ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் வீரர்கள் மற்றும் பார்வையாளர்கள் அனைவரும் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் . இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; மாநில அரசால் அனுமதிக்கப்பட்ட இடங்களைத் தவிர்த்து மற்ற இடங்களில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தக்கூடாது. மாநில அரசின் உத்தரவுகளை மீறினால் கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் மாவட்ட ஆட்சியர்களின் முன் அனுமதி இன்றி ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்த அனுமதி இல்லை. காளைகள் […]

டோக்கன் பெற முடியாதவர்கள் மற்றும் விடுபட்டு போனவர்கள் ஜன.13ஆம் தேதி ரேஷன் கடைகளுக்கு நேரில் சென்று பொங்கல் பரிசு தொகுப்பை பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் 1 முழு கரும்பு மற்றும் ரூ.1,000 ரொக்கம் ஆகியவை தமிழக அரசால் வழங்கப்பட இருக்கிறது. தமிழகத்தில் 2 கோடியே 19 லட்சத்து 14 ஆயிரத்து 73 ரேஷன் […]

இந்தாண்டு மத்திய பட்ஜெட்டில் வருமான வரி விலக்கு தொடர்பாக இடம்பெறும் முக்கிய அம்சங்கள் குறித்து இந்தப் பதிவில் பார்க்கலாம். பட்ஜெட் கூட்டத்தொடர் ஜனவரி 31ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 6ஆம் தேதி வரை நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முறை பட்ஜெட்டை பிப்ரவரி 1ஆம் தேதி தாக்கல் செய்கிறார். இந்த பட்ஜெட்டில் வருமான வரி செலுத்துவோருக்கு அதிக எதிர்பார்ப்புகள் உள்ளன. மோடி அரசு, வரி செலுத்துவோருக்கு […]

தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர்களை சேர்க்க இணையதளம் மூலமாக தொடர்ந்து விண்ணப்பிக்கலாம் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். தமிழகம் முழுவதும் வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட நிலையில், வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை தேர்தல் துறையின் இணையதளம் மூலமாக மக்கள் தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் பெயர் சேர்ப்பு மற்றும் நீக்குதல் போன்ற பணிகளுக்கு இணையதளம் மூலமாகவும் கைபேசி செயலி மூலமாகவும் விண்ணப்பிக்கலாம் […]

தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் பிரிவு அலுவலர் பதவிக்கான 3ஆம் கட்ட மூலச் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு இன்று நடைபெறும் என டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா பரவல் காரணமாக டிஎன்பிஎஸ்சி போட்டி தேர்வுகள் எதுவும் நடத்தப்படாமல் இருந்தது. ஆனால், இந்த முறை அதற்கான அறிவிப்புகள் வெளியிடப்பட்டு தேர்வுகளும் நடந்து முடிந்துள்ளன. இந்நிலையில், தமிழ் வளர்ச்சி மற்றும் தகவல் துறையில் உதவிப் […]

தெருநாய்களின் தொல்லைகள் குறித்து 1913 என்ற இலவச உதவி எண்ணில் தொடர்புகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பெருகி வரும் தெரு நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அவை பிடிக்கப்பட்டு, வாகனங்கள் மூலம் திரு.வி.க நகர் மண்டலத்திற்குட்பட்ட பேசின் பாலம் நாய் இனக்கட்டுப்பாடு மையம் மற்றும் கண்ணாம்மாப்பேட்டை நாய் இனக்கட்டுப்பாடு மையம் ஆகிய இனக்கட்டுப்பாடு மையங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. […]

ஆதார் வைத்திருப்பவர்கள் தங்கள் ஆதார் அட்டைகளில் முகவரியை புதுப்பிக்க அல்லது மாற்றுவதற்கான புதிய செயல்முறையை ஆதார் ஆணையம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய செயல்பாட்டின் மூலம், ஆதார் பயனர்கள் எந்த வகையான ஆவணங்களையும் காட்டாமலே ஆதார் அட்டையில் முகவரியை மாற்றவோ அல்லது புதுப்பிக்கவோ முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வசதி மிகவிரைவில் வரவுள்ளது. இவ்வாறு முகவரிச் சான்று இல்லாமல் முகவரி விவரங்களை மாற்றுவதற்கு குடும்பத் தலைவரின் (HoF) ஒப்புதல் இருந்தாலே போதும். […]

தகவல் தொடர்பு நிறுவங்களான ஜியோ மற்றும் ஏர்டெல் புதிய புதிய ரீசார்ஜ் பிளான்களை போட்டி போட்டுக்கொண்டு வெளியிட்டு வருகிறது. 5ஜி தொழில்நுட்பத்தை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும் சமயத்தில், இந்த இரண்டு நிறுவங்களுக்கும் ஈடு கொடுக்கும் விதமாக BSNL புதிய ஒரு பிளானை அறிமுகம் செய்துள்ளது. 5ஜி ஓட்டத்தில் தகவல் தொடர்பு நிறுவனங்கள் ரீசார்ஜ் பிளான்களின் விலையையும் சரமாரியாக ஏற்றி வருகின்றன. ரூ.100-க்கு கீழ் பிளான் இல்லை எனும் நிலையில், 87 ரூபாய்க்கு […]

ஸ்மார்ட்போன் குறைந்தபட்சம் 300 முறைக்கு மேல், அதிகபட்சம் 500 முறை வரை சார்ஜ் செய்யப்படும்போது, ஸ்மார்ட்போனிற்குள் இருக்கும் லித்தியம் அயன் (Lithium Ion) பேட்டரி அதன் அதிகபட்ச சார்ஜ் மற்றும் டிஸ்சார்ஜ் சுழற்சியை எட்டி இருக்கும். மேற்குறிப்பிட்ட சார்ஜ் / டிஸ்சார்ஜ் சுழற்சிகளை கடந்த பிறகு ஸ்மார்ட்போனை சார்ஜ் செய்யும் போது உள்ளிருக்கும் லித்தியம் ஐயன் பேட்டரி மெல்ல மெல்ல பலவீனமாக தொடங்கும். இதனால், பேட்டரியின் திறன் மெல்ல மெல்ல […]

நீங்கள் ஒரு பங்குச்சந்தை முதலீட்டாளராகவோ அல்லது வர்த்தகத்தைத் தொடங்கத் திட்டமிடும் நபராகவோ இருந்தால், நீங்கள் தற்போதைய வர்த்தக விடுமுறை காலண்டரைக் கண்காணிக்க வேண்டும். தேசிய பங்குச் சந்தை (NSE) மற்றும் பாம்பே ஸ்டாக் எக்சேஞ்ச் (BSE) விடுமுறைப்பட்டியல் இரண்டும் முக்கியமானவை. பின்னர், கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச்களுக்கான விடுமுறை பட்டியல் உள்ளது. அவற்றில் முதன்மையானது மல்டி-கமாடிட்டி எக்ஸ்சேஞ்ச் (MCX) ஆகும். இந்த எல்லா பரிமாற்றங்களும் விடுமுறை நாட்களின் தொகுப்பைக் கொண்டுள்ளன. நீங்கள் வர்த்தகம் […]