கால்நடை வளர்ப்பு மற்றும் வர்த்தகத்தில் ஈடுபடும் விவசாயிகளுக்கு, ஒரு மாட்டின் வயதை துல்லியமாக கண்டறிவது என்பது மிகவும் சவாலான காரியம். சந்தைகளில் மாடுகளை வாங்கும்போதும், விற்கும்போதும் அல்லது முறையான மருத்துவப் பரிசோதனைகளை மேற்கொள்ளும்போதும் அதன் சரியான வயது தெரிந்திருப்பது அவசியம். நவீன தொழில்நுட்பங்கள் பல இருந்தாலும், இன்றும் கிராமப்புறங்களில் மாடுகளின் பற்களை கொண்டு வயதை கணிக்கும் பாரம்பரிய முறையே மிகவும் நம்பகமானதாக கருதப்படுகிறது. மாடுகள் பிறக்கும்போது அவற்றுக்கு நிரந்தரப் பற்கள் […]

இந்தியர்களின் வாழ்வில் தங்கம் என்பது வெறும் ஆபரணம் மட்டுமல்ல, அது ஒரு மங்களகரமான சேமிப்பாகவும், இக்கட்டான காலங்களில் கைகொடுக்கும் சிறந்த முதலீடாகவும் பார்க்கப்படுகிறது. விசேஷங்கள் முதல் பண்டிகைகள் வரை தங்கத்தின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் வேளையில், வாடிக்கையாளர்கள் அதன் தூய்மையை கண்டறியும் ‘ஹால்மார்க்’ (Hallmark) நடைமுறைகளை தெளிவாக புரிந்துகொள்வது அவசியமாகும். 24K, 22K, 916 போன்ற தொழில்நுட்ப வார்த்தைகள் பல நேரங்களில் சாமானிய நுகர்வோருக்குக் குழப்பத்தை ஏற்படுத்தி, அவர்கள் […]

தமிழ்நாட்டில் வாக்காளர் பட்டியலில் புதிய பெயர்களை சேர்க்கவும், திருத்தங்கள் மேற்கொள்ளவும் வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. குறிப்பாக, 18 வயது பூர்த்தியடைந்த இளைஞர்கள் மற்றும் இதுவரை பட்டியலில் இடம்பெறாதவர்கள் இந்த இறுதி வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுமாறு தேர்தல் ஆணையம் வலியுறுத்தியுள்ளது. இதற்காக கடந்த வாரங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், இன்று கடைசி நாளான இன்று ஆன்லைன் வாயிலாக மக்கள் விண்ணப்பித்து வருகின்றனர். புதிய […]

இந்திய ரிசர்வ் வங்கி (RBI), நாட்டின் வங்கித் துறையை ஒழுங்குபடுத்தும் உச்சபட்ச அமைப்பாகும். சென்னை, டெல்லி, பெங்களூரு என நாடு முழுவதும் கிளைகளை கொண்டுள்ள இவ்வமைப்பில், தற்போது ‘அலுவலக உதவியாளர்’ (Office Attendant) பணிக்கான 572 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. 10ஆம் வகுப்பு முடித்தவர்கள் இந்தப் பணிக்கு சேர விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடு தழுவிய அளவில் நடைபெறும் இந்த ஆள்சேர்ப்பில், அதிகபட்சமாக லக்னோவில் 125 […]

பூமியில் பல இயற்கை அதிசயங்கள் உள்ளன. நீங்கள் அத்தகைய அதிசயங்களைக் காண விரும்பினால், இந்தோனேசியா ஒரு விருப்பமான இடமாகும். ஆயிரக்கணக்கான தீவுகளில் பரவியுள்ள வெப்பமண்டல கடற்கரைகள், பழங்கால கோவில்கள், மழைக்காடுகள், வனவிலங்குகள் மற்றும் செயல்படும் எரிமலைகள் ஆகியவற்றுக்கு இந்த நாடு தாயகமாக உள்ளது. இந்த இயற்கை அதிசயங்களில், காவா இஜென் என்பது அழகும் ஆபத்தும் சங்கமிக்கும் ஒரு இடமாகும். கிழக்கு ஜாவாவில் அமைந்துள்ள இந்த பகுதி ஒரு எரிமலை குழிக் […]

