தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் தரத்தை மேம்படுத்த திட்ட முன்மொழிவுகள் விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் கடுமையாக்கியுள்ளது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களின் ஒட்டுமொத்த செலவுகளைக் குறைக்கவும், தாமதங்களைத் தவிர்க்கவும் மற்றும் திட்டங்களை செயல்படுத்தலின் தரங்களை மேம்படுத்தவும், ஒப்பந்ததாரரின் தகுதிகளுக்கான விதிமுறைகளை வலுப்படுத்தும்.
மேலும் திட்ட செயல்படுத்துதலில் இணக்கத்தை அமல்படுத்துவதையும், நிதி சமர்ப்பிப்புகளில் வெளிப்படைத் தன்மையை மேம்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்ட திட்ட முன்மொழிவு விதிமுறைகளை இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. அதன்படி. பல்வேறு பிரிவுகளில் தொழில்நுட்ப ரீதியாக திறமையான மற்றும் அனுபவமிக்க ஒப்பந்ததாரர்கள் மட்டுமே தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களை செயல்படுத்த தகுதி பெறுவதை உறுதி செய்ய முடியும்.
இந்நடவடிக்கைகள் சிறந்த உள்கட்டமைப்புத் தரம், உரிய நேரத்தில் திட்டங்களை நிறைவு செய்தல், வளங்களை முறையாக பயன்படுத்துதல் ஆகியவற்றுக்கு வகை செய்து தேசிய நெடுஞ்சாலைப் பணிகளில் மேலும் திறன்மிக்க வளர்ச்சியை அடையச் செய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.