பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் கடுமையாக உயர்ந்து வரும் நிலையில், மின்சார விமானங்கள் குறைந்த விலையில் விமானப் பயண வசதியைப் பெறும் என்ற புதிய நம்பிக்கையை மக்களிடையே ஏற்படுத்தியுள்ளன. அதைப் பற்றி தெரிந்து கொள்வோம். உலகளவில் நிகழும் பதற்றங்கள் காரணமாக இன்றைய காலக்கட்டத்தில் பெட்ரோல் மற்றும் டீசல் விலைகள் விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகின்றன. இந்தநிலையில், பயணிகள் மலிவு விலை மற்றும் நிலையான பயண விருப்பங்களைத் தேடுகிறார்கள். இதுபோன்ற […]

தேன் போல மனதை வருடும் தேநீர், வெறும் ஒரு சூடான பானமாக மட்டுமல்ல; அது ஒரு கலாச்சாரம், ஒரு கலை, சில சமயங்களில் மிகுந்த ஆடம்பரத்தின் திருவிழாவாகவும் கருதப்படுகிறது. உலகில் உள்ள சில தேநீர்கள், அவற்றின் மணமும் சுவையும் மட்டுமல்லாது, அவற்றைச் சுற்றியுள்ள வரலாற்றுச் செய்திகளாலும், மரபுகளாலும் புகழ்பெற்றுள்ளன. பாண்டா உரமிடப்பட்ட தோட்டங்கள் முதல் வரலாற்று மலைத் தோட்டங்கள் வரை, இத்தேநீர்கள் தனிப்பட்ட கதை கொண்டவை. இந்த வகையான தேநீர்கள், […]

சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நிறைவேற்றியுள்ளது.. சர்வதேச அணுசக்தி நிறுவனத்துடனான (IAEA) ஒத்துழைப்பை நிறுத்துவதற்கான மசோதாவை ஈரான் நாடாளுமன்றம் அங்கீகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இஸ்ரேலுடனான சமீபத்திய மோதலைத் தொடர்ந்து அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் IAEA ஆய்வுகளை நிறுத்துவதையும் ஈரானின் அணுசக்தி தளங்களுக்கான அணுகலைக் கட்டுப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது.. ஈரானின் இந்த நடவடிக்கை மூலம் சர்வதேச அணுசக்தி மேற்பார்வையையும் […]

சீனாவில் புதிய ஆபத்தான வௌவால் வைரஸ் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். பல சீன பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், சமீபத்தில் ஒரு ஆய்வை வெளியிட்டனர். 2017 முதல் 2020 வரை பத்து இனங்களைச் சேர்ந்த 142 வௌவால்களிடமிருந்து சிறுநீரக மாதிரிகளை அவர்கள் சேகரித்தனர். இந்த மாதிரிகளை கொண்டு மரபணு சோதனை மேற்கொண்டதில் 22 வைரஸ் இனங்கள் கண்டறியப்பட்டது.. இதில் 20 முற்றிலும் புதிய வைரஸ்கள், இரண்டு ஹெனிபா வைரஸ்கள் கொடிய ஹென்ட்ரா […]

பல முறை ஏற்பட்ட தாமதங்களைச் சந்தித்த பிறகு ஆக்ஸியம் மிஷன் 4 மூலம் ஃபால்கன் ராக்கெட் இன்று வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டது. இந்திய விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லா உள்ளிட்ட 4 பேர் விண்வெளிக்கு புறப்பட்டு சென்றுள்ளனர். நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் உடன் இணைந்து ஆக்ஸியம் ஸ்பேஸ் நிறுவனத்தால் இந்த திட்டம் செயல்படுத்தப்படுகிறது. அமெரிக்காவின் புளோரிடாவில் உள்ள நாசாவின் கென்னடி விண்வெளி மையத்தில் உள்ள லாஞ்ச் காம்ப்ளக்ஸ் 39A இலிருந்து […]

