நகரங்களில் வேலையின்மை விகிதம் 17.2% லிருந்து 17.9% ஆக அதிகரித்துள்ளது. கிராமங்களிலும் இந்த எண்ணிக்கை 12.3% லிருந்து 13.7% ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவில் வேலையின்மை மீண்டும் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. மே 2025 இல், நாட்டின் சராசரி வேலையின்மை விகிதம் 5.6 சதவீதமாக அதிகரித்தது, அதே நேரத்தில் ஏப்ரல் மாதத்தில் இது 5.1 சதவீதமாக இருந்தது. இது 15 முதல் 29 வயதுடைய இளைஞர்களை அதிகம் பாதித்துள்ளது. அவர்களில் வேலையின்மை விகிதம் […]

மத்திய அரசின் வருவாய் துறை, புலனாய்வுத் துறை, சிபிஐ, போதைமருந்து தடுப்பு பிரிவு, தபால் துறை, ரயில்வே உள்ளிட்ட முக்கிய துறைகளில் குரூப் ‘B’ மற்றும் ‘C’ வகை பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. மத்திய பணியாளர் தேர்வாணையம் (SSC) நடத்தியுவரும் CGL (Combined Graduate Level) தேர்வு மூலம், 2025-ம் ஆண்டிற்காக மொத்தம் 14,582 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த அறிவிப்பு ஜூன் 9-ம் தேதி வெளியிடப்பட்டுள்ளது. ஆர்வமுள்ளவர்கள் […]

குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடந்த விமான விபத்தில் 241 பயணிகள் உயிரிழந்தனர். அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு ஏர் இந்தியா விமானம் சென்று கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட உடனேயே, அது விபத்தில் சிக்கி ஒரு கட்டிடத்தில் மோதியது. இந்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இருப்பினும், விமானத்தில் உள்ள ஒவ்வொரு பயணிக்கும் பாதுகாப்பிற்காக ஏன் ஒரு பாராசூட் வழங்கப்படவில்லை என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. விமான விபத்து சம்பவத்திற்குப் […]

மாற்றம் என்பது இயற்கையானது. ஆனால், அந்த மாற்றத்தை எதிர்கொள்வது எப்படி என்பது மனிதர்களின் மனப் பெருமைக்கு சான்றாக அமையும். ஜப்பானின் ஷிகொக்கு தீவில் உள்ள நகோரோ கிராமம் இன்று உலக கவனத்தை ஈர்த்து வருகிறது.. அது மக்கள் தொகையால் அல்ல, மனித வடிவ பொம்மைகளால். ஒருகாலத்தில் மக்கள் திரண்டுகொண்டிருந்த இந்த கிராமம், தொழில்கள் முடங்கியதனால் காலப்போக்கில் வெறிச்சோடி விட்டது. இளைஞர்கள் வேலை தேடி நகரங்களுக்கு புறப்பட்டனர். இறுதியில், வயோதிபர்கள் மட்டுமே […]

சொத்துப் பத்திரம் பதிவு செய்த பிறகு, அந்த ஆவணத்தில் பெயர், முகவரி, விலை, சர்வே எண் உள்ளிட்ட விவரங்களில் தவறு இருந்தால், அந்த பிழைகள் பின்னாளில் பெரிய சட்ட பிரச்சனைகளாக மாறக்கூடும். இவ்வாறு பிழை ஏற்பட்டால், அதை திருத்தும் வழிமுறைகள் குறித்து இப்போது விழிப்புணர்வு தேவைப்படுகிறது. பொதுவாக பத்திரத்தில் உள்ள பிழைகளை திருத்த, “பிழை திருத்தல் பத்திரம்” எனப்படும் Rectification Deed பதிவு செய்யப்படுகிறது. இது, உரிமையாளராக இருந்த விற்பனையாளர் […]

