தெருக்களுக்கான பெயர்ப் பலகைகளில் போஸ்டர் ஒட்டினால் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாடு திறந்தவெளி இடங்கள் பாதுகாப்புச் சட்டம் 1959ன் படி (Tamilnadu Open Places (Prevention of Disfigurement) Act, 1959) நகரின் பொது இடங்களில் சுவரொட்டிகள் ஒட்டவோ, அனுமதியின்றி விளம்பரப் பதாகைகளை அமைக்கவோ கூடாது. அதனடிப்படையில், பெருநகர சென்னை மாநகராட்சியின் […]

உலக அளவில் இருசக்கர வாகன சந்தையில் தயாரிப்பு நிறுவனங்கள் போட்டி போட்டு வாடிக்கையாளர்களை கவர்ந்து வருகிறார்கள். தினமும் உயர்ந்து வரும் எரிபொருள் விலை மற்றும் சுற்றுச் சூழல் காரணிகளால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக புதிய வாகனங்களின் கட்டாயம் அதிகரித்துள்ளது. அதனால் தான் கார் மற்றும் இரு சக்கர வாகன தயாரிப்பாளர்கள் எலெக்ட்ரிக் வாகனங்கள் தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதோடு வாடிக்கையாளர்களும் எலெக்ட்ரிக் பைக் வாங்குவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். […]

இந்தியாவில் 5ஜி சேவையானது கடந்த அக்டோபர் மாதம் அறிமுகப்படுத்தப்பட்டது. அக்டோபர் 1ஆம் தேதி சோதனை ஓட்டத்தில் தொடங்கி வைக்கப்பட்ட 5ஜி சேவை, பின்னர் படிப்படியாக முன்னணி நகரங்களில் அறிமுகம் செய்யப்பட்டது. முதல்கட்டமாக ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள் 5ஜி சேவையை முக்கிய நகரங்களில் வழங்கி வருகின்றன. எனவே, முன்னணி நகரங்களில் வசிக்கும் மக்கள் 5ஜி சேவையை தற்போதே பெறலாம். புதிய ரக ஆப்பிள் ஐ ஃபோன் வைத்திருப்பவர்களுக்கு இப்போது […]

முன்பு வெகு சிலரால் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வந்த இன்ஸ்டாகிராம் செயலி, தற்போது அதிகமான மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதிலும் நடிகர்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்களும் இன்ஸ்டாகிராமில் தற்போது மிகவும் ஆக்டிவாக செயல்பட்டு வருகின்றனர். இன்ஸ்டாகிராமில் தங்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் மற்றும் தங்களைப் பற்றிய மற்ற தகவல்களையும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியும். அதில், தற்போது முன்னிலை வகித்து வருவது ரீல்ஸ் எனப்படும் வசதியாகும். முன்னர் இருந்த டிக்-டாக் செயலியை அடிப்படையாக […]

இன்றைய சூழலில் வங்கிக் கணக்கு, ரேஷன் கார்டு, மின் இணைப்பு என அனைத்திற்கும் ஆதார் என்பது அவசியமாகிறது. ஆதாரின் 12 இலக்க எண் தான் ஒரு இந்திய குடிமகனின் ஆதாரமாகவே மாறி வருகிறது. இந்நிலையில், அதன் விவரங்களில் பிழை இருந்தால் எப்படி சரி செய்வது என்று பார்க்கலாம். முக்கியமாக திருமணம் ஆன பெண்கள் தங்கள் ஆதார் தகவல்களை, தங்கள் தந்தை பெயருக்கு பதில் கணவன் பெயரை உள்ளிடுவதில் அதிக சிரமத்தை […]

புதிய விதியின் காரணமாக 17 கார்கள் ஏப்ரல் 2023 முதல் இயங்க அனுமதிக்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 2023 முதல், இந்தியாவில் வாகனங்களுக்கு புதிய உமிழ்வு விதிமுறைகள் அமல்படுத்தப்பட உள்ளன. இவை RDE அல்லது Real Time Driving Emission Norms என்று அழைக்கப்படும். இது BS6 உமிழ்வு விதிமுறைகளின் 2ஆம் கட்டம் என்றும் அழைக்கப்படுகிறது. இந்த விதி வந்தவுடன், பல நிறுவனங்கள் தங்கள் டீசல் வாகனங்களை நிறுத்த உள்ளன. […]

பிரதமர் கிசான் திட்டத்தின் 13- வது தவணை ஜனவரி மாதம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது ‌ பிரதமர் கிசான் திட்டத்தின் கீழ் தகுதி வாய்ந்த விவசாயிகளுக்கு 4 மாதங்களுக்கு ஒரு முறை ரூ. 2000 வீதம் மூன்று தவணையாக ஆண்டுக்கு மொத்தம் ரூ. 6000 நிதியுதவி வழங்கப்படும். இந்த நிதி, விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகப் பரிமாற்றம் செய்யப்படும். இந்தத் திட்டத்தில் இதுவரை ரூ.3 லட்சம் கோடிக்கு மேல் நிதி […]

சென்னை மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்வதற்கான பேருந்து பயண டோக்கன்கள் 21ஆம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் அன்பு ஆபிரகாம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் 60 வயதிற்கு மேற்பட்ட சென்னை வாழ் மூத்த குடிமக்கள் கட்டணமின்றி பயணம் செய்யும் வகையில், டோக்கன்கள் டிசம்பர் வரை ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது. தற்போது, […]

இந்தியத் தர நிர்ணயக் குழு (Bureau of Indian Standards) உள்ள காலிப்பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. இப்பணிகளுக்கு பொறியியல் பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் முழு விவரங்கள்: பதவியின் பெயர்: Management Executives for NITS, Management Executives for PRTD வயது வரம்பு: 45 சம்பளம்: ரூ.1.5 லட்சம் கல்வித்தகுதி மற்றும் அனுபவம்: NITS பணிக்கு பொறியியல் பட்டப்படிப்பு மற்றும் எம்.பி.ஏ (Marketing/HR). […]

நாட்டில் அடுத்தக்கட்ட தங்க பத்திர விற்பனைக்கான அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது. அதன்படி, நடப்பு நிதியாண்டிற்கான 3ஆம் தொகுப்பு தங்க பத்திர விற்பனை இன்று முதல் தொடங்குகிறது. 2022-23ஆம் நிதியாண்டுக்கான மத்திய அரசின் மூன்றாவது கட்ட தங்க பத்திர விற்பனை இன்று தொடங்கி டிசம்பர் 23ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இதில், தங்க பத்திரங்கள் விலை கிராமுக்கு ரூ.5,409 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. டிஜிட்டல் முறையில் வாங்குவோருக்கு ரூ.50 […]