நம் வீட்டில் சாமி சிலைகளை வைத்திருப்பது எப்போதுமே ஒரு மங்களகரமானதாக கருதப்படுகிறது, ஏனெனில் நீங்கள் வெவ்வேறு தெய்வங்களின் சிலைகளை வைத்திருக்கும்போது, ​​தெய்வங்களின் ஆசீர்வாதம் நமக்கும் கிடைக்கும் என்று நம்பப்படுகிறது, மேலும் இது வீட்டில் இருந்து பிரச்சனைகள் மற்றும் சச்சரவுகளைத் தடுக்க உதவுகிறது என்று பலரின் நம்பிக்கையாக உள்ளது.. இருப்பினும், ஒரு வீட்டில் எப்படி, எந்த சிலைகளை வைக்க வேண்டும் என்பதில் சில விதிகள் மற்றும் நம்பிக்கைகள் உள்ளன.. ஒருவேளை, சரியான […]

டெல்லியில் நடைபெற்ற ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் பென்சில், ஷார்பர் மீதான ஜிஎஸ்டி வரி 18 சதவீதத்திலிருந்து 12 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளதாக மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார். சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி)கடந்த 2017 ஜூலை 1-ம் தேதி அமல்படுத்தப்பட்டது. இதனால் மாநிலங்களுக்கு ஏற்படும் இழப்பீடு, 5 ஆண்டு காலத்துக்கு வழங்கப்படும் என ஜிஎஸ்டி சட்டத்தில் உறுதி அளிக்கப்பட்டது. அதன்படி, மாநிலங்களுக்கான ஜிஎஸ்டி இழப்பீடு தொகையை மத்திய அரசு […]

புளோரிடாவின் புதிய கருக்கலைப்பு சட்டம் அமல்படுத்தப்பட்டுள்ளதால், பிறந்தவுடன் இறந்துவிடும் என்று தெரிந்தே குழந்தையை பெற்றெடுக்கவேண்டிய நிலை அமெரிக்காவை சேர்ந்த தம்பதிக்கு ஏற்பட்டுள்ள சம்பவம் மிகுந்த வேதனை அளிக்கிறது. கடந்த ஆண்டு அமெரிக்க உச்சநீதிமன்றம் நாடு தழுவிய கருக்கலைப்பு உரிமைகளை ரத்து செய்ததை அடுத்து, புளோரிடாவில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் கரு மற்றும் குழந்தை இறப்புக் குறைப்புச் சட்டத்தை அமல்படுத்தியது. இந்த புதிய சட்டத்தை அறிமுகப்படுத்தியதன் மூலம், கருவுற்ற 15 […]

பெண்களுக்கு, மாதவிடாய் காலங்களில் ஏற்படும் இடுப்புவலி மற்றும் வயிற்று வலிக்கு பிரண்டை துவையல் பயன்படுத்தினால் வலி இல்லாமல் போகும் பெண்களுக்கு ஏற்படும் கால்சியம் குறைபாட்டிற்கு இது ஒரு அருமருந்தாக பயன்படுகிறது. மேலும், இதன் பயன்கள் குறித்து பார்க்கலாம் உணவே மருந்து என்ற அடிப்படையில் நம் முன்னோர்கள் நம்மைச் சுற்றி விளையக்கூடிய பல்வேறு மருத்துவ குணமிக்க காய்கள், பழங்கள், கீரைகள், தண்டுகள் வேர்கள் என பல்வேறு தாவர இனங்களையும் உணவாக சமைத்து […]

அடுப்பில் வைத்து சூடப்பட்ட கிரில் போன்ற உணவுகளை அடிக்கடி சாப்பிட்டால் உடல் நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்று மருத்துவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். மேலும் இதனால் ஏற்படும் பாதிப்புகள் என்ன என்பது பற்றி இந்த பதிவில் பார்க்கலாம். உணவகங்களுக்குச் சென்று சிக்கன், மட்டன் போன்ற அசைவ உணவு வகைகளை ரசித்து உண்பெதென்பது தற்போது ஃபேஷனாகி வருகிறது. இறைச்சி அல்லது கடல் உணவு வகைகளை லேசான வேக்காட்டில் வேக வைத்து எடுத்துக் கொண்டு […]