241 பேரை பலிகொண்ட அகமதாபாத் விமான விபத்தில் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உதவி கோருவதற்கான உதவி மையம் தொடங்கப்பட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் இருந்து லண்டன் காட்விக் விமான நிலையத்திற்கு நேற்று மதியம் ஏர் இந்தியாவின் ஏஐ 171 போயிங் விமானம் புறப்பட்டது. புறப்பட்ட சில நிமிடங்களில் மேகானி நகர் குடியிருப்பு பகுதி அருகே விழுந்து நொறுங்கி விபத்தில் சிக்கியது. விமானத்தில் 2 விமானிகள், 10 ஊழியர்கள் உள்பட 242 பேர் […]

ஒவ்வொரு வீட்டின் உரிமையாளரும் குறிப்பிட்ட தொகையை வாடகைதாரரிடம் இருந்து முன்பணமாக பெறுகின்றனர். ஆனால் சட்டப்படி ஒரு மாத வாடகை தொகை தான் முன்பணமாக வசூலிக்கப்பட்ட வேண்டும். வீட்டின் வாடகை எப்போது வேண்டுமானாலும் உயர்த்தப்படும் என்று ஒப்பந்தத்தில் குறிப்பிடப்பட்டிருந்தால் வீட்டின் உரிமையாளர் எப்போது வேண்டுமானாலும் வாடகையை உயர்த்தலாம். அப்படியில்லாமல் திடீரென்று வாடகையை உயர்த்தினால் நீங்கள் நீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்ய அனைத்து உரிமைகளும் உண்டு. மேலும் வீட்டின் உரிமையாளர் வாடகையை உயர்த்துவதற்கு […]

முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பின் அடிப்படையில், மகப்பேறு விடுப்புக்குப் பிறகு பணிக்கு திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, 209 பெண் காவலர்கள் தங்களது குழந்தைகளை நலமாக கவனிக்கும்படி தாங்கள் விரும்பும் மாவட்டத்திற்கு பணியிட மாற்றம் கேட்டு விண்ணப்பித்திருந்தனர். அவர்களுக்கான மாற்றம் 03.06.2025க்குள் வழங்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் அரசு ஊழியர்களுக்கு கடந்த ஒரு மாதத்தில் மட்டும் ஏகப்பட்ட அறிவிப்புகளை […]

தங்கத்தின் விலைகள் உயர்ந்து வருவதால், வர்த்தகர்களும் முதலீட்டாளர்களும் வெள்ளியின் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர். 2024 ஆம் ஆண்டில், டாலர் மதிப்பில் வெள்ளி 21 சதவீதம் உயர்ந்தது, அதே நேரத்தில் தங்கத்தின் விலை 28 சதவீதம் உயர்ந்தது. 2025 ஆம் ஆண்டில், மே 31 வரை வெள்ளி மற்றும் தங்கம் இரண்டும் 25 சதவீதம் உயர்ந்தன. இரண்டு உலோகங்களிலும் ஏற்பட்ட ஏற்றத்தை இந்திய முதலீட்டாளர்கள் பயன்படுத்திக் கொண்டனர். ஜூன் 2024 […]

பட்டாவில் இறந்தவர்களின் பெயர்களை நீக்கி அவர்களது வாரிசுகள் மற்றும் பதிவு செய்யப்பட்ட ஆவணம் மூலம் உரிமை பெற்றவர்களின் பெயர்களை சேர்க்க உரிய ஆவணங்களுடன் இ-சேவை மையம் மூலம் விண்ணப்பிக்கலாம். தமிழகம் முழுவதும் கிராமப்புறம், நகர்ப்புறங்களில் உள்ள நிலங்களின் ஆவணங்கள் கணினிமயம் ஆக்கப்பட்டு, இணையவழியில் அனைவரும் எளிதாக பார்வையிடும் வகையிலும், அச்சிட்டு பயன்படுத்தும் வகையில், https://eservices.tn.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்க மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது. இருப்பினும், பல சிட்டாவில் உள்ள […]