சாலியத் தேசிய அளவிலான வாலிபால் வீராங்கனை ஆவார். 24 வயதான இவருக்கு கடந்த ஓராண்டுக்கு முன்புதான் திருமணம் நடைபெற்றுள்ளது. இவர் கடந்த ஒரு வருடமாக சிக்கமகளூரில் உள்ள கணவர் வீட்டில் வசித்து வந்துள்ளார்.  நேற்று அவருக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அவர் மங்களூரில் […]

என் மீதான பாலியல் குற்றச்சாட்டு ஆதாரத்துடன் நிரூபிக்கப்பட்டால் நான் தூக்கில் தொங்க தயார் என மல்யுத்த வீராங்கனைகளால் குற்றம் சாட்டப்பட்ட பாஜக எம்பி பிரிஜ் பூஷன் சரண் சிங் தெரிவித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய மல்யுத்த கூட்டமைப்பின் தலைவரும், பா.ஜ.க எம்.பி யுமான பிரிஜ் பூஷன் சரண் சிங் மீது 17 வயது சிறுமி உட்பட 7 மல்யுத்த வீராங்கனைகள் பாலியல் புகார் அளித்திருந்தனர். மேலும், அவர் மீது நடவடிக்கை […]

ஐபிஎல் இறுதிப்போட்டியின்போது மைதானத்தில் தேங்கிய மழைநீரை வெளியேற்ற பஞ்சு, ஹேர் ட்ரையர் போன்றவற்றை பயன்படுத்திய பிசிசிஐயை கலாய்த்து ரசிகர்கள் ட்ரோல் செய்து வருகின்றனர். ஐபிஎல் 2023 16வது சீசனின் இறுதிப்போட்டி அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்றது. இதில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் குஜராத்தை வீழ்த்தி சென்னை அணி வெற்றிபெற்று 5வது முறையாக சாம்பியன் மகுடம் சூடியது. முன்னதாக முதல் இன்னிங்ஸில் குஜராத் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை […]

ஐபிஎல் போட்டியில் சிஎஸ்கே வெற்றி பெற்றதற்கு வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள இந்திய மல்யுத்த வீராங்கனை சாக்‌ஷி மாலிக், தன் ட்விட் பதிவில், “எம்எஸ் தோனி மற்றும் சிஎஸ்கேக்கு வாழ்த்துகள் தெரிவித்துள்ளார். கடந்த ஒரு மாதங்களுக்கு மேலாக பாலியல் குற்றச்சாட்டில் உரிய நீதி கோரி டெல்லியில் சாக்‌ஷி மாலிக், வினேஷ் போகத், பஜ்ரங் புனியா உள்ளிட்ட நாட்டின் முன்னணி மல்யுத்த வீரர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். விவசாய அமைப்புகள் , […]

நடப்பாண்டுக்கான ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடிய அணிகள் மற்றும் வீரர்களுக்கு விருதுகள் மற்றும் பரிசுத்தொகைகள் வழங்கப்பட்டன. முழுவிவரங்களை இந்த பதிவில் பார்க்கலாம். ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வெகுவிமர்சியாக தொடங்கிய ஒவ்வொரு போட்டியிலும் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லாமல் நடைபெற்றது. இதிலும் குறிப்பாக ஒவ்வொரு போட்டியிலும் வீரர்கள் திறமைகளை வெளிப்படுத்தினர். அந்தவகையில், சிறப்பாக விளையாடிய வீரர்களுக்கு இறுதிப்போட்டிக்கு பிறகு விருது மற்றும் பரிசுத்தொகைகள் அறிவிக்கப்படும். அதன்படி, நடப்பாண்டுக்கான ஐபிஎல் இறுதிப் போட்டியில் வெற்றி […]

நல்லவங்களுக்கு நல்லது தான் நடக்கும், அப்படி நான் பார்த்த நல்லவர்களில் சிறந்தவர் தோனி’ என்று குஜராத் டைட்டன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா தெரிவித்துள்ளார். நடப்பாண்டுக்கான ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில், குஜராத் அணியை அதன் சொந்த மண்ணில் தோற்கடித்து 5-வது முறையாக கோப்பையை வென்றுள்ளது தோனி தலைமையிலான சென்னை அணி. வெற்றி வாய்ப்பு இருந்தும் கடைசி இரண்டு பந்துகளில் ஜடேஜாவின் அதிரடி சிக்ஸர் மற்றும் பவுண்டரியால் குஜராத் அணி […]

எனக்கு எளிதானது என்னவென்றால், நன்றி சொல்வது தான், ஆனால், கஷ்டமானது என்னவென்று கேட்டால் அது அடுத்த சீசனுக்காக நான் 9 மாதம் கடினமாக உழைக்க வேண்டும் என்று தோனி கூறியுள்ளார். மழைக்கு பிறகு ரிசர்வ் டே-யில் அகமதாபாத் நரேந்திரமோடி ஸ்டேடியத்தில் நடைபெற்ற ஐபிஎல் இறுதிப்போட்டியில் சென்னை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் குஜராத் அணியை வீழ்த்தி ஐபிஎல் வரலாற்றில் 5-வது முறையாக கோப்பையை கைப்பற்றியது. குஜராத் அணி முதலில் பேட் […]