தென்னை மரம் ஏறுவோருக்காக நியூ இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனத்துடன் இணைந்து கேரா சுரக்ஷா காப்பீட்டுத் திட்டத்தை தென்னை வளர்ச்சி வாரியம் அமல்படுத்தி வருகிறது.இந்த காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் விபத்து ஏற்பட்ட 24 மணி நேரத்திற்குள் உயிரிழப்பு ஏற்பட்டால் ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும். சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தால் ரூ.1 லட்சம் வழங்கப்படும். பயிற்சி பெறுபவர் அனைவருக்கும் பயிற்சியாளர்களுக்கும் ஒரு வருட இலவச காப்பீட்டுத் தொகையை தென்னை வளர்ச்சி வாரியம் வழங்க […]

சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களுக்கு தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் கடனுதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. இதுகுறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “தமிழ்நாடு சிறுபான்மையினர் பொருளாதார மேம்பாட்டுக் கழகத்தின் மூலம் சிறுபான்மையினர் கைவினைக் கலைஞர்களுக்கு விராசத் திட்டம் (VIRASAT) (Handloom & Handicraft) கடனுதவி வழங்கும் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள சிறுபான்மையின இனத்தைச் சார்ந்தவர்களான முஸ்லீம், கிறித்தவர், ஜெயின், சீக்கியர், பார்சி, புத்தமதத்தைச் சார்ந்த […]

பார்ட் டைம் வேலையில் பணம் சம்பாதிக்க ஆசைப்பட்டு 6 நாளில் ரூ.32 லட்சத்தை இழந்ததாக வாலிபர் ஒருவர், கோவை சைபர் கிரைம் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சைபர் கிரைம் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க பல்வேறு முயற்சிகளும் நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டாலும் குற்றங்கள் தொடர்ந்து நடைபெறுவதாக காவல்துறையினர் தெரிவிக்கின்றனர். குறிப்பாக ஆன்லைன் இன்வஸ்மெண்ட், ஆன்லைன் வேலை என்ற பெயரில் லட்சக்கணக்கில் பறிகொடுக்கின்றனர். அந்த வகையில், டெலிகிராமில் […]

உங்கள் ஸ்மார்ட்போனில் இருக்கும் பிளைட் மோட் (Flight Mode) அம்சத்தை நீங்கள் ஆக்டிவேட் செய்தாலும் கூட, உங்களுடைய போனில் இன்டர்நெட் சேவை இயங்க வேண்டுமா? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம். முதலில் உங்கள் போனில் டேட்டா மோட் ஆன் (Data Mode On) செய்துகொள்ளுங்கள். பிறகு, உங்கள் போனில் பிளைட் மோட் ஆன் (Flight mode on) செய்துகொள்ளுங்கள். அடுத்தபடியாக, உங்கள் போனின் டயல்பேட் (Dialpad) ஓபன் […]

கள்ளச்சந்தையில் விற்பதற்காக கடத்த முயன்ற ரூ 11.7 லட்சம் மதிப்புள்ள 1809 குவிண்டால் பொது விநியோகத்திட்ட அரிசி பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.. இது தொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; அனைவருக்கும் உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பினை உறுதி செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசு பொது விநியோகத்திட்டம் அல்லது சிறப்பு பொது விநியோகத்திட்டம் ஆகியவற்றின் மூலம் அத்தியாவசியப் பண்டங்களை குடும்ப அட்டைதாரர்களுக்கு நியாய விலைக் கடைகள் மூலம் […]

ஒன்றுக்கு மேற்பட்ட பான் கார்டுகளை வைத்திருப்பது சட்டவிரோதமானது மற்றும் விதிமுறைகளைப் பின்பற்றத் தவறினால் வருமான வரித்துறை ரூ.10,000 அபராதம் விதிக்கலாம் எனக் கூறியுள்ளது. இந்தியாவின் மிக முக்கியமான நிதி, அடையாள ஆவணங்களில் ஒன்று பான் கார்டு. பான் அல்லது நிரந்தர கணக்கு எண் என்பது வருமான வரித்துறையால் ஒதுக்கப்பட்ட 10 இலக்க எண் ஆகும். வருமான வரி செலுத்துவோர் பான் கார்டு கண்டிப்பாக வைத்திருக்க வேண்டும். பலரிடம் ஒன்றுக்கும் மேற்பட்ட […]

இந்திய அஞ்சல் துறையில் போஸ்ட்மேன், மெயில் கார்டு பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிக்கை வெளியானதாகவும், இந்த அறிவிப்பின் மூலம் கிட்டத்தட்ட 60,000 இடங்கள் நிரப்பப்பட உள்ளதாகவும், டிசம்பர் 14ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்றும் சமூக ஊடகங்களிலும், வாட்ஸ்அப் குழுக்களிலும் செய்திகள் தகவல் வெளியாகியுள்ளது. இந்திய அஞ்சல் துறை மிகப்பெரிய ஊழியர்களை கொண்டு இயங்கும் ஒரு அமைப்பாகும். மொத்தமுள்ள 1.5 லட்சம் தபால் நிலையங்களின் வாயிலாக 4 லட்சத்திற்கும் மேற்பட்ட தபால் […]

கூகுள் பே, ஃபோன் பே உள்ளிட்ட UPI பணப்பரிவர்த்தனைகளுக்கு வரம்பு அறிவிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்தியாவைப் பொறுத்தவரை டிஜிட்டல் முறையில் பணப்பரிவர்த்தனை செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. குறிப்பாக, பெரும்பாலான மக்கள் கூகுள் பே, ஃபோன் பே போன்ற UPI வழி பணப்பரிவர்த்தனைகளை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு ரூபாய், 10 ரூபாய் என சில்லறை காசை எவ்வளவு வேண்டுமானாலும், எத்தனை முறை வேண்டுமானாலும் அனுப்பலாம் என்ற […]

வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல், டீசல் மற்றும் கியாஸ் விலை நிர்ணயிக்கப்படுகிறது. ஒவ்வொரு மாதமும் 1ஆம் தேதி புதிய விலை நிர்ணயிக்கப்பட்டு எண்ணெய் நிறுவனங்கள் அறிவிக்கின்றன. அந்த வகையில், டிசம்பர் மாதத்திற்கான கியாஸ் விலை குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. வர்த்தக சிலிண்டர் விலை வெறும் ரூ.1.50 குறைக்கப்பட்டு ரூ.1,891ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. ஓட்டல், டீக்கடை […]

தமிழகத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் 1,895 கவுரவ விரிவுரையாளர் பணியிடங்களை நிரப்புவதற்கு உயர்கல்வித்துறை அனுமதி வழங்கியுள்ளது. இது குறித்து உயர்கல்வித்துறை செயலாளர் கார்த்திகேயன் வெளியிட்டுள்ள அரசாணையில், கவுர விரிவுரையாளர்களுக்கு மாதம் 20,000 தொகுப்பூதியத்தில் நியமிக்க அரசு ஏற்கனவே உத்தரவிட்டுள்ளது. அரசு கல்லூரிகளில் காலியாக உள்ள 7,198 உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 5,303 கவுர விரிவுரையாளர்கள் மட்டுமே பணி புரிந்து வருகின்றனர். மீதமுள்ள 1,895 பணியிடங்கள் காலியாக […]