சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகம், வேலைவாய்ப்புக்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. பி.இ., பிடெக் படிப்பில் பொறியியல் பட்டம் பெற்றவர்கள் இந்தப் பணிக்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 1. திட்டப்பணி மேலாளர் – II (Project Associate- II) காலியிடங்கள்: 2 கல்வித் தகுதி: ஏதேனும் படிப்பில் பொறியியல் பட்டம் அல்லது எம்சிஏ பட்டம் பெற்றவர்களும், எம்இ/எம்.டெக் பட்டம் அல்லது எம்பிஏ பட்டம் பெற்றவர்களும் இதற்கு விண்ணப்பிக்கலாம். (B.E/B.Tech (Any branch) […]

2022 ஆண்டுக்கான டிஎன்பிஎஸ்சி குரூப் 4 நிலை எழுத்துத் தேர்வு நடைபெற்று 4 மாதங்கள் மேல் கடந்த நிலையில், தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பு தேர்வர்கள் மத்தியில் எழுந்துள்ளது. முன்னதாக, 7301 குரூப் 4 நிலை காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்க்கை அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி தேர்வாணையம் கடந்த மார்ச் மாதம் 30ஆம் தேதி வெளியிட்டது. இதற்கான, எழுத்துத் தேர்வு கடந்த ஜுலை 24ஆம் தேதி நடைபெற்றது. 16.2 லட்சம் தேர்வர்கள் […]

இடைநிலை ஆசிரியர் பணிக்குரிய தகுதிக்கான தாள் ஒன்று தேர்வு எழுதியவர்களின் தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், “தமிழ்நாடு ஆசிரியர் தகுதி தேர்வு 2022-ம் ஆண்டிற்கான ஆசிரியர் தகுதி தேர்வுக்கான தாள் ஒன்றிற்கு கம்ப்யூட்டர் மூலம் அக்டோபர் 14-ம் தேதி முதல் 19-ம் தேதி வரை காலை மற்றும் மாலை இருவேளைகளில் தேர்வினை நடத்தியது. இந்தத் தேர்வில் […]

வங்கிகளின் குறுகிய கால கடனுக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு வெளியாகியுள்ளது. வங்கிகளின் குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதம் 0.35% உயர்த்தப்படுவதாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்த தாஸ் அறிவித்துள்ளார். அதன்படி, ரெப்போ வட்டி விகிதம் 5.9 சதவீதத்தில் இருந்து 6.25 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரெப்போ வட்டி விகிதம் உயர்வால், வீடு, வாகனம், தனிநபர் கடன் வட்டிகளை ரிசர்வ் வங்கி உயர்த்தும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், வங்கிகளில் […]

அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி குறித்து மத்திய அரசு ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் தொடர்ந்து உயர்ந்து கொண்டே போகும் பண வீக்கத்தின் போது பணத்தின் வாங்கும் மதிப்பு குறைகிறது. இதனால், மத்திய அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி வழங்கி வருகிறது. இது ஒவ்வொரு ஆண்டும் 6 மாதத்திற்கு ஒரு முறை உயர்த்தப்படுவது வழக்கம். அதேபோல் கடந்த செப்டம்பர் மாதம் ஊழியர்களுக்கான அகவிலைப்படியை 38% ஆக உயர்த்தியது. […]

மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை தமிழக மின்சாரத்துறை மும்முரமாக செய்து வருகிறது. இதில், ஆன்லைனில் ஏற்கனவே ஒரு லிங்க் வெளியிடப்பட்டு அதில் பயனர்கள் பதிவேற்றம் செய்து வந்தனர். அடுத்ததாக, மின்சாரத்துறை 2811 சார்பு அலுவலகங்களில் காலை 10.30 மாலை 5.30 மணி வரை விடுமுறை நாட்களை தவிர்த்து சனிக்கிழமைகள் உட்பட இணைக்கப்பட்டு வருகிறது. முன்னதாக கொடுக்கப்பட்ட மின் இணைப்பு இணையதளங்கள் வாயிலாக மின் நுகர்வோர்கள் தங்களது […]

தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தில் உள்ள பேகம்பேட் பகுதியில் புதிதாக தங்க ஏடிஎம் மையம் நிறுவப்பட்டுள்ளது. இந்த தங்க ஏடிஎம்-ஐ கோல்ட்சிக்கா நிறுவனம் அமைத்துள்ளது. இந்த ஏடிஎம் வழியாக பொதுமக்கள் 0.5 கிராம் முதல் 100 கிராம் வரை தங்கத்தை எடுத்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாம் சாதாரண ஏடிஎம்களில் டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு பயன்படுத்துவது போன்றே தங்க ஏடிஎம்களிலும் டெபிட் கார்டு அல்லது கிரெடிட் கார்டை பயன்படுத்தி தங்க […]

தமிழ்நாடு அரசு புத்தாக்கம் நிறுவனம், சுய தொழில் தொடங்குவதை ஊக்குவிக்கும் வகையில் செயல்படும் தமிழ்நாடு சுய தொழில் தொடங்கும் மற்றும் புத்தாக்கம் திட்டம் குறு மற்றும் சிறு தொழில் துறையில் கீழ் செயல்படுகிறது. இந்த துறை நிறுவனத்தில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. பணியின் விவரங்கள்… பதவியின் பெயர் சம்பளம் பணியிடம் திட்ட இணையாளர் ரூ.25,000-50,000 13 அந்தந்த துறை சார்ந்த பதவிக்கான பிரிவுகள்… பதவியிடம் எண்ணிக்கை […]

தமிழகம் முழுவதும் கூட்டுறவுச் சங்கங்களால் நடத்தப்படும் ரேஷன் கடைகளில் (Ration Shop) காலியாக உள்ள விற்பனையாளர் மற்றும் கட்டுநர் பதவிகளுக்கான நேர்முகத் தேர்வு நாள் வெளியாகியுள்ளது. அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வது எப்படி..? * விண்ணப்பித்தில் தெரிவித்துள்ள மின்னஞ்சல் முகவரிக்கு, அந்தந்த மாவட்ட கூட்டுறவு சங்க ஆள்சேர்க்கை அலுவலகம் மூலம் அனுமதிச் சீட்டை பதிவிறக்கம் செய்வதற்கான பதிவு எண்/கடவு சொல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. * இந்த பதிவு எண்/கடவுச் சொல் […]

வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது 8-ம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்திய தேர்தல்‌ ஆணையத்தின்‌ ஆணைப்‌ படி வாக்காளர்‌ பட்டியலுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்கும்‌ பணியானது கடந்த 01.08.2022 முதல்‌ தொடங்கி இன்று நடைபெற்று வருகிறது. 18 வயது நிறைவடைந்து இதுவரை வாக்காளர்‌ பட்டியலில்‌ பெயர்‌ சேர்க்காதவர்கள்‌, மற்றும்‌ 17 வயது பூர்த்தி அடைந்த இளம்‌ வாக்காளர்கள்‌ வாக்காளர்‌ பட்டியலில்‌ தங்கள்‌ பெயரை சேர்க்க […]