சீர்திருத்தம் செய்யப்பட்ட புதிய ஜிஎஸ்டி இன்று முதல் அமலுக்கு வருவதால் பல பொருள்களின் விலை குறையவுள்ளது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமையிலான ஜிஎஸ்டி கவுன்சில் கடந்த மாதம் மிகப்பெரிய மாற்றத்தை அறிவித்தது. இதன் அடிப்படையில், தற்போதைய நான்கு வகை வரி படிநிலைகள் சுருக்கப்பட்டு, மூன்று பிரிவுகளாக அறிவிக்கப்பட்டுள்ளன: 5% – அத்தியாவசியப் பொருட்கள்18% – பெரும்பாலான பொருட்கள் மற்றும் சேவைகள்40% – பிற பொருட்கள் (தூயிலை, மதுபானம், பந்தயம், ஆன்லைன் […]

தமிழ்நாடு அரசு, மீன் வளர்ப்பு மற்றும் வேளாண்மைத் துறையில் உள்ள தொழில்முனைவோரின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில், பல்வேறு மானிய திட்டங்களை அறிவித்துள்ளது. இத்திட்டங்கள் மூலம் விவசாயிகள் மற்றும் மீன் வளர்ப்பு தொழில் செய்வோர், தங்கள் தொழிலை விரிவாக்கி கொள்ள முடியும். நன்னீர் மீன்வளர்ப்பு : ஒரு ஹெக்டேருக்கு ஆகும் மொத்த செலவு ரூ.11 லட்சத்தில், பொதுப் பிரிவினருக்கு ரூ.4.40 லட்சம் (40%) வரையும், பெண்கள் மற்றும் ஆதிதிராவிடர் பிரிவினருக்கு ரூ.6.60 […]

நாட்டில் சரக்கு மற்றும் சேவை வரி (GST) அமைப்பில் பெரிய மாற்றங்களைக் கொண்டுவரும் சீர்திருத்தங்கள் நாளை, செப்.22 முதல் அமலுக்கு வருகின்றன. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இது குறித்து பேசுகையில், ஜிஎஸ்டி வரி விகிதங்கள் 4 அடுக்குகளில் இருந்து (5%, 12%, 18% மற்றும் 28%) இரண்டு அடுக்குகளாக (5% மற்றும் 18%) குறைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். சில குறிப்பிட்ட பொருட்கள் மற்றும் ‘sin goods’ எனப்படும் ஆடம்பரப் பொருட்களுக்கு […]

நாட்டின் பொதுப் போக்குவரத்து வரலாற்றில் ஒரு மைல்கல்லாக, ‘சென்னை ஒன்’ என்ற ஸ்மார்ட்ஃபோன் செயலியை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிமுகப்படுத்த உள்ளார். சென்னையின் பல்வேறு போக்குவரத்து சேவைகளை ஒரே குடையின் கீழ் கொண்டுவரும் இந்த புதுமையான செயலியை, சென்னை ஒருங்கிணைந்த பெருநகர போக்குவரத்து ஆணையம் வடிவமைத்துள்ளது. இந்த செயலியின் அறிமுகம், CUMTA-வின் இரண்டாவது ஆணையக் கூட்டத்தில் நடைபெற இருக்கிறது. இந்த கூட்டத்தில், முதல்வர் இந்த செயலியைத் தொடங்கி வைப்பதோடு, அடுத்த […]

இந்தியாவில் பல்வேறு மருந்து நிறுவனங்களால் தயாரிக்கப்பட்ட 32 மருந்து மாதிரிகள் தரமற்றவை என மத்திய மருந்து ஆய்வகங்கள் நடத்திய சோதனையில் கண்டறியப்பட்டுள்ளன. இந்த தகவலை மத்திய சுகாதார அமைச்சக அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர். ஒவ்வொரு மாதமும் வழக்கமான ஆய்வு நடவடிக்கையின் ஒரு பகுதியாக, மத்திய மருந்துகள் தரநிலை கட்டுப்பாட்டு அமைப்பு அதன் இணையதளத்தில் தரமற்ற மற்றும் போலியான மருந்துகளின் பட்டியலை வெளியிடுகிறது. அதன்படி, ஆகஸ்ட் மாதத்திற்கான சோதனையில், மத்திய மருந்து ஆய்வகங்கள் […]

