இந்தியாவின் மிக முக்கிய அடையாள ஆவணமாக திகழும் ஆதார் அட்டை, இன்றைய காலகட்டத்தில் வங்கிப் பரிவர்த்தனைகள் முதல் அரசின் நலத்திட்டங்கள் வரை அனைத்திற்கும் ஒரு திறவுகோலாக உள்ளது. பொதுவாக, திருமணத்திற்குப் பிறகு பெண்கள் தங்களின் அடையாள சான்றுகளில் தந்தையின் பெயருக்குப் பதிலாக கணவரின் பெயரை மாற்ற விரும்புவது வழக்கம். இதனை எளிமைப்படுத்தும் வகையில், இந்திய தனித்துவ அடையாள ஆணையம் (UIDAI) இணையதளம் வழியாகவும், நேரடியாகவும் விவரங்களைப் புதுப்பிக்கும் வசதியை வழங்கியுள்ளது. […]
அறிய வேண்டியவை
Things to Know: There are certain things that everyone should know about life. Things they need to know. Things they need to learn. சுய ஒழுக்கம். அறிய வேண்டியவை…
இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை ரூ.100ஐ தாண்டிவிட்டது. ஒரு லிட்டர் பெட்ரோல் அல்லது டீசல் ரூ.100க்கும் குறைவாக எங்கும் கிடைப்பதில்லை. கடந்த சில வருடங்களாக பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வந்தாலும், நாட்டில் பெட்ரோல் விலை இன்னும் குறையவில்லை. இதன் காரணமாக, விலையை வாங்க முடியாத சாதாரண மற்றும் நடுத்தர மக்கள் மின்சார வாகனங்களை நோக்கித் திரும்புகின்றனர். […]
தமிழ்நாட்டில் உள்ள ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்தவ மதத்திற்கு மாறிய ஆதிதிராவிட மக்களின் சமூகப் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், மாநில அரசு மிக முக்கியமான அரசாணையை (எண்: 105) வெளியிட்டுள்ளது. ஒரு குடும்பத்தில் எதிர்பாராமல் நிகழும் உயிரிழப்பின் போது, அந்த ஏழை குடும்பம் இறுதிச் சடங்குகளை செய்யக்கூட கடன் வாங்கும் நிலைக்கு தள்ளப்படக்கூடாது என்பதே இத்திட்டத்தின் அடிப்படை நோக்கமாகும். கடந்த 2012-13 ஆம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு […]
குடும்பங்களில் சொத்துத் தகராறுகள் ஏற்படுவதற்கு மிக முக்கிய காரணம், உயில் எழுதப்படாததும் மற்றும் வாரிசுரிமைச் சட்டங்கள் குறித்த தெளிவற்ற புரிதலுமே ஆகும். பொதுவாக, தந்தையின் சொத்து என்பது ‘மூதாதையர் சொத்து’ (Ancestral Property) என்றும், அதில் ஒரு குறிப்பிட்ட வாரிசுக்கு மட்டுமே உரிமை உண்டு என்றும் பலர் தவறாக கருதுகின்றனர். ஆனால், இந்தியச் சட்டப்படி வாரிசுகள் முறைப்படுத்தப்பட்ட பட்டியலின் (Systematic Order) கீழ் வகைப்படுத்தப்பட்டுள்ளனர். குறிப்பாக, ஒரு பெண் இறந்துவிட்டால், […]
தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை மாவட்ட வாரியாக நிரப்பும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன. அந்த வகையில், சிவகங்கை மாவட்டத்தை சேர்ந்த தகுதியுள்ள விண்ணப்பதாரர்களுக்கு ஒரு முக்கிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் கீழ், வட்டார இயக்க மேலாண்மை அலகில் ‘வட்டார ஒருங்கிணைப்பாளர்’ (Block Coordinator) பணிக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இந்த வேலைவாய்ப்பிற்கு விண்ணப்பிக்க இன்று (பிப்ரவரி 16) மாலை […]