சிஎஸ்சியின் சேவைகளை ரேஷன் கடைகளில் அனுமதிப்பதன் மூலம் கடை விற்பனையாளர்களின் (Ration Shops Dealers) வருமானத்தை ரூ.50 ஆயிரமாக உயர்த்த முடியும் என உணவு மற்றும் பொது விநியோகத்துறை செயலாளர் சஞ்ஜீவ் சோப்ரா தெரிவித்துள்ளார். நாட்டில், தற்போது 5,27,930 நியாய விலைக் கடைகள் உள்ளன. இதில், 3 லட்சத்திற்கும் அதிகமான கடைகளை (565) தனியார் நபர்கள் நிர்வகித்து வருகின்றனர். இவர்கள், பொது விநியோக பொருட்களை மட்டுமே விற்பதன் மூலம் தங்களின் […]

தமிழ்நாடு சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத்துறையில் உள்ள பல்வேறு காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணிக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 20ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் பெயர் பணியிடங்கள் கல்வித் தகுதி சம்பளம் Project Associate 4 MBA, ஏதாவது ஒரு துறையில் பட்டப்படிப்புசுற்றுச்சூழல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும் ரூ.60,000 Accountant 1 M.com (அல்லது) Tally மென்பொருள் 5 ஆண்டுகள் […]

தமிழகத்தில் செயல்பட்டு வரும் பல்வேறு பல்கலைக்கழகங்களின் 21 பட்டப்படிப்புகளை அரசுப் பணிகளுக்கு இணை கல்வித் தகுதிகளாக ஏற்றுக்கொள்ள முடியாது என்று தமிழ்நாடு உயர்க்கல்வித் துறை தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் பல்வேறு பணிகளுக்கு இணையான கல்வித் தகுதி சார்ந்த விவரங்கள் இதோ… அவினாசிலிங்கம் மனையியல் மற்றும் உயர்கல்விக் கழகம் வழங்கும், B.Sc., Special Education and physics மற்றும் B.Sc. Special Education and Rehabilitation of physics பட்டமும், காலிகட் […]

நம் நாட்டில் பல ரகசியங்கள் நிறைந்த மர்மமான இடங்கள் பல உள்ளன.. அந்த வகையில் இமாச்சல பிரதேசம் மாநிலத்திலும் இதே போன்ற பல மர்மமான இடங்கள் உள்ளன. அப்படி ஒரு மர்ம கிராமத்தை பற்றி தான் தற்போது பார்க்கப் போகிறோம். ஹிமாச்சல பிரதேசத்தில் இருந்த குலு மாவட்டத்தில் சுமார் 12 ஆயிரம் அடி உயரத்தில் அமைந்துள்ள மலானா கிராமம் முற்றிலும் தனித்துவமானது. அழகான பள்ளத்தாக்குகளால் சூழப்பட்ட இந்த கிராமம் உலகம் […]

இன்ஸ்டாகிராமில் பிராட்காஸ்ட் சேனல் என்னும் பிரத்யேக வசதியினை மெட்டா புதிதாக அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தை ஃபேஸ்புக் மற்றும் மெசெஞ்சரிலும் விரைவில் கொண்டுவரப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய சூழலில் இணையதள பயன்பாடு உலகம் முழுவதும் அதிகரித்து வருகிறது.சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பேஸ்புக், ட்விட்டர், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட பலவற்றில் தங்கள் கணக்குகளை தொடங்கி பல்வேறு அரசியல் தலைவர்கள் முதல் சினிமா பிரபலங்கள் என பலரையும் பின்தொடர்கின்றனர். மேலும், இளைஞர்கள் மத்தியில் […]