சமூக வலைதளங்களை பயன்படுத்தக்கூடிய மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதேபோல், சமூக வலைதளங்களில் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. இன்று அனைத்து தரப்பு மக்களுமே பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டகிராம், யூடியூப் போன்ற சமூக வலைதளங்களை பயன்படுத்தி வருகின்றனர். இந்த சமூக வலைதளங்களில் இருக்கும் பிரபலங்கள் மற்றும் இன்ஃப்ளுயன்சர்களை ஏராளமான மக்கள் பின்தொடர்கின்றனர். இவர்கள் பரிந்துரைக்கும் பொருட்கள் மக்களிடம் நல்ல வரவேற்பை பெறுகின்றன. மேலும், […]

தென் தமிழக மாவட்டங்களில் 5 நாட்களுக்கு மிதமான மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக, இன்று தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் நாளை முதல் மார்ச் 10ஆம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், அதனை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் […]

ரூ.500 நோட்டுகளை ரொக்கமாக வைத்துள்ள நபராக நீங்கள்..? உங்களுக்கு ஒரு பெரிய செய்தி வெளியாகியிருக்கிறது. இதுகுறித்த தகவலை இந்திய ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. சந்தையில் 2 வகை 500 ரூபாய் நோட்டுகளானது கிடைக்கும் நிலையில், இரண்டுக்கும் குறிப்பிடத்தக்க வேறுபாடில்லை. அதாவது முதல் பார்வையில் இதன் வேறுபாடுகளை அடையாளம் காண்பது என்பது கடினம். இதில் ஒருவகை நோட்டுகள் போலியானது என கூறப்படுகிறது. இது தொடர்பாக இணையத்தில் வீடியோ ஒன்றும் வைரலாகி வருகிறது. […]

இந்தியாவில் மருத்துவ படிப்பில் சேர்வதற்கு மாணவர்கள் நீட் தேர்வு எழுதி, அதில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வுக்கு ஏப்ரல் 6ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதள முகவரிக்குள் சென்று விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இளநிலை மருத்துவ படிப்பில் சேர்வதற்கான நீட் தேர்வு கட்டணத்தை தற்போது […]

யோகா 2023க்கான பிரதமரின் விருதுகளுக்கு ஆயுஷ் அமைச்சகம் விண்ணப்பங்களைக் கோரியுள்ளது. தேசிய மற்றும் சர்வதேச அளவில் யோகாவின் மேம்பாடு மற்றும் அதனை ஊக்குவிப்பதற்காக மேற்கொள்ளப்படும் தலைசிறந்த முயற்சிகளை கௌரவிக்கும் வகையில் இந்த விருது வழங்கப்படுகிறது. இரண்டு தேசிய விருதுகள் இந்தியாவைச் சேர்ந்தவர்களுக்கும், இரண்டு சர்வதேச விருதுகள் இந்தியா மற்றும் வெளிநாடுகளைச் சேர்ந்தவர்களுக்கும் வழங்கப்படும். 9-வது சர்வதேச யோகா தினமான ஜூன் 21, 2023 அன்று வெற்றியாளர்கள் அறிவிக்கப்படுவார்கள். இந்த விருதுக்கான […]

நாட்டில் வேலைக்கு செல்லும் பெண்களின் எண்ணிக்கை குறைந்து வருவதாக பல்வேறு ஆய்வுகள் தெரிவிக்கின்றன. படித்த பெண்கள் கூட, அலுவலகங்களுக்கு வேலைக்கு செல்லாமல் வீட்டிலேயே குழந்தைகளை கவனித்துக் கொண்டு இருக்கின்றனர். பெண்கள் வீட்டு வேலைகளுக்கு மட்டுமே பொறுப்பானவர்கள் என்ற ஆணாதிக்க எண்ணமே இதற்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று, இதனை நிரூபிக்கும் விதமாக அமைந்துள்ளது. IZA – Institute of Labor Economics என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ள […]

தமிழ்நாட்டில் பொதுவாக கோவில் திருவிழாக்கள் வெகு விமர்சையாக கொண்டாடப்படுவது வழக்கம். அந்தவகையில், கோவில்களில் பக்தர்கள் லட்சக்கணக்கானோர் கலந்து கொள்வதால் அவர்களின் வசதிக்காக அன்றைய தினம் மாவட்டத்திற்கு விடுமுறை அளிக்கப்படும். இந்நிலையில், தருமபுரி மாவட்டத்தில் பாலக்கோடு மாரியம்மன் திருவிழாவை முன்னிட்டு நாளை (மார்ச் 8ஆம் தேதி) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கும் வரும் 8ஆம் தேதி விடுமுறை என்றும் அன்றைய தினம் நடைபெற […]

சமீப காலமாக ஆன்லைன் பண மோசடிகள் அதிகரித்து வருகின்றன. இன்றைய காலகட்டத்தில் நாட்டில் பலரும் டிஜிட்டல் பண பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்துவிட்டனர். இதனால் டிஜிட்டல் பணபரிவர்த்தனைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இது ஒருபுறம் இருக்க மறுபுறம் ஆன்லைன் மோசடிகளின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. இதனால் மக்கள் தங்களுடைய பணத்தை இழந்து பாதிக்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில், ”பான் கார்டுகளை அப்டேட் செய்யாவிட்டால் வங்கிக் கணக்குகள் நீக்கப்படும்” என்பது […]

நாடு முழுவதும் உள்ள விவசாயிகளுக்கு மத்திய-மாநில அரசுகள் சார்பில் பிரதம மந்திரி ஃபஸல் பீமா யோஜனா (PMFBY) திட்டம் மூலம் காப்பீடு வழங்கப்பட்டு வருகிறது. நடப்பாண்டில் திருவாரூர், மயிலாடுதுறை, வேலூர், தஞ்சை, ஈரோடு, கன்னியாகுமரி, நாமக்கல், செங்கல்பட்டு, ராமநாதபுரம், திருவண்ணாமலை மற்றும் திண்டுக்கல் ஆகிய 11 மாவட்ட விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு வழங்கப்பட உள்ளது. இந்த மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள், தானிய பயிர் மற்றும் எண்ணெய் வித்து பயிர்களுக்கு 1.5%, […]

சென்னை பெருநகர மாநகராட்சியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பித்து பயன்பெறலாம். பணியின் பெயர்: Medical Officer Staff Nurse Multipurpose Health Worker Support Staff காலி பணியிடங்கள்: 560 சம்பளம்: ரூ.8,500 முதல் ரூ.60,000 வரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கல்வித் தகுதி: டிப்ளமோ, 8ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். வயது […]