நவீன தொழில்நுட்ப உலகில், நமது செல்போன் எண் என்பது அரசு சேவைகளை பெற முக்கிய அடையாளமாக மாறிவிட்டது. குறிப்பாக ஓட்டுநர் உரிமம் தொடர்பான அனைத்து தகவல்களும், புதுப்பித்தல்களும், விதிகளும் நமது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்குத்தான் நேரடியாக அனுப்பப்படுகின்றன. எனவே, நமது மொபைல் எண் மாறும்போது, அதை ஓட்டுநர் உரிமத்தில் புதுப்பிக்க வேண்டும். இந்நிலையில், தற்போதைய டிஜிட்டல் இந்தியா திட்டத்தின் கீழ், அரசின் பல சேவைகள் இப்போது ஆன்லைனில் கிடைக்கின்றன. […]

இன்றைய பொருளாதார சந்தையில், முதலீட்டாளர்கள் தங்கம், மியூச்சுவல் ஃபண்ட் மற்றும் ஃபிக்சட் டெபாசிட் போன்ற முதலீடுகளை நோக்கியே கவனம் செலுத்துகின்றனர். ஆனால், பலரும் கண்டுக்கொள்ளாத ஒரு முதலீட்டு வாய்ப்பு, வெண்மையாக ஜொலிக்கும் வெள்ளியில் உள்ளது. கடந்த ஓராண்டில் மட்டும் வெள்ளி முதலீடுகள் கொடுத்த லாபம், நம்மை ஆச்சரியப்பட வைக்கலாம். ஆபரணமா? ETF-ஆ? வெள்ளியில் முதலீடு செய்ய முடிவெடுத்தால், முதலில் மனதில் எழும் கேள்வி, அதை ஆபரணங்களாக வாங்குவதா அல்லது நிதியாக […]

மூடி திடீரென வெடித்து சிதறும் அபாயம் உள்ளதாக எழுந்த புகாரையடுத்து, 8,50,000 stainless steel பாட்டில்களை வால்மார்ட் நிறுவனம் திரும்பப்பெற்றுள்ளது. அமெரிக்கா முழுவதும் கடைகளில் வால்மார்ட் நிறுவனத்தின் “Ozark Trail 64 oz Stainless Steel Insulated Water Bottles” எனும் பாட்டில்களை விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதையடுத்து, இதை வாங்கிய பயன்படுத்தி வாடிக்கையாளர்களிடமிருந்து புகார்கள் எழுந்தன. கார்பனேட்டட் பானங்கள், பழச்சாறு அல்லது பால் போன்றவற்றை அடைத்து வைத்து நீண்ட […]

நமது நாட்டின் எதிர்காலத் தூண்களான பெண் குழந்தைகளின் வாழ்வுக்கு நிதிப் பாதுகாப்பு அளிப்பது ஒவ்வொரு பெற்றோரின் கனவு. அந்தக் கனவை நனவாக்க உதவும் திட்டங்களில் ஒன்றுதான் செல்வ மகள் சேமிப்புத் திட்டம் (சுகன்யா சம்ரித்தி யோஜனா). இந்த திட்டம் ஒரு சாதாரண சேமிப்புத் திட்டமாக மட்டுமின்றி, ஒரு பெண் குழந்தையின் கல்வி, திருமணம், மருத்துவ தேவைகளுக்கு பெரும் உதவியாக இருக்கிறது. இத்திட்டத்தை தபால் நிலையங்களில் தொடங்கலாம். பிரதமர் மோடியால் கடந்த […]

இந்திய சினிமாவின் மிக உயர்ந்த விருதான தாதாசாகேப் பால்கே விருதுக்கு மோகன்லால் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இது தாதாசாகேப் பால்கேவின் நினைவாக நிறுவப்பட்டது. நடிகை தேவிகா ராணி 1969 ஆம் ஆண்டு இந்த விருதைப் பெற்ற முதல் நபர் ஆவார். மலையாள சூப்பர் ஸ்டார் மோகன்லால் 2023 ஆம் ஆண்டிற்கான தாதாசாகேப் பால்கே விருதைப் பெறுவார். செப்டம்பர் 23, 2025 அன்று நடைபெறும் 71வது தேசிய திரைப்பட விருது வழங்கும் விழாவில் அவருக்கு […]