ஈரான்-இஸ்ரேல் போரில் ‘இராணுவத் தலையீடு’ குறித்து அமெரிக்காவை ரஷ்யா எச்சரித்துள்ளது. ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் மரியா ஜகரோவா செய்தியாளர்களிடம் பேசிய போது “இந்த சூழ்நிலையில் ராணுவத் தலையீடு குறித்து நாங்கள் குறிப்பாக வாஷிங்டனை எச்சரிக்க விரும்புகிறோம், இது உண்மையிலேயே கணிக்க முடியாத எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும் மிகவும் ஆபத்தான நடவடிக்கையாக இருக்கும்” என்று தெரிவித்தார். புதன்கிழமை, ரஷ்யாவின் துணை வெளியுறவு அமைச்சர் செர்ஜி ரியாப்கோவ் இஸ்ரேலுக்கு நேரடி […]
உலகம்
WORLD NEWS|Get the latest international news and world events from Asia, Europe, the Middle East, and more. See world news photos and videos at 1newsnation.com
இஸ்ரேலில் உள்ள மருத்துவமனை மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல் நடத்தப்பட்டதை அடுத்து, ஈரானின் உச்சத் தலைவர் அயதுல்லா அலி கமேனி இனியும் இருக்கக்கூடாது என்று இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இன்று கடுமையான எச்சரிக்கை விடுத்தார். இஸ்ரேல் – ஈரான் மோதல் 7வது நாளாக தொடர்ந்து நீடித்து வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை ஈரானின் இராணுவ உள்கட்டமைப்பு, மூத்த தளபதிகள் மற்றும் அணுசக்தி நிபுணர்களை குறிவைத்து இஸ்ரேலின் எதிர்பாராத வான்வழித் தாக்குதல் நடத்தியதால் […]
அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் நிறுத்தம் ஏற்பட்டதாக கூறி வந்த நிலையில் தற்போது யூ டர்ன் அடித்துள்ளார். அணு ஆயுத மோதலாக மாறக்கூடிய சாத்தியம் இருப்பதாகக் கூறிய ஒரு இராணுவ மோதலை நிறுத்த முடிவு செய்ததற்காக இந்தியா மற்றும் பாகிஸ்தான் தலைவர்களுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் பாராட்டு தெரிவித்தார். இதற்கு முன்பு வரை அமெரிக்கா மத்தியஸ்தம் செய்ததால் தான் இந்தியா – […]
அமெரிக்காவின் டெக்சாஸில் உள்ள ஸ்பேஸ்எக்ஸ் சோதனை மையத்தில் ராக்கெட் வெடித்து சிதறியதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. எலோன் மஸ்க்கின் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ், தனது அடுத்த ஸ்டார்ஷிப் ராக்கெட் ஏவுதலுக்காக முக்கியமான சோதனையை நடத்தத் திட்டமிட்டிருந்தது. ராக்கெட் வெடித்து சிதறியதில் அந்த முயற்சி தோல்வியை தழுவியது. இந்த சோதனை என்பது, ஏவுதலுக்கு முன் இயந்திரங்கள் நம்பிக்கையாக செயல்படுகிறதா என்பதை உறுதி செய்யும் இறுதி கட்ட ஆய்வு ஆகும். விபத்தின்போது கட்டிடத்தில் […]
பிரதமர் மோடி ஒரு அருமையான மனிதர் என்று பாராட்டிய ட்ரம்ப், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக மீண்டும் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், பிரதமர் நரேந்திர மோடி “ஒரு அற்புதமான மனிதர்” என்று பாராட்டி உள்ளார். மேலும் மோடி உடன் முந்தைய இரவு தொலைபேசியில் பேசியதை அவர் உறுதிப்படுத்தினார். இருப்பினும், இந்தியாவிற்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் போர் நிறுத்தத்தை மத்தியஸ்தம் செய்ததாக ட்ரம்ப் மீண்டும் கூறியுள்ளார். […]
US President Donald Trump has approved attack plans against Iran.
அமெரிக்க குடிமக்களை திருமணம் செய்து கொள்வதன் மூலம் மோசடியாக குடியுரிமை பெற விரும்பும் வெளிநாட்டினருக்கு எதிரான நடவடிக்கைகளை அமெரிக்க குடியுரிமை மற்றும் குடியேற்ற சேவைகள் (USCIS) கடுமையாக்கியுள்ளது . இந்த மோசடி இப்போது முழு அளவிலான தொழிலாக மாறியுள்ளது என்றும், உள்நாட்டுப் பாதுகாப்பிற்கு ஆபத்தை விளைவிப்பதாகவும் அதிகாரிகள் குற்றம்சாட்டுகின்றனர். அமெரிக்காவில் விரைவான நிரந்தர குடியுரிமை பெறுவதற்கான சிரமமற்ற வழியாக திருமண அடிப்படையிலான க்ரீன் கார்டுகள் (Marriage Green Cards) கருதப்படுகின்றன. […]
ஜப்பானின் ஹொக்கைடோவில் உள்ள நெமுரோ தீபகற்பத்தின் தென்கிழக்கு கடற்கரையில் இன்று (வியாழக்கிழமை) அதிகாலையில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் 6.1 ஆக பதிவானதாக ஜப்பான் வானிலை ஆய்வு நிறுவனம் (JMA) தெரிவித்துள்ளது. சின்ஹுவா செய்தி நிறுவனத்தின்படி, இந்த நிலநடுக்கம் கடலோரத்தில் நிகழ்ந்ததாகவும், அதன் மையப்பகுதி 42.8° வடக்கு அட்சரேகையிலும் 146.4° கிழக்கு தீர்க்கரேகையிலும் இருந்தது. தற்போது வரை, சுனாமி எச்சரிக்கைகள் எதுவும் விடுக்கப்படவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜப்பான் வானிலை […]
காசா மீதான இஸ்ரேலின் தொடர்ந்து நடைபெறும் வான்வழித் தாக்குதலும் துப்பாக்கிச் சூடும் உயிரிழப்புகளை தினசரி பெருக்கி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் காசா முழுவதும் குறைந்தது 140 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. 2023 அக்டோபரில் தொடங்கிய இஸ்ரேல் – ஹமாஸ் இடையிலான போர், உலகம் முழுவதும் அச்சத்தை ஏற்படுத்தியது. தொடர்ந்து சுமார் ஒரு ஆண்டுக்குப்பிறகு, 2024 ஜனவரியில் அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளின் முயற்சியால் போர் […]
உலகத்தில் நரகம் எது என்றால் அது காசாதான் என நிச்சயமாக சொல்லிவிடலாம். அப்படி ஒரு பரிதாபமான, மோசமான நிலைக்கு அப்பகுதி தள்ளப்பட்டுள்ளது. இஸ்ரேலின் ஏவுகணை தாக்குதல்களால் காசாவின் கட்டடங்கள் சரிந்து கிடக்கும் நிலையில் அங்குள்ள மக்களுக்கு செல்லும் உணவுகளும் மருந்துகளும் தடுக்கப்பட்டுள்ளன. ஐநா போன்ற அமைப்புகள் தரும் சிறிதளவு உணவுக்காக தட்டை ஏந்தி கிலோ மீட்டர் கணக்கில் அலையும் பரிதாப நிலையில் காசா மக்கள் உள்ளனர். பசியாற உணவு தேடி […]