தமிழகத்தில் இன்னும் குடிசை வீடுகளில் வசித்து வரும் ஏழை எளிய மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்தி, 2030-ஆம் ஆண்டிற்குள் “குடிசைகள் இல்லாத தமிழ்நாடு” என்ற இலக்கை அடைவதில் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. இதன் ஒரு பகுதியாக, ‘கலைஞர் கனவு இல்லம்’ திட்டத்தின் கீழ் புதிதாக ஒரு லட்சம் கான்கிரீட் வீடுகளைக் கட்டுவதற்காக ரூ.3,500 கோடி நிதி ஒதுக்கித் தமிழக அரசு தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் […]
கடந்த ஐந்து நிதியாண்டுகளில் (2020-21 முதல் 2024-25 வரை) இந்தியாவில் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் விரைவுச் சாலைகளில் மொத்த சுங்க வசூல் சுமார் ₹2.27 லட்சம் கோடி. இந்த எண்ணிக்கையை சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம் (MoRTH) பிப்ரவரி 11, 2026 அன்று ராஜ்யசபாவில் வெளியிட்டது. நாட்டில் அதிக சுங்க கட்டணம் வசூலிக்கும் சில சுங்கச்சாவடிகள் உள்ளன என்பது தெளிவாகிறது. எனவே, எந்த சுங்கச்சாவடிகள் அதிக சுங்கச்சாவடிகளை வசூலிக்கின்றன […]
தமிழ்நாட்டில் உள்ள ரேஷன் அட்டைதாரர்களின் குறைகளை நிவர்த்தி செய்வதற்காக, உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் மாதந்தோறும் நடத்தப்படும் சிறப்பு குறைதீர் முகாம் இன்று (பிப்ரவரி 14, சனிக்கிழமை) நடைபெற உள்ளது. பொதுமக்களின் நீண்டகால கோரிக்கைகளை உடனுக்குடன் தீர்க்கும் நோக்கில், மாநிலம் முழுவதும் உள்ள அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் இதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இன்று காலை 10 மணிக்கு தொடங்கும் இந்த முகாம், பிற்பகல் 1 மணி வரை […]
இந்திய பொருளாதாரத்தின் முதுகெலும்பாக திகழும் அமைப்புசாரா தொழிலாளர்களின் முதுமை கால நிதி தேவையைப் பூர்த்தி செய்யும் நோக்கில், மத்திய அரசு கடந்த 2019ஆம் ஆண்டு ‘பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி மான்-தன்’ (PM-SYM) என்ற ஓய்வூதிய திட்டத்தை தொடங்கியது. இத்திட்டத்தின் கீழ் சேரும் தொழிலாளர்களுக்கு, அவர்களின் 60 வயதிற்கு பிறகு வாழ்நாள் முழுவதும் மாதந்தோறும் ரூ.3,000 உத்தரவாதமான ஓய்வூதியம் வழங்கப்படுகிறது. குறிப்பாக, வீட்டுப் பணியாளர்கள், தெரு வியாபாரிகள், கட்டுமானத் தொழிலாளர்கள் […]
நகைக்கடைக்கு சென்று தங்கம் அல்லது வெள்ளி நகைகளை வாங்கும்போது, அவற்றை ஒரு இளஞ்சிவப்பு (Pink) நிற காகிதத்தில் வைத்து மடித்துத் தருவதை நாம் பார்த்திருப்போம். இன்றைய நவீன கார்ப்பரேட் கடைகளில் ஆடம்பரமான பெட்டிகள் புழக்கத்திற்கு வந்தாலும், பாரம்பரியமான பல கடைகளில் இன்றும் இந்த பிங்க் பேப்பர் கலாச்சாரம் தொடர்கிறது. இதற்குப் பின்னால் வெறும் சென்டிமென்ட் மட்டுமல்ல, வியக்க வைக்கும் வணிகத் தந்திரமும், அறிவியல் காரணமும் ஒளிந்திருப்பதாக தெரிவிக்கிறார் நகை வியாபாரி […]

