Flipkart has launched a new sale offering substantial discounts of up to 50 percent on split ACs from popular companies.
தொழில்நுட்பம்
Technology News – Get latest technology news on gadgets launches in India such as Mobile Phone, Latest Smartphones and Computers.
ஸ்மார்ட்போன்களில் நிலநடுக்கத்தின் போது எச்சரிக்கை செய்யும் வசதி சில காலமாக இருந்து வந்தாலும், கூகிள் தனது ஸ்மார்ட்வாட்ச்களில் இந்த வசதியை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. புதிய அறிக்கையின்படி, Wear OS கடிகாரங்களில் நிலநடுக்க எச்சரிக்கைகளை முன்கூட்டியே வழங்கும் வசதியை அறிமுகப்படுத்தவுள்ளதாக தெரிகிறது. இதுபோன்ற பேரிடர் நிகழ்வுகள் ஏற்பட்டால் மக்கள் முன்கூட்டியே பாதுகாப்பான இடத்திற்கு விரைந்து செல்ல உதவும். அந்தவகையில், கூகுள், Wear OS ஸ்மார்ட்வாட்ச்களுக்கு முன்கூட்டிய பூகம்ப எச்சரிக்கைகளை […]
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் புறப்பட்டு சென்ற ஏர் இந்தியா AI-171 விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் கீழே விழுந்து நொறுங்கியது. உடனே தீப்பிடித்து எரிந்ததில் பயணிகள், விமான ஊழியர்கள் என 240க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்திய விமானத்துறையின் வரலாற்றில் மீண்டும் கரும்புள்ளி வைத்தது போல் மாறிவிட்டது. இப்பெரும் துயரச் சம்பவத்தின் இடம் இன்னும் சிதைந்த உலோகங்களும் புகை மூட்டத்துடனும் இருக்க, மீட்பு படையினர் தொடர்ந்து பணியாற்றிக் கொண்டிருக்கிறார்கள். […]
ஆப்பிள் நிறுவனம், கடந்த திங்கட்கிழமை தனது WWDC 2025 மாநாட்டில் iOS 26 ஆப்ரேட்டிங் சிஸ்டம் அறிமுகப்படுத்தியது. இதோடு இதர பல முக்கிய அம்சங்களையும் அறிமுகம் செய்தது. ஆப்பிள் ரசிகர்கள் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ஒன்று இந்த WWDC மாநாடு. ஒவ்வொரு வருடமும் ஆப்பிள் நிறுவனம் இந்த மாநாட்டில், இந்நிறுவனம் தயாரித்துள்ள புதிய சாப்ட்வேர் மற்றும் தொழில்நுட்பத்தை மக்களுக்கு அறிமுகம் செய்யும். இந்த கூட்டத்தின் பின்பு ஆப்பிள் பங்குகளின் நிலை […]
UPI பேமெண்ட்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், ஆகஸ்ட் 1 முதல் புதிய விதிகள் அமலுக்கு வர உள்ளன. கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகளைப் பயன்படுத்தும் கோடிக்கணக்கான பயனர்களுக்கு ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. ஆகஸ்ட் 1 முதல், இந்திய தேசிய கொடுப்பனவு கழகம் அதாவது NPCI அதன் பயன்பாட்டு நிரலாக்க இடைமுகத்தை (API) பயன்படுத்துவது தொடர்பாக புதிய விதிகளைக் கொண்டு வர உள்ளது. […]
இன்றைய காலகட்டத்தில் கோடிக்கணக்கான மக்கள் UPI பரிவர்த்தனை வசதியைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது அதிகரித்து வருகிறது. இதற்காக UPI வசதி அதிகம் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில் பேடிஎம் தனது வாடிக்கையாளர்களுக்காக ஒரு புதிய வசதியை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான UPI ID- ஐ உருவாக்க முடியும். இதன் மூலம் மொபைல் நம்பரை வெளிப்படுத்தும் சிரமங்கள் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. புதிய வசதியின் முக்கிய […]
கூகிள் தலைமை நிர்வாக அதிகாரி சுந்தர் பிச்சை சமீபத்தில் ப்ளூம்பெர்க் தொழில்நுட்ப உச்சி மாநாட்டில், கூகிள் நிறுவனத்தின் எதிர்கால தலைமைத்துவத்தில் செயற்கை நுண்ணறிவு (AI) முக்கிய பங்கு வகிக்கும் என்று கூறினார். எதிர்காலத்தில் கூகிளின் தலைமை நிர்வாக அதிகாரி யார் என்று கேட்டபோது, அவர் ஒரு சுவாரஸ்யமான பதிலைச் சொன்னார். அடுத்த தலைமை நிர்வாக அதிகாரி ஒரு மனிதராக இருக்கலாம். அல்லது அதை AI வழிநடத்தலாம். அவர் பதிலளித்தார். யார் […]
மொபைல் போன்களில் வரும் போலியான லிங்க் மூலம் மின்கட்டணத்தை செலுத்தி ஏமாற வேண்டாம் என மின்சார வாரியம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இது தொடர்பாக மின்சார வாரியம் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியதாவது; மின் கட்டணம் செலுத்த சொல்லி அறிவிக்கப்படாத எண்கள் அல்லது இணையத் தொடுப்புகளில் இருந்து வந்தால் அவற்றை தவிர்க்கவும் எனவும் அதிகாரப்பூர்வ வலைத்தளம்/மொபைல் செயலி மூலம் மட்டுமே மின் கட்டணம் செலுத்த வேண்டும். மேலும் அந்த பதிவில், […]
ரிலையன்ஸ் ஜியோ இந்தியாவின் மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனமாகும். நாட்டின் பெரும்பாலான மொபைல் பயனர்கள் ஜியோ சிம் கார்டை பயன்படுத்தி வருகின்றனர். நீங்களும் ஒரு ஜியோ பயனராக இருந்து, நீண்ட செல்லுபடியாகும் மலிவு விலையில் ரீசார்ஜ் திட்டத்தைத் தேடுகிறீர்களானால், இந்தச் செய்தி உங்களுக்கு மிகவும் முக்கியமானதாக இருக்கும். இன்று ஜியோவின் மூன்று ரீசார்ஜ் திட்டங்கள் பற்றி பார்க்கலாம்.. 84 நாட்கள் செல்லுபடி காலம் உள்ளிட்ட மிகச் சிறந்த நன்மைககளை பெற முடியும்.. […]
சோசியல் மீடியாவில் பிரைவசி பற்றிய கவலைகள் தினந்தோறும் அதிகரித்து வருகிறது. இந்நிலையில் தான், ஒரு அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, உலகம் முழுவதும் கோடிக்கணக்கான பயனாளர்கள் பயன்படுத்தும் மெட்டா (Meta) மற்றும் யாண்டெக்ஸ் நிறுவனங்கள், பயனர்களின் பிரவுசிங் ஹிஸ்டரியை அனுமதியின்றி சேகரித்து வருவதாக கூறப்படுகிறது. பொதுவாக, ஆண்டிராய்டில் பாதுகாப்பு அமைப்பு காரணமாக, ஒரே மொபைலில் உள்ள மற்ற செயலிகளில் தகவல்களை பரிமாற்றம் செய்ய முடியாது. இந்நிலையில், மெட்டா நிறுவனம் அந்த […]

