7 மெகா ஜவுளிப் பூங்காக்கள்.. 20 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்பு.. மத்திய அரசின் அசத்தல் திட்டம்..

’மேக் இன் இந்தியா’ திட்டத்தின் ஒருபகுதியாக, 7 மெகா ஜவுளிப் பூங்காக்களை அமைக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

பிரதமரின் மெகா ஒருங்கிணைந்த ஜவுளிப் பகுதிகள் மற்றும் ஆடைகள் ( PM MITRA) திட்டத்தின் கீழ் இந்த 7 ஜவுளி பூங்காக்கள் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.. பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.. அவரின் பதிவில் “ இந்த பூங்காக்கள் தமிழ்நாடு, தெலுங்கானா, கர்நாடகா, மகாராஷ்டிரா, குஜராத், மத்தியப் பிரதேசம் மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 7 மாநிலங்களில் அமைக்கப்படும்.. இந்த பூங்காக்கள் ஜவுளித் துறைக்கு அதிநவீன உள்கட்டமைப்பை வழங்கும், கோடிக்கணக்கான முதலீட்டை ஈர்ப்பதுடன், லட்சக்கணக்கான வேலைகளை உருவாக்கும்” என்று குறிப்பிட்டுள்ளார்..


இத்திட்டம் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் மாதம் அறிவிக்கப்பட்டது.. 2026-27-ம் ஆண்டுக்குள் பூங்காக்கள் அமைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டது.. 2023-24 பட்ஜெட்டில் முதல்கட்டமாக, ரூ.200 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.. இந்த திட்டத்திற்கான மொத்தச் செலவு ரூ.4,445 கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது..

இந்த பூங்காக்களில் சுமார் 20 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் வகையில், 70,000 கோடி ரூபாய் முதலீடு செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது என்று மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்தார். இதுகுறித்து பேசிய பியூஷ் கோயல் ” நாட்டில் ஜவுளித் தொழில் ஒழுங்கமைக்கப்படாமல் உள்ளது. அதிகப்படியான விரயம் மற்றும் தளவாடச் செலவுகள் நாட்டின் ஜவுளித் துறையின் போட்டித்தன்மையை பாதித்தன. ஆனால் பிரதமரின் தொலைநோக்குப் பார்வை, இந்தத் துறையின் பல பிரச்சனைகளைத் தீர்க்கும்.. இந்த திட்டத்தின் கீழ் சுற்றுச்சூழல் அனுமதிகளும் எளிதாக்கப்படும்..” என்று தெரிவித்தார்..

மத்திய ஜவுளித்துறை செயலர் ரச்சனா ஷா இதுகுறித்து பேசிய போது “ 13 மாநிலங்களில் இருந்து 18 முன்மொழிவுகளை பரிசீலித்து, வெளிப்படையான முறையில் பூங்காக்களுக்கான இடங்களை அமைச்சகம் தேர்வு செய்துள்ளது. மாநிலங்கள் மற்றும் தளங்களின் தகுதி வெளிப்படையான சவாலைப் பயன்படுத்தி மதிப்பீடு செய்யப்பட்டது. தற்போதுள்ள சுற்றுச்சூழல், ஜவுளி, தொழில் கொள்கை, உள்கட்டமைப்பு, பயன்பாட்டு சேவைகள் போன்ற பல்வேறு காரணிகளை கணக்கில் எடுத்துக் கொண்டது..” என்று தெரிவித்தார்..

இந்த திட்டம், மத்திய மற்றும் மாநில அரசுகள் முதலீட்டை அதிகரிக்கவும், வேலை வாய்ப்புகளை உருவாக்கவும், இந்தியாவை ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதிக்கான முக்கிய மையமாக மாற்றவும் உதவும்.. இந்த மெகா ஜவுளி பூங்காக்கள் மூலம், 20 லட்சம் வேலை வாய்ப்புகள் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒவ்வொரு பூங்காவிற்கும் மத்திய மற்றும் மாநில அரசுக்குச் சொந்தமான ஒரு SPV [சிறப்பு நோக்கத்திற்கான வாகனம்] அமைக்கப்படும், இது திட்டத்தை செயல்படுத்துவதை மேற்பார்வையிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

1newsnationuser1

Next Post

2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வுகள் இருக்கக்கூடாது... NCF முன்மொழிந்துள்ள புதிய திட்டம்.. 

Sat Apr 8 , 2023
2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வுகள் நடத்துவது முற்றிலும் பொருத்தமற்றது என்று தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பின் வரைவு தெரிவித்துள்ளது.. புதிய தேசியக் கல்விக் கொள்கையின் (NEP) அடிப்படையில் உருவாக்கப்பட்டு வரும் தேசிய பாடத்திட்டக் கட்டமைப்பானது (National Curriculum Framework -NCF)  வரைவு ஒன்றை முன்மொழிந்துள்ளது.. அதில் எல்.கே.ஜி முதல் 2-ம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுக்கு எழுத்து தேர்வு என்பது முற்றிலும் பொருத்தமற்ற மதிப்பீட்டு முறை என்று […]
தீவிரமடையும் கொரோனா..!! பள்ளி-கல்லூரிகள், திரையரங்குகளில் முகக்கவசம் கட்டாயம்..!! முதலமைச்சர் அதிரடி உத்தரவு..!!

You May Like