“ஈரான், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடத்த முன்வந்துள்ளது; ஆனால் ஈரான் பேச்சுவார்த்தை நடத்த மிகவும் தாமதமாகிவிட்டது ” என அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், அமெரிக்கா இரானின் மீது தாக்குதல் நடத்தவோ அல்லது அதன் அணுசக்தி மையங்களை இலக்காகக் கொள்ளவோ திட்டமிட்டுள்ளதா என்ற கேள்விக்கு அவர் நேரடியாக பதிலளிக்க மறுத்துவிட்டார். மேலும் “அடுத்த வாரம் மிக முக்கியமானதாக இருக்கும்” என்று டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்பின் இந்த பேச்சு உலக நாடுகளிடையே […]

பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை (ஜூன் 18, 2025) கனடாவிலிருந்து குரோஷியாவை சென்றடைந்தார். குரோஷிய பிரதமர் ஆண்ட்ரேஜ் பிளென்கோவிச்சுடனான சந்திப்பின்போது, ரஷ்யா-உக்ரைன் மோதல் மற்றும் இஸ்ரேல்-ஈரான் நிலைமை குறித்து விவாதிக்கப்பட்டது. ஐரோப்பாவாக இருந்தாலும் சரி, ஆசியாவாக இருந்தாலும் சரி, எந்தவொரு பிரச்சினைக்கும் போர்க்களத்திலிருந்து தீர்வு வர முடியாது என்று பிரதமர் மோடி கூறினார். உலகின் எந்தவொரு நாட்டிற்கும் பிராந்திய ஒருமைப்பாடு மற்றும் இறையாண்மைக்கு மரியாதை அவசியம் என்று அவர் கூறினார். […]

ஈரான் மீது தாக்குதல் நடத்தியதன் மூலம் இஸ்ரேல் மிகப்பெரிய தவறு செய்துவிட்டதாக அந்நாட்டு உச்ச தலைவர் காமெனி தெரிவித்துள்ளார். ஈரான் மற்றும் இஸ்ரேல் இடையே பதட்டங்கள் அதிகரித்து வருகிறது. இஸ்ரேலின் தொடர்ச்சியான தாக்குதல்களில் அமெரிக்காவின் நேரடி ஈடுபாடு முழு அளவிலான பிராந்திய மோதலைத் தூண்டும் என்று ஈரான் எச்சரித்தது. “எந்தவொரு அமெரிக்க தலையீடும் இப்பகுதியில் ஒரு முழுமையான போருக்கு வழிவகுக்கும்” என்று ஈரானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் எஸ்மாயில் […]

அமெரிக்கா எங்கள் மீது தாக்குதல் நடத்தினால் தக்க பதிலடி கொடுக்கப்படும் என ஈரான் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி […]

பாகிஸ்தானில் உள்ள ஜகோபாபாத் அருகே தண்டவாளத்தில் ஏற்பட்ட குண்டுவெடிப்பு காரணமாக அந்த வழியாக சென்ற ஜாஃபர் ரயில் தடம் புரண்டது. இந்த சம்பவம் பலுசிஸ்தான் வழியாக ரயில் பயணத்தின் பாதுகாப்பு குறித்து மீண்டும் கேள்விகளை எழுப்பியது. பெஷாவரில் இருந்து குவெட்டாவுக்கு ரயில் சென்று கொண்டிருந்தபோது குண்டுவெடிப்பு காரணமாக தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டது. இந்த வெடிப்பு மூன்று அடி அகலமான பள்ளத்தை உருவாக்கி, கிட்டத்தட்ட 6 அடி ரயில் பாதையை அழித்ததாக […]

இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் தாக்குதலில் ஈரானைச் சேர்ந்த 585 பேர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. மத்திய கிழக்கை மீண்டும் உலுக்கும் வகையில், இஸ்ரேல் – ஈரான் இடையிலான மோதல் தீவிரமடைந்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை (ஜூன் 13) தொடங்கிய இந்த தாக்குதல்கள், 6-வது நாளாக இன்று புதன்கிழமையிலும் தொடர்ந்து வருகிறது. இரு நாடுகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்துக்கு துணைநிற்காமல், தாக்குதல்களை பரஸ்பரமாக நடத்தி வருகின்றன. இந்தச் சூழலில், இஸ்ரேல் நடத்திய ஏவுகணைத் […]

ஜூலை 5-ம் தேதி மிகப்பெரிய பேரழிவு ஏற்படும் என்று புதிய பாபா வங்கா கணித்துள்ளார். தனது கனவுகள் மூலம் எதிர்காலத்தைப் பார்க்க முடியும் என்று கூறும் ஜப்பானிய பெண் ரியோ டாட்சுகி தனது “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தில், பல்வேறு பகீர் கணிப்புகளை செய்துள்ளார். அவரது பல கணிப்புகள் 100% துல்லியமாக நிரூபிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. அதனால்தான் இப்போது அதிகமான மக்கள் அவரது கூற்றுகளை உன்னிப்பாகக் கவனித்து […]

ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தக்கூடும் என்ற ட்ரம்பின் அச்சுறுத்தலுக்கு மத்தியில் போர் தொடங்கிவிட்டது என்று ஈரானின் உச்ச தலைவர் அறிவித்துள்ளார். ஈரான் – இஸ்ரேல் இடையே பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், போர் தொடங்கிவிட்டதாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். அவரின் பதிவில் “போர் தொடங்குகிறது. அலி தனது சுல்பிகருடன் கைபருக்குத் திரும்புகிறார்” என்று குறிப்பிட்டுள்ளார். […]

இன்றிலிருந்து 3 ஆண்டுகளுக்குப் பிறகு 2028–2029 காலகட்டத்தில் உலக அளவில் பசி முற்றிலும் ஒழிக்கப்படும் என்று பாபா வங்கா கணித்துள்ளார். வான்ஜெலியா பாண்டேவா டிமிட்ரோவா எனப்படும் பாபா வெங்கா தனது வாழ்நாளில் பல கணிப்புகளைச் செய்துள்ளார், 1911 ஆம் ஆண்டு பல்கேரியாவில் பிறந்த அவரது கணிப்புகளில் பல உண்மையாகவும் ஆகியுள்ளன. இந்த வழியில், அவர் 2028 ஆம் ஆண்டிற்கான ஒரு கணிப்பைச் செய்துள்ளார், அதில் இன்றிலிருந்து 900 நாட்களுக்குப் பிறகு […]