2019-ம் ஆண்டு இந்திய விமானப்படை விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமனை கைது செய்ததாக கூறப்படும் பாகிஸ்தான் ராணுவ அதிகாரி மேஜர் மொய்ஸ் அப்பாஸ் ஷா, தெற்கு வசிரிஸ்தானில் நடைபெற்ற தெஹ்ரீக்-இ-தலிபான் பாகிஸ்தான் (TTP) படையினருடனான மோதலில் உயிரிழந்துள்ளார். 37 வயதான மேஜர் ஷா, பாகிஸ்தானின் உயர்நிலை சிறப்பு சேவைக் குழுவான SSG பிரிவில் பணியாற்றி வந்தவர். TTP தாக்குதல்களைத் தடுக்க முன்னணி பதவியில் செயல்பட்டபோது, லான்ஸ் நாயக் ஜிப்ரானுல்லாவுடன் இணைந்து […]

இந்தியாவின் ககன்யான் திட்டத்தின் கீழ் தேர்ந்தெடுக்கப்பட்ட விண்வெளி வீரர்களில் ஒருவரான இந்திய விமானப்படையின் (IAF) குரூப் கேப்டன் சுபன்ஷு சுக்லா, இன்று சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு பயணித்தார்.. மோசமான வானிலை மற்றும் தொழில்நுட்ப கோளாறுகள் காரணமாக பல முறை இந்த திட்டம் தள்ளிவைக்கப்பட்ட நிலையில் இன்று ஃபால்கன் 9 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.. 1984 ஆம் ஆண்டு அப்போதைய சோவியத் யூனியனின் சல்யுட்-7 விண்வெளி நிலையத்தின் ஒரு பகுதியாக […]

பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து காய்ச்சல் மற்றும் தலைவலிக்கான முக்கியமான மருந்தான பாராசிட்டமாலை தயாரிக்க முடியும் என இங்கிலாந்து எடின்பர்க் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள புதிய ஆய்வு காட்டுகிறது. இந்த முயற்சியில் பாலிஎதிலீன் டெரெப்தாலேட் (PET) எனப்படும் பிளாஸ்டிக் வகையிலிருந்து பாராசிட்டமால் தயாரிக்க எஷ்சரிச்சியா கோலி (E.coli) எனும் பாக்டீரியா பயன்படுத்தப்பட்டது. இது உலகளவில் அதிகமாக பயன்படுத்தப்படும் மருந்துகளில் ஒன்றாகும். இந்த கண்டுபிடிப்பின் மூலம், பாராசிட்டமால் தயாரிக்க தேவையான மூலப்பொருளை பிளாஸ்டிக் கழிவுகளிலிருந்து பெற […]

இந்தியா எந்த நாட்டில் இருந்து அதிக எண்ணெய் இறக்குமதி செய்கிறது தெரியுமா? நரேந்திர மோடி அரசு பிப்ரவரி 2022க்கு முன்பு ரஷ்யாவிலிருந்து தனது எண்ணெயில் 0.50 சதவீதத்தை மட்டுமே இறக்குமதி செய்து வந்தது. இருப்பினும், 2025 ஆம் ஆண்டில் இந்த அளவு கணிசமாக உயர்ந்து 30–35 சதவீதமாக உயர்ந்தது. பெட்ரோலிய அமைச்சக அதிகாரிகளின் கூற்றுப்படி, ரஷ்யா இப்போது இந்தியாவின் முக்கிய எண்ணெய் சப்ளையர்களில் ஒன்றாக தன்னை நிலைநிறுத்திக் கொண்டுள்ளது. தற்போதைய […]

ஈரானுக்கும் இஸ்ரேலுக்கும் இடையே போர்நிறுத்தம் அமலுக்கு வந்த நிலையில், இஸ்ரேலுக்காக உளவு பார்த்ததாகக் கூறப்படும் மூன்று பேர் தூக்கிலிடப்பட்டனர். இந்த அதிர்ச்சி தகவலை ஈரான் நீதித்துறை புதன்கிழமை உறுதிப்படுத்தியுள்ளது. இஸ்ரேலும், அமெரிக்காவும் ஈரானின் விமானத்தளங்கள், அணுமின் ஆராய்ச்சி நிலையங்கள் மீது போர் விமானங்கள் மூலமாக குண்டு வீசின. இந்த சூழலில், இஸ்ரேல், ஈரான் போர் நிறுத்தத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. தொடர்ந்து நேற்றைய தினம் போர் நிறுத்தம் அமலுக்கு வந்தது. இந்த […]