மாணவர்களுக்கு மத்திய அரசு கொடுக்கும் ரூ.25,000 உதவித்தொகை…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

School Money 2025

பீடி மற்றும் திரைப்பட துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகை பெறுவதற்கு 31-ம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாள்.


மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகத்தின் கீழ் பீடி மற்றும் திரைப்படத் துறையைச் சேர்ந்த தொழிலாளர்களின் குழந்தைகளுக்கான கல்வி உதவித்தொகையை பெறுவதற்கு 31-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். 1-ம் வகுப்பு முதல் கல்லூரி, ஐடிஐ / டிப்ளமோ பயிலும் மாணவர்களுக்கு 1,000 ரூபாய் முதல் 25,000 ரூபாய் வரை கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மாணவர்கள் https://scholarships.gov.in/ என்ற இணையதள முகவரியில் ஒரு முறை பதிவாக விண்ணப்பிக்க வேண்டும். பின்னர், பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அவர்கள் பயிலும் கல்வி நிறுவனங்களில் சமர்ப்பிக்க வேண்டும். பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் https://scholarships.gov.in/ என்ற இணையதளத்தில் கல்வி நிறுவனத்தின் மூலமாக மாணவர்கள் விண்ணப்பங்களை சரிபார்த்து ஒப்புதல் வழங்க வேண்டும். கல்வி உதவித்தொகை பெற விண்ணப்பிக்கும் மாணவர்கள் தங்கள் பெயரில் வங்கி கணக்கு மற்றும் ஆதார் அட்டை வைத்திருக்க வேண்டும்.

பீடி தொழிலாளர்கள் 1,20,000 ரூபாய் மற்றும், திரைப்படத் தொழிலாளர்களுக்கு 96,000 ரூபாய்க்கான வருமான சான்றிதழையும் இணைக்க வேண்டும். எனவே புதிதாக விண்ணப்பிப்பவர்கள், புதுப்பிப்பவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளி மற்றும் கல்லூரிகள் தங்களது மாணவர்களின் விண்ணப்பங்களை இணையதளம் வாயிலாக சரிபார்ப்பதற்கான கடைசி தேதி நவம்பர் மாதம் 15-ம் தேதி ஆகும். மேலும் விவரங்கள் பெறுவதற்கும், கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விளக்கங்களுக்கு உங்கள் பகுதிக்கு அருகில் உள்ள பீடி தொழிலாளர் நலவாழ்வு நிதி மருந்தகங்களை அணுகவும் அல்லது நலத்துறை ஆணையர் (மத்திய அரசு) அலுவலகம், தொழிலாளர் நல அமைப்பு, தரைதளம், சிட்கோ கிளை அலுவலக கட்டடம், ஆலந்தூர் சாலை கிண்டி, சென்னை – 600032 என்ற அலுவலக முகவரியை அணுக வேண்டும்.

Vignesh

Next Post

நட்சத்திர ஓட்டலில் பெண்ணை ரூமுக்கு அழைத்த கும்பல்..!! குடிபோதையில் பாருக்குள் நடந்த கோஷ்டி மோதல்..!! நுங்கம்பாக்கத்தில் பரபரப்பு..!!

Sun Oct 26 , 2025
சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலின் பாரில் பெண் ஒருவரை அறைக்கு அழைத்த விவகாரத்தில் இரு குழுக்களிடையே ஏற்பட்ட மோதலால் பரபரப்பு ஏற்பட்டது. மாமல்லபுரத்தில் ரிசார்ட் வைத்திருக்கும் வின்ஸ்டன் பிரபு (37) மற்றும் அவரது தம்பி திவாகர் அரவிந்த் (35) உள்ளிட்ட 5 பேர் கொண்ட குழுவினர், ஹோட்டலில் நடந்த வளைகாப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் பாரில் மது அருந்திக் கொண்டிருந்தனர். அதே பாரில் கொளத்தூரைச் சேர்ந்த அரவிந்தன் […]
Party 2025

You May Like