காரில் ஏசி போட்டு தூங்குவதால் உயிரிழப்பு ஏற்படும் அபாயம் இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. நீண்ட தூரம் பயணம் செய்யும் போது பலர் காரில் ஏசி போட்டு தூங்குவதை வழக்கமாக வைத்திருப்பார்கள். ஆனால், தற்போது இந்தப் பழக்கம் மரணத்தை ஏற்படுத்திவிடுமோ என்ற சந்தேகம் பலருக்கும் எழுந்துள்ளது. கார் இன்ஜினில் இருந்து வெளிவரும் கார்பன் மோனாக்சைட்டை சுவாசிக்கும்போது மூச்சுத் திணறல் ஏற்பட்டு உயிரிழக்கும் அபாயம் உள்ளது. இது போன்று நொய்டாவில் காரில் […]

நாம் பயன்படுத்தும் வாகனங்களின் டயர்கள் மட்டும் ஏன் கருப்பு நிறத்தில் உள்ளது என தெரியுமா..? இதுகுறித்த சுவாரஸ்ய தகவல்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். நீங்கள் கோடிக்கணக்கில் செலவு செய்து விதவிதமான கலர்களில் வாகனங்களை வாங்கினாலும், அதன் டயரின் கலர் கருப்பாகத் தான் இருக்கும். இந்த டயரை கடந்த 125 ஆண்டுகளுக்கு முன்னர் தான் முதன் முதலில் கண்டுபிடித்துள்ளனர். அப்போதைய டயர்கள் தற்போதைய கருப்பு கலரில் இல்லை. டயர்கள் பொதுவாக ரப்பரில் […]

தண்ணீரை சூடு படுத்தும் வாட்டர் கீட்டர் எனப்படும் கீசரில் இருந்து வெளியான நச்சு வாயு மூலம் பெண் ஒருவர் சுயநினைவை இழந்து மயக்கமடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இன்றைய நவீன காலத்தில் அனைத்து தேவைகளுக்கும் இயற்கைக்கு மாறாக இயந்திரங்களையும் தொழில்நுட்பத்தையும் சார்ந்து வாழ்ந்துகொண்டிருக்கிறோம். அன்றாட வாழ்வில் மிக்சி இல்லாமல் சமையல் நடக்காது, வாஷிங் மிஷின் இல்லாமல் துணிகள் துவைக்க முடியாது மற்றும் குளிப்பதற்கு வெந்நீர் போட வாட்டர் கீட்டர்கள் […]

முன்னோர்களின் புகைப்படங்களை வீட்டின் பூஜையறையில் வைக்கலாமா? என்று பலருக்கும் சந்தேகம் உள்ளது. அதுகுறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பெரும்பாலான வீடுகளில் முன்னோர்களின் புகைப்படங்களை வைப்பது வழக்கமாக உள்ளன. நமது மூதாதையர்களின் நினைவாக அல்லது அவர்களின் ஆசீர்வாதம் எப்போதும் இருக்க வேண்டும் என்பதற்காக அவர்களின் புகைப்படங்கள் வைக்கப்படுகின்றன. மூதாதையர்களின் படத்தை வீட்டில் வைத்திருப்பது சரியானது. ஆனால் அவர்களின் படங்களை வைத்திருக்கும்போது சில விஷயங்களை மனதில் கொள்ள வேண்டும். இல்லையெனில், உங்களுக்கு பிரச்சனைகள் […]

உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்படும் டிவி மாடல்களின் விலை ரூ. 3 ஆயிரம் வரை குறையும் சூழல் உருவாகி இருக்கிறது. மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட்டில் அடிப்படை இறக்குமதி வரி 5 சதவீதத்தில் இருந்து 2.5 சதவீதமாக குறைக்கப்பட்டு இருக்கிறது. இறக்குமதி வரி குறைப்பால், டிவிக்களின் விலை குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒபன் செல் பாகங்களுக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டு இருப்பதன் மூலம், டிவிக்களின் விலை அதிகபட்சம் […]

வங்கக் கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கடந்த திங்கள்கிழமை காலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. இந்த காற்றழுத்த மண்டலமானது திரிகோணமலைக்கு அருகே 110 கிலோமீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது. தூத்துக்குடி, திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக, தஞ்சை மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. நாகை மாவட்டத்தில் 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரையிலான […]

வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் வேலைவாய்ப்பற்றோர் உதவித்தொகை பெறுவதற்கு 10-ம் வகுப்பு கல்வித்தகுதி தேர்ச்சி பெறாத, தேர்ச்சி பெற்றவர்கள், 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பட்டபடிப்பு தேர்ச்சி பெற்ற பொதுப் பிரிவினர் தங்களது கல்வித்தகுதியை மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் முடிவடைந்து […]

அதிக நேரம் ஸ்மார்ட்போன், டிவி, லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை பயன்படுத்தினால் விரைவில் வயதான தோற்றம் வந்துவிடும் என்று ஆராய்ச்சி ஒன்றில் அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. நம் அன்றாட வாழ்வில் ஸ்மார்ட்போன் உபயோகப்படுத்துவோரின் எண்ணிக்கையும், அழைப்புகளின்போது பேசும் கால அளவும் பன்மடங்காக அதிகரித்துள்ளது. வாட்ஸ்அப் உரையாடல் தொடங்கி, செய்திகளை நொடிக்கு நொடி வழங்குவது, வங்கி பணப் பரிவர்த்தனை என அனைத்துக்கும் ஆதாரமாகிவிட்டது செல்போன். இதனை பயன்படுத்தாதவர்கள் எண்ணிக்கை மிக மிகக் […]

நமது அன்றாட வாழ்வில் தூதுவளையை தினமும் உட்கொண்டு வருவதன் மூலம் நோய் எதிர்ப்பு திறன் அதிகரிக்கிறது. மேலும், இது ஆண்மையை பெருக்கவும், பாம்பின் விஷத்தை முறிக்கவும் உதவுகிறது. தூதுவளை இலையில் கால்சியம் சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. எனவே, தினமும் அல்லது வாரம் இரு முறை உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் எலும்புகள் மற்றும் பற்கள் பலப்படும். மேலும், தூதுவளைக் கீரை, வேர், காய், வத்தல், ஊறுகாய் இவற்றில் ஏதாவது […]

மத்திய பட்ஜெட்டை நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார். அதில், சேமிப்புகள் குறித்த அறிவிப்புகள் இடம்பெற்றிருந்தது. அதிலும், குறிப்பாக தபால் துறையில் செயல்படும் தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கு வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு இடம்பெற்றிருந்தது. தபால் அலுவலக மாதாந்திர வருமான திட்ட கணக்கிற்கு வைப்புத் தொகையை ரூ.4.5 லட்சத்தில் இருந்து ரூ.9 வரை அதிகரித்துள்ளன. தனி நபர் கணக்கிற்கு ரூ.9 லட்சம் வரையும், கூட்டு […]