இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு.. வானிலை மையம் தகவல்..

இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் “ கிழக்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக இன்று முதல் வரும் 10-ம் தேதி வரை தென் தமிழக மாவட்டங்கள், டெல்டா மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் 11-ம் தேதி தென் தமிழக மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான அல்லது மிதமான மழை பெய்யக்கூடும்.. வரும் 12-ம் தேதி தமிழ்நாடு, புதுச்சேரி காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும்..


சென்னை மற்றும் புறநகர் பகுதிகளை பொறுத்தவரை, அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்.. அதிகபட்ச வெப்பநிலை 32-33 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.. மீனவர்களுக்கான எந்த எச்சரிக்கையும் இல்லை..” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

1newsnationuser1

Next Post

"என் பேச்ச கேட்காம போயிட்டல்ல......."! வீம்பில் கூலி தொழிலாளி எடுத்த விபரீத முடிவு!

Wed Mar 8 , 2023
திருச்சி அருகே மனைவியுடன் ஏற்பட்ட தகராறில் கூலித் தொழிலாளி ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. திருச்சி அருகே உள்ள அரியமங்கலம் சீனிவாசன் நகர் 7வது தெருவை சார்ந்தவர் சோலையப்பன். 58 வயதான இவர் கூலி தொழிலாளியாக பணி செய்து வருகிறார். இவருக்கும் இவரது மாமனார் குடும்பத்திற்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவுவதாக தெரிகிறது. இந்நிலையில் நேற்று முன் தினம் இவரது சின்ன […]
IMG 20230308 WA0065

You May Like