விபூதி, குங்குமம் போன்றவற்றை சாமிக்கு படைத்து விட்டு ஏன் நெற்றியில் வைக்கிறோம் என்று தெரியுமா? சம்பிரதாயம் என்ற பெயரில் நமது முன்னோர்கள் இந்த செயலில் மறைத்து வைத்துள்ள அறிவியலை பற்றி இந்த தொகுப்பில் காணலாம். என்னதான் ஆடை, அணிகலன்களை கொண்டு பெண்கள் தங்களை அலங்காரம் செய்து கொண்டாலும் ஒரு சின்ன நெற்றிப்போட்டு இல்லையென்றால் அந்த அலங்காரம் முழுமைப் பெறாது. எதற்காக பெண்கள் நெற்றியின் மத்தியில் பொட்டு வைக்கிறார்கள் அழகுக்காக மட்டும் […]

ஆட்டு புழுக்கைகள் விளைநிலங்களில் உரங்களாக பயன்படுத்தப்படுவது வழக்கம். ஆனால், அந்த ஆட்டுப் புழுக்கைகளில் இருந்து லட்சக்கணக்கில் பணம் சம்பாதிக்க முடியும். ஆம், ஒரு நாட்டில் ஆட்டு புழுக்கைகளின் மதிப்பு மிக அதிகம். இதுகுறித்து தான் இந்தப் பதிவில் பார்க்கப் போகிறோம். ஆப்பிரிக்க நாடான மொரோக்கோவில், ஒரு குறிப்பிட்ட மரத்தில் ஏறும் ஆடுகள், அதில் உள்ள பழங்களை ஆர்முடன் சாப்பிடுகின்றன. ஆடுகளின் உரிமையாளர்களும் அந்த மரங்களில் ஆடுகள் ஏறுவதை தடுக்க மாட்டார்கள். […]

மதியம் சாப்பிட்டு முடித்ததும் அரைமணி நேரம் உறங்குவது உடல் நலத்திற்கு நல்லது என்று இங்கிலாந்தின் ப்ரிஸ்டோல் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர். மதியம் சாப்பிட்டு முடித்ததும் நம்மில் பலருக்கு கிறக்கம் ஏற்பட்டு உறக்கம் வருவது வழக்கம். சிறிது நேரம் தூங்கினால் நன்றாக இருக்கும். ஆனால் பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களில் அப்படி தூங்க முடியாது. அதனால் அருகில் உள்ளவர்களிடம் அரட்டை அடிப்பது, செல்போனில் கேம் விளையாடுவது என்று தூங்காமல் கண்களுக்கு கடிவாளம் போடுவோம். […]

ஜெர்மனி நெடுஞ்சாலையில் செல்லும்போது வாகனங்களில் டீசல் காலியானால் அபராதம் அல்லது தண்டனை வழங்கப்படுகிறது. ஜெர்மனி நாட்டை பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். ஜெர்மனியில் நடைபெற்ற சர்வாதிகாரி ஹிட்லர் ஆட்சி தான் இரண்டாம் உலகப்போருக்கு காரணமாக அமைந்தது. 2-ம் உலகப்போருக்கு பிறகு ஜெர்மனி முழுவதுமே திவாலாகி விட்டது என்றே சொல்லலாம். எனினும் தற்போது உலகின் சக்திவாய்ந்த நாடுகளில் ஜெர்மனியும் இடம்பெற்றுள்ளது. பொறியியல் துறையில் உலகிலேயே சிறந்து விளங்கும் நாடாகவும் ஜெர்மனி திகழ்கிறது. […]

நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு தொடர்ந்து பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் தற்போது, வேலை அல்லது தொழில் செய்வோர் என இரு தரப்பினருக்காகவும் எஸ்பிஐ வங்கி ஒரு அட்டகாசமான திட்டத்தை கொண்டு வந்துள்ளது. அதாவது, எஸ்பிஐ வங்கி மாத வருமானம் திட்டம் ஒன்றை அறிமுகம் செய்துள்ளது. இந்த திட்டத்தின் பெயர் எஸ்பிஐ ஆண்டுத் தொகை டெபாசிட் திட்டம் ஆகும். இதில் முதலீட்டாளர்களுக்கு உத்திரவாதத்துடன் […]

பிரபல எலெக்ட்ரிக் மொபிலிட்டி நிறுவனமான இ-பைக் கோ நிறுவனம் மின்சார வாகனங்களை வாடகைக்கு விடும் தொழிலில் பிரபலம். இந்நிறுவனம் தற்போது மின்சார வாகனத் தயாரிப்பிலும் இறங்கியுள்ளது. டிரான்சில் பிராண்டின் கீழ் டிரான்சில் இ1 எனும் எலெக்ட்ரிக் சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விபரங்களை இந்தப் பதிவில் பார்க்கலாம். டிரான்சில் இ1 எலெக்ட்ரிக் சைக்கிளின் விலை ரூ.45 ஆயிரம். விலை கொஞ்சம் அதிகம் என்றாலும், இந்த சைக்கிளில் அதற்கேற்ற சிறப்பம்சங்கள் […]

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2-க்கான ஹால்டிக்கெட்டை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2க்கான கணினி வழித் தேர்வு பிப்ரவரி 3ஆம் தேதி முதல் பிப்ரவரி 14ஆம் தேதி வரை நடைபெறுகிறது. அதற்கான ஹால்டிக்கெட் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. மேலும், ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் இரண்டு எழுதுவதற்கு விண்ணப்பித்த 30 நபர்களின் விண்ணப்பங்கள் ஏற்கப்படவில்லை. அவற்றில் பாலிடெக்னிக் தேர்வு முறைகேட்டில் […]

சுற்றுலா அலுவலர் பதவிக்கான நேரடி நியமன வேலைவாய்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. பணியின் விவரங்கள்: பதவியின் பெயர்: சுற்றுலா அலுவலார் காலியிடங்கள்: 3 சம்பளம்: ரூ.56,100 முதல் ரூ.2,05,700 வயது வரம்பு: * இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 18 வயது நிறைவு செய்திருக்க வேண்டும். * SC, SC (A), ST, MBC/DC, BC (OBCM), BCM பிரிவினருக்கு வயது வரம்பு இல்லை. கல்வித்தகுதி: Travel and […]

தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகம் மூலம் தனிநபர் கடன், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன், கல்விக் கடன், கைவினை கலைஞர்களுக்குக் கடன் ஆகியவற்றின் கீழ் கடன்கள் வழங்கப்படுகிறது. இதுதொடர்பாக சென்னை ஆட்சியர் அமிர்தஜோதி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். டாம்கோ கடனுதவித் திட்டம்: டாம்கோ மூலம் செயல்படுத்தப்படும் கடன் உதவித் திட்டங்கள் மூலம் தனிநபர் கடன் திட்டம், சுய உதவிக் குழுக்களுக்கான சிறு தொழில் கடன் திட்டம், […]

நடப்பாண்டு தொடங்கிய 20 நாட்களுக்குள்ளேயே உலகின் 153 நிறுவனங்களில் இருந்து கிட்டத்தட்ட 50,000-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஏதோ சிறு, குறு அல்லது ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் மட்டும் இந்த பணிநீக்கம் நடக்காமல் மெட்டா, மைக்ரோசாஃப்ட், கூகுள், ட்விட்டர், அமேசான் என பல முன்னணி நிறுவனங்களே இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது. இதில், ஃப்ரஷர் அல்லது கடந்த சில ஆண்டுகளில் பணிக்கு சேர்ந்தவர்களை விட, கிட்டத்தட்ட 10 முதல் […]