உலக நாடுகளின் பயணச் சுதந்திரத்தையும், அந்தந்த நாடுகளின் பாஸ்போர்ட் வலிமையையும் அளவிடும் ‘ஹென்லி பாஸ்போர்ட் குறியீடு’ (Henley Passport Index) சமீபத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஒரு நாட்டின் ராஜதந்திர உறவுகள், பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் சர்வதேச நாடுகளுடனான நற்பெயர் ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே இந்த தரவரிசை நிர்ணயிக்கப்படுகிறது. இந்தத் தரவரிசைப் பட்டியலில், உலகிலேயே மிகவும் சக்திவாய்ந்த பாஸ்போர்ட் கொண்ட நாடாக சிங்கப்பூர் தொடர்ந்து மூன்றாவது ஆண்டாக முதலிடத்தை தக்கவைத்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் […]

வருங்கால வைப்பு நிதி (EPFO) சந்தாதாரர்களுக்கு ஒரு மிக முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுவரை பிஎஃப் (PF) தொகையைப் பெறுவதற்கு ஆன்லைனில் விண்ணப்பித்து, பல நாட்கள் காத்திருக்க வேண்டிய நடைமுறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், மத்திய தொழிலாளர் அமைச்சகம் அதிரடி மாற்றத்தை கொண்டு வரவுள்ளது. அதன்படி, வரும் ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் பிஎஃப் உறுப்பினர்கள் தங்களது கணக்கில் உள்ள தொகையை யுபிஐ மூலமாக நேரடியாகவும், உடனடியாகவும் வங்கி கணக்கிற்கு […]

இந்தியாவின் நிதித்துறையில் அசைக்க முடியாத நம்பிக்கைக்குரிய அடையாளமாக திகழ்வது மத்திய அரசுக்கு சொந்தமான எல்ஐசி (LIC) நிறுவனம். பல தசாப்தங்களாக நடுத்தரக் குடும்பங்களின் சேமிப்பு மற்றும் பாதுகாப்பிற்கான “Safe Haven” ஆக விளங்கும் இந்த நிறுவனம், அண்மையில் சமூக வலைதளங்களில் ஒரு காரசாரமான விவாதத்திற்கு உள்ளாகியுள்ளது. பியூஷ் டிரேட்ஸ் என்பவர் தனது உறவினரின் 20 ஆண்டு கால எல்ஐசி முதலீட்டு அனுபவத்தைப் பகிர்ந்துள்ள பதிவு, முதலீட்டாளர்கள் மத்தியில் ஒரு புதிய […]

பிறப்புச் சான்றிதழ் என்பது பாஸ்போர்ட் எடுப்பது முதல் பள்ளிச் சேர்க்கை, சொத்துரிமை, திருமணம் என ஒவ்வொரு கட்டத்திலும் இந்த ஆவணம் இன்றியமையாததாக உள்ளது. இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த சான்றிதழில் பெயர் அல்லது எழுத்துப் பிழைகள் இருந்தால், அது வருங்காலத்தில் பெரும் சட்ட சிக்கல்களை உருவாக்கக்கூடும். எனவே, பிறப்புச் சான்றிதழில் உள்ள திருத்தங்களை சீர் செய்யவும், முறைப்படி பெயர் மாற்றம் செய்யவும் பின்பற்ற வேண்டிய சட்ட நடைமுறைகளை இங்கே விரிவாக காண்போம். […]

தமிழ்நாட்டில் குடும்ப அட்டைதாரர்களின் வசதிக்காக, ரேஷன் கார்டுகளை டிஜிட்டல் வடிவில் ஆன்லைனிலேயே பதிவிறக்கம் செய்துகொள்ளும் புதிய நடைமுறை நடைமுறைக்கு வந்துள்ளது. அதன்படி, அசல் அட்டை தொலைந்தாலோ அல்லது உடனடி தேவை ஏற்பட்டாலோ, பொதுமக்கள் அலைய வேண்டிய அவசியமின்றி தங்கள் கைபேசி அல்லது கணினி மூலமாகவே மின்னணு அட்டையை பெற்றுக்கொள்ளலாம். இதற்கான எளிய வழிமுறைகளை தமிழக உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை வெளியிட்டுள்ளது. முதலில், தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் […]