சென்னை மக்கள் கவனத்திற்கு…! இன்று முதல் அடுத்த 5 நாட்களுக்கு மெட்ரோ ரயில் சேவையில் மாற்றம்…!

Chennai Metro 2025

தண்டவாள பராமரிப்புப் பணிகள் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் இன்று முதல் 24-ம் தேதி வரை 5 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட உள்ளது.


வருடாந்திர முன்னுரிமை பராமரிப்பு பணிகளின் ஒரு பகுதியாக, பச்சை வழித்தடத்திலும், நீல வழித்தடத்திலும் தண்டவாள பராமரிப்புப் பணிகளை சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மேற்கொள்ள உள்ளது. பாதுகாப்பு, நம்பகத்தன்மை மற்றும் சீரான ரயில் இயக்கத்தை உறுதிப்படுத்த இந்தப் பணி மிகவும் அவசியம்.

அதன்படி, பராமரிப்பு பணி இன்று முதல் 24-ம் தேதி வரை காலை 5 மணி முதல் 6.30 மணி வரை நடைபெற உள்ளது. இந்த நேரத்தில் வழக்கமான 7 நிமிட இடைவெளிக்கு பதிலாக 14 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும். காலை 6:30 மணிக்குப் பிறகு, மெட்ரோ ரயில் சேவைகள் வழக்கம்போல எவ்வித மாற்றமுமின்றி இயக்கப்படும். இந்த மாற்றங்கள் பச்சை வழித்தடம் மற்றும் நீல வழித்தடங்களில் பராமரிப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் பகுதிகளுக்கு மட்டுமே பொருந்தும்.

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மொபைல் செயலி மற்றும் அதிகாரப்பூர்வ சமூக வலைதளங்கள் மூலம் அவ்வப்போது தகவல்களைத் தெரிந்துகொள்ளுமாறு பயணிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேலும் உதவிக்கு, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் உதவி மையத்தை 1860-425-1515 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் அல்லது www.chennaimetrorail.org என்ற இணையதளத்தைப் பார்வையிடலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்த விமானம்!. 2 பேர் பலி!. அதிர்ச்சி வீடியோ!

Mon Oct 20 , 2025
ஹாங்காங் சர்வதேச விமான நிலையத்தில் திங்கள்கிழமை (அக்டோபர் 20) அதிகாலை எமிரேட்ஸ் போயிங் 747 சரக்கு விமானம் ஓடுபாதையில் இருந்து விலகி கடலில் விழுந்ததில் விமான நிலைய ஊழியர்கள் பலர் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். உள்ளூர் நேரப்படி அதிகாலை 4 மணியளவில் துபாயில் இருந்து விமானம் வந்த சிறிது நேரத்திலேயே, விபத்துக்குள்ளானது. ஒருவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாகவும், மற்றவர் பின்னர் மருத்துவமனையில் இறந்ததாகவும் அறிவிக்கப்பட்டது. என்ன நடந்தது? ஏபிசி செய்தியின்படி, […]
Hong Kong airport

You May Like