சத்தீஸ்கர் மாநிலத்தில் ஜாஸ்பூர் என்ற மலைவாழ் பகுதியில் கோர்வா எனப்படும் பழங்குடியின மக்கள் வசித்து வருகின்றனர்கள். இது காட்டுப்பகுதி என்பதால் வன உயிரினங்கள் மிகவும் உலாவி வரும். அதுமட்டுமின்றி பாம்பு அடிக்கடி அங்கே பலரையும் கடித்து வரும் சம்பவங்களும் நிகழ்ந்துள்ளன.
நேற்று அப்பகுதியில் வசித்து வரும் 15 வயது சிறுவனை பாம்பு ஒன்று தீட்டியது. அதனால், ஆத்திரமடைந்த சிறுவன் அந்த பாம்பை திருப்பி இருமுறை கடித்து பாம்பையே துண்டாக்கியுள்ளான்.
இதில் அந்த பாம்பு சம்பவ இடத்திலேயே இறந்துள்ளது அதிர்ச்சி செய்தியாக உள்ளது. அதனை தொடர்ந்து இவ்வாறு நடந்ததை பெற்றோர்களிடத்தில் அச்சிறுவன் தெரிவித்துள்ளான். அதனை தொடர்ந்து, அவனை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்துள்ள நிலையில், அந்த சிறுவன் நலமாக உள்ளார் என தெறிய வந்ததுள்ளது.
மேலும் அப்பகுதி ஜாஸ்பூர் மலைவாழ் மக்களிடம் பாம்பு கடித்தால் அந்த பாம்பை திருப்பி அடிக்க வேண்டும் என்ற நம்பிக்கை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.