கொரோனா வழக்குகள் அதிகரித்து வரும் நிலையில் தேசிய தலைநகரில் டெங்கு பாதிப்பு ஒரு பக்கம் அதிகரித்து வருவது பெரும் தலைவலியை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய அறிக்கைகளின் படி, டெல்லியில் டெங்கு வழக்குகள் 4,300-ஐ தாண்டியுள்ளன. மேலும், டெல்லியில் டெங்குவால் இரண்டு இறப்புகள் மட்டுமே அரசாங்க அதிகாரிகளால் உறுதி செய்யப்பட்டுள்ளன. டெல்லி முனிசிபல் கார்ப்பரேஷன் மறுஆய்வுக் குழுவால் இதுவரை ஐந்து இறப்புகள் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த உயிரிழப்புகள் செப்டம்பர்-நவம்பர் காலப்பகுதியில் பதிவானதாகும். புதிய அறிக்கையில், […]

நாம் இறந்த பின் என்ன நடக்கும் அல்லது இறந்த பிறகும் ஒரு வாழ்க்கை உள்ளதா என்பது இன்று வரை மருத்துவர்களுக்கும் ஆன்மீகவாதிகளுக்கும் புரியாத புதிராகவே இருக்கிறது. மரணத்திற்கு பின் என்ன நடக்கும் என்பதை கண்டறிய, என்.டி.இ.ஆர்.எஃப் (Near Death Experience Research Foundation) என்ற ஆராய்ச்சி அமைப்பு செயல்பட்டு வருகிறது. அந்த ஆராய்ச்சி அமைப்பு என்.டி.இ எனப்படும் மரணத்திற்கு நெருங்கிய அனுபவம் என்ற சோதனையை பல ஆண்டுகளாக செய்து வருகிறது. […]

தமிழ்நாட்டில் ‘சி’ மற்றும் ‘டி’ பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் மற்றும் முன்னாள் கிராம அலுவலர்ககள் உள்ளிட்டோர்களுக்கு தமிழ்நாடு அரசு பொங்கல் போனஸ் அறிவித்துள்ளது. இது குறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட அறிவிப்பில், ‘அரசின் நலத் திட்டங்களுக்கு, அச்சாணியாக விளங்கும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு எதிர்வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார். அதன்படி, […]

வங்கிகளில் லாக்கர் வைத்துள்ள வாடிக்கையாளார்கள் அந்த ஒப்பந்தங்களை 2023 ஜனவரி 1 ஆம் தேதிக்குள் புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என்று இந்திய ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது. வங்கிகள் பொதுவாக தனது வாடிக்கையாளர்களின் நகைகள், எஃப்டி பேப்பர்கள் போன்ற சொத்துக்களை மிகவும் பாதுகாப்பாக வைத்துகொள்ள லாக்கர்களை வழங்குகிறது.  அடிக்கடி வங்கிகள் வாடிக்கையாளர்களுக்காக பல விதிகளை வெளியிட்டு கொண்டிருக்கும் நிலையில் தற்போது லாக்கருக்கான சில விதிகளையும் வெளியிட்டுள்ளது அதில் வங்கிகள் வாடிக்கையாளருக்கு லாக்கரை […]

மத்திய அரசு சார்பில் பீடி, சுண்ணாம்புக் கல், டோலமைட், சுரங்கம் மற்றும் சினிமா தொழிலாளர்களின் குழந்தைகள் கல்வி உதவித் தொகை பெற விண்ணப்பங்கள் கடந்த ஜூலை மாதம் முதல் வரவேற்கப்பட்டது. மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் நடப்பாண்டில் கல்வி உதவித் தொகை பெற மின்னணு முறையில் விண்ணப்பங்கள் பெறப்பட்டது. 9ஆம் வகுப்பு முதல் தொழில்முறை படிப்புகள் வரை பயிலும் குழந்தைகளுக்கு ரூ.1,000 முதல் ரூ.25,000 வரை […]

டிசம்பர் 31ஆம் தேதி முதல் 49 போன்களில் வாட்ஸ் அப் செயலி வேலை செய்யாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதுமே பில்லியன் கணக்கான மக்கள் வாட்ஸ் அப்பை பயன்படுத்தி வருகின்றனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என அனைவருமே தற்போது வாட்ஸ் அப் செயலியை பயன்படுத்துகின்றனர். மேலும், பயனர்களுடைய வசதிக்காக வாட்ஸ் அப் நிறுவனம் அவ்வபோது பல்வேறு சேவைகளையும், அப்டேட்டுகளையும் வழங்கி வருகிறது. கல்வி, தொழில், பணப்பரிமாற்றும் முதலான அனைத்து […]

நாடு முழுவதும் அனைத்துப் பள்ளிகளிலும் சோப்புகளைப் பயன்படுத்தி கைகளைக் கழுவும் வசதிகளை ஏற்படுத்தவும் மாணவர்களுக்குத் தூய்மைக் குறித்த கல்வியைக் கற்பிக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சி அளிக்குமாறு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேச அரசுகளை மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது. இது குறித்து பள்ளிக்கல்வி மற்றும் எழுத்தறிவுத்துறை, கல்வி அமைச்சகம், நீர்வள அமைச்சகம், நிதி ஆயோக், கிராமப்புற மேம்பாடு மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகம் ஆகியவை கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில், அனைத்து பள்ளிகளிலும், […]

பொங்கல் திருநாளை முன்னிட்டு அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கும் ரூ.1,000 ரொக்கம் வழங்கப்படும் என முதலமைச்சர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். அத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, சர்க்கரை வழங்கவும் ஆணை பிறப்பித்துள்ளார். பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை வரும் 2ஆம் தேதி சென்னையில் முதல்வரும், மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று கூறப்பட்டுள்ளது. ரேஷன் அட்டைதாரர்கள் வரும் 2ஆம் தேதி முதல் பொங்கல் பரிசை பெற்றுக் கொள்ளலாம். இருப்பினும் […]

ஆதாரில் மோசடிகளைத் தவிர்க்க குறைந்தபட்சம் 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை, ஆதார் விவரங்களை புதுப்பிப்பது அவசியம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (யுஐடிஏஐ) நினைவுபடுத்தி உள்ளது. இந்திய மக்களின் அடையாளத்திற்கான உலக அளவில் ஏற்று கொள்ளப்பட்ட சான்றாக ஆதார் அட்டை விளங்குகிறது. மத்திய அரசு நல்வாழ்வுத் திட்டங்களில் 319 சேவைகள் உட்பட 1,100-க்கும் மேற்பட்ட பல்வேறு திட்டங்கள் மற்றும் அதன் சேவைகளை வழங்க ஆதார் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. வங்கிகள், வங்கி […]

தமிழகத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது. இன்னும் 5 நாட்களில் 2023-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2023-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு அலுவலகங்களுக்கும் தமிழகத்தில் உள்ள கூட்டுறவு வங்கிகள் உள்பட அனைத்து வணிக வங்கிகள், கழகங்களுக்கும